Posts

Showing posts from 2023

பாண்டி முத்தரையன் சோழிக அரையன் | பாண்டி முத்தரையன் அரட்டவதி அரையன் | பாண்டிப்பெருந்தேவி

Image
சோழிக அரையன் என்கிற அகணிதன் குளம் வெட்டி தன் பெயரை வைத்துள்ளான் | இதே பகுதியில் பாண்டி முத்தரையர் அரட்டவதி அரையனின் தாயார் பாண்டிப்பெருந்தேவி, பாண்டி முத்தரையன் சோழிக அரையனின் நினைவாக சிவன் கோயில் ஒன்றும் ஏற்படுத்தியிருக்கிறார். பாண்டிப்பெருந்தேவி பாண்டியகுல பெண்ணாக இருக்கலாம்.

ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் | ஏக வீர முத்தரையன்

Image
ஆரையன் ஆயிரவனான இளஞ்சிங்க முத்தரையன் போரில் வீர மரணமடைந்தான், அவனுக்காக ஏக வீர முத்தரையன் நடுகல் எடுப்பித்தான்...

நல்லகுட்டி முத்திரியன் | பட்டாமணியம் தம்மணாமுத்திரியன்

Image
லால்குடி தாலுகா ராசாம்பாளையத்திலிருக்கும் நல்லகுட்டி முத்திரியன் மகன் பட்டாமணியம் தம்மணாமுத்திரியன் ராசாம்பாளையம் குடியிருப்பு பகுதியின் ஆலமரத்தடியில் தருமமாக ஒரு சாவடியும் தண்ணீர்ப்பந்தலும் ஏற்படுத்தி அதன் செலவுக்கு வருமானம் கிடைக்கும்படி கொடுக்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றியது இக்கல்வெட்டு. 

ஆரையன் ஆயிரவன் | இளஞ்சிங்க முத்தரையன்

Image
கொடுமங்கலத்திற்கு பகைவர் ஆநிரைகளை கவர வரும்போது ஆரையன் ஆயிரவன் எதிர்த்து போரிட்டான். அப்போது அவன் தந்தை சடையமரையன் தன்மகன் ஆரையன் ஆயிரவனைக் காப்பாற்ற முன்வந்து போரிட்டு மரணமடைந்தான். மரணமடைந்த தன் தந்தைக்கு மகன் ஆரையன் ஆயிரவன் நடுகல் எடுப்பித்தான் | இந்த ஆரையன் ஆயிரவன் இளஞ்சிங்க முத்தரையன் ஆவான் |

பேரயன் முத்தரையன் காரி | முத்தரையன் தும்பன்

Image
ஏதோ ஒரு போரில், சாத்தயன் என்பவருடன் பேரயன் முத்தரையன் காரி என்பவரும், திருவூறல் என்பவருடன் முத்தரையன் தும்பன் என்பவரும் இறந்துபட்டிருக்கிறார்கள்

தமிழப்பேர் அதியரைசன் (வலையர் அரசன்)

Image
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி சிவன்கோயில் ஊரணிக்குள் கிடக்கும் பலகைக்கல் 8ம் நூற்றாண்டு கல்வெட்டு | தமிழப்பேர் அதியரையனுக்கு (வலையர் அரசன்) அவன் தாயார் நட்டுவித்த கல் என்ற செய்தியை தருகிறது. இவர் போரில் இறந்துபட்டிருக்கலாம்.

கார்மண்டல சதகம் பாண்டிய நாட்டு முத்தரையர்

Image
இதுவரை வெளிவராத புதிய சதக (கார்மண்டல சதகம்) பாடல். புதிய பல வரலாற்று செய்திகளோடு பாண்டிய நாட்டை ஆண்ட முத்தரையர் வரலாறு 🐬 கீழ்க்காணும் படச்செய்தி 👇 || இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்ததாகவும் இசைநூல்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார். இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தால் உணரலாகும்; பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப் படும். குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தாமலைச் - சாசனத்தில் இவர்கள் மதுரையரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தை சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவியிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிநாட்டை வௌவி அரசாண்டவர் இம் முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலி யுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக் கூலிப்படை வீரரைக

வங்காரமுத்தரையர் மகன் கொல்லத்தரையர்

Image
பேரவூர் ஊரவர் கோயிலுக்கு அமுது படைக்கவும் ஒரு நொந்தா விளக்கு ஏற்றவும் இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்டது. அதேபோல அரசன் தென்னவராயர் மற்றும் வங்காரமுத்தரையரின் மகன் கொல்லத்தரையர் ஆகிய இருவரும் சேர்ந்து நான்கு நந்தா விளக்குகள் எரிக்க இறையிலியாக நிலம் வழங்கினர். அந் நிலங்களை இக்கோயில் முப்பதுவட்டத்துக் காணி உடைய சிவப் பிராமணர்கள் பெற்றுக்கொண்டு விளக்கு எரிக்கவும் நாள்தோறும் திருவமுது படைக்கவும் ஒப்புக்கொண்டமை.

குடமுத்தரையன்

Image
தஞ்சாவூர் மாவட்டம், பொன்விளைந்தான்பட்டி கல்வெட்டு | ___ குடமுத்தரையன் மணவாட்டி ஊர் குளத்திற்க்கும் பள்ளிக்கும் கொடையளித்தமை பற்றி சொல்கிறது.

பரம்பரையான அரசகுலத்தவர்கள் முத்தரையர்கள்

Image
பரம்பரையான அரசகுலத்தவர்கள் முத்தரையர்கள், முத்தரையர்கள் போர்க்குடி கிடையாது என்பதை நம்மவர்கள் உணர வேண்டும், ஆட்சி மாட்றங்களால் வேளாண் தொழில் செய்யும் நிலைக்கு வந்திருக்கிறோமே தவிர நம்முடைய குலத்தொழில் நாடாள்வது தான், மீண்டும் நாடாள்வது ஒன்றே நமது இலக்காக கொண்டு பயணிப்போம்.

பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள்

Image
நெய்தல் நிலத்திற்கு சற்றும் தொடர்பில்லாத பாலை நிலத்தவரும் மருத நிலத்தவரும் நாங்கள் தான் பாண்டியர் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் போது, பாண்டியனே மீனவன், மீனவனே தென்னவன், அவனே பரதவ, செம்படவ, வலைய பாண்டியர்கள் என உரக்கச் சொல்வோம். வரும் தலைமுறையேனும் உட்சாதி பிரிவுகளை உடைத்தெறிவோம், உரிமையுடன் வருங்காலம் நாடாள்வோம்.

விடேல் விடுகு முத்தரையர்

Image
விடேல்விடுகு குதிரைச்சேரியில் உள்ள கற்பூரம் முதல் செருப்பு வரை உள்ள பொருள்களை வியாபாரம் செய்பவர்களுக்கு அனுத்தரப் பல்லவரையன் கேட்டுக்கொண்டதற் கிணங்க அரசன் வரிவிலக்குச் செய்து கொடுத்த செய்தி மூன்றாம் நந்திவர்மனின் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் 18வது ஆட்சியாண்டு கல்வெட்டு  சொல்கிறது. இதில் சொல்லப்படும் விடேல்விடுகு குதிரைச்சேரி, விடேல்விடுகு முத்தரையர் பெயரில் உருவான ஊராகும்.

நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் | பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன்

Image
நாங்கூர் (புதுக்குடி) கல்வெட்டு | தன் மைத்துனனான நாராயணன் வைகுந்தனான அனந்த கோப முத்தரையன் நலம்பெற வேண்டி பாலைச் சேந்தன் தென்கரை நாட்டு முத்தரையன் 240 வெள்ளாடுகளை கோவிலுக்கு முதலீடாக கொடுத்த செய்தியை தருகிறது. #மாநில_தகவல்_தொழில்நுட்ப_பிரிவு #தமிழ்நாடு_முத்தரையர்_முன்னேற்ற_சங்கம்

விசையாலய முத்தரையன்

Image
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் பூதலூரில் விசயாலய சோழ முத்தரையர் எழுந்தருளவித்த குலோத்துங்க சோழ ஈஸ்வரமுடையார் கோயில்...

ஆதித்ததன் உலகனான விசையாலய முத்தரையன்

Image
திருநெடுங்களம் சோமாஸ்கந்தர் கோயில் திருமுன் உள்ள மண்டபத்தை அரையன் மகன் ஆதித்தன் உலகனான விசயாலய முத்தரையன் எடுப்பித்த செய்தி கூறும் கல்வெட்டு...

அமுத முத்தரையன்

Image
சென்னை ஆதம்பாக்கம் நந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு | ஆலந்தூர் மகாதேவர்க்கு மூலனாகிய அமுதமுத்தரையன் விளக்கு எரிப்பதற்க்காக தொண்ணூறு ஆடுகளை கொடுத்து நெய் அளிக்க ஏற்பாடு செய்ததையும் குறிப்பிடுகிறது.

நார்த்தாமலை கல்வெட்டு

Image
நார்த்தாமலை கல்வெட்டு / திருச்சிராப்பள்ளி முத்துராஜாமகாஜன தண்ணீர்பந்தல் செ.தம்புராண்முத்துராஜா வரகநேரி பிள்ளையார்கோயில் தெரு என்பவரால் 1909ம் ஆண்டு தொடங்கப்பட்டு முப்பதாவது ஆண்டில் இந்த கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

பெரும்பாண முத்தரைசர்

Image
புருசவர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் பெரும்பாண முத்தரைசர் என்பவர் கங்க நாட்டை ஆண்டுவர, பாகற்றூர் என்ற ஊரில் கள்வர்கள் ஆநிரைகளை கவர்ந்தனர். நொச்சி சாத்தன் என்பவர் ஆநிரைகளை மீட்டபோது இறந்துபட்டான், அந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் கல்வெட்டு.

தென்னவன் இளங்கோ முத்தரையர்

Image
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சோற்றுத்துறை மகாதேவர்க்கு உத்தமதானி என்னும் பெயர் கொண்ட திருவிளக்கு ஒன்றினை இரவும் பகலும் எரிப்பதற்க்காக -தென்னவன் இளங்கோ முத்தரையர்- இருபத்தைந்து கழஞ்சு பொன் கொடுத்ததை தெரிவிக்கும் கல்வெட்டு.

சாத்தன் மாறன் முத்தரையர்

Image
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், மதியநல்லூர் பெரியகுளத்து மேலமடைத்தூண் முத்தரையர் மன்னன் கல்வெட்டு | சாத்தன் மாறன் முத்தரையர் குமிழி அமைத்ததை சொல்கிறது.

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.முத்தரையர் மன்னர்களில் தன்னாட்சி புரிந்த பெரும் வேந்தன், தென்னவன் இளங்கோ முத்தரையர், இவர் எடுப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பிரகதம்பாள் உடனுறை உத்தமநாத சுவாமி சிவன் கோயில் கல்வெட்டுகள். 2.முதலாம் பராந்த சோழனின் மகன் அரிகுல கேசரி முத்தரையர் கல்வெட்டு | மகள் அனுபமா கொடும்பாளூர் முத்தரையரை மணந்திருக்கிறார். 3.குவாவன் சாத்தன் என்கிற விடேல் விடுகு முத்தரையர் தன் பெயரிலேயே, விடேல் விடுகு மங்கலம் என்கிற ஊரையும், விடேல் விடுகுக் கல் என்கிற பொன்னை அளக்கும் கல்லையும் நிறுவியிருக்கிறார் | இதேபோல முத்தரையர்களின் நில அளவை முறையே முந்திரிகை என வழங்கப்பட்டுள்ளது.

வேட்டை எங்கள் மரபுரிமை

Image
பழந்தமிழர் மரபு என்பதே வேட்டையில் இருந்து தான் தொடங்குகிறது, அதை தொன்றுதொட்டு பின்பற்றிவரும் வேட்டுவ வலையர்கள் தமிழகம் முழுக்கவே பரவி வாழும் இனக்குழு ஆவார்கள்... என்னுடைய சிறுவயதில் என் தந்தையரோடு ஒருசில முறை வேட்டையாட செல்வதுண்டு, பெரும்பாலும் கூட்டிச்செல்ல மாட்டார். இவைகளை அடுத்த தலைமுறைக்கு கடத்த கூடாது என்பது அவரது என்னம்... வேட்டையாட பின்னாலில் இளைஞர்களோடு போவதுண்டு, அப்போதெல்லாம் நம்முடைய வேட்டை நாய்கள் குறுக்கும் நெடுக்கும், முன்னும் பின்னுமாக ஓடும், சிலநேரம் காலுக்கடியில் ஓடி நம்மை சாய்த்துவிடவும் கூடும் அப்படி ஒரு நேரற்ற தன்மையுடையது நாய்கள்... இதை முத்தரையப் பாவலர் சேக்கிழார் பெருமான் எத்தனை உன்னிப்பாக கவனித்து அழகுற ஆய்ந்து பாடல் புனைந்திருக்கிறார் என்று என்னும் போது தமிழாய்ந்த சான்றோர் கண்ணில் நீர் ததும்புதல் இயல்பேயாகும்... மண்ணையும் மரபையும் காப்பதும், வேட்டையாடி வீரம் சொறிவதும் மலையரான வேட்டுவர் மரபு என்பதை தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் சேக்கிழார் பெருமான், மேலும் வேட்டுவர்களை மறவர் என்றும் மள்ளர் என்றும் குறிப்பிடுகிறார். அதாவது மறவர் என்பதும் மள்ளர் என

சேடப்பட்டி செப்பேடு

Image
மதுரை மாவட்டம் சேடப்பட்டி  மடத்தில் கண்டறியப்பட்ட  அம்பலக்காரர் செப்பேடு...

வலையர் குல சேர்வைக்காரர்கள்

Image
| வலையர் குல சேர்வைக்காரகள் | வருடம் 1831 வெளியான Missionary Register எனும் ஆங்கிலேயர் புத்தகத்தில்  .. "வலையர்கள் துப்பாக்கி சுடுவதில் சிறந்தவர்கள். போர் காலத்தில் இவர்கள் பாளையக்காரர்களின் நம்பிக்கைரிய வீரர்களாக இருந்தார்கள். இவர்களில் பலர் சேர்வைக்காரர் பட்டம் உடையவர்கள், அதாவது 100 இல் இருந்து 50 நபர்களை வழி நடத்தும் ஒரு தலைவன் தான் சேர்வைக்காரன் " என்று குறிப்பிட்டு உள்ளது குறிப்பு: சேர்வைக்காரர் குல பட்டம் வலையர்க்கு 1831 காலம் மற்றும் முந்திய காலத்திலும் இருந்தது தெரிய வருகிறது. மேலும் சோழ மண்டலத்தில் வலையர்கள் தங்களை சேர்வை சாதி என்றே குறிப்பிட்டு உள்ளார்கள். நன்றி நவீன்குமார்பிள்ளை அம்பலக்காரர்

கள்வர் கள்வன்

Image
கள்வர் என்ற சொல்லாடல் சங்க இலக்கியப் பாக்களிலேயே பல இடங்களில் பதியப்பட்டுள்ளதை நாம் அறிவோம், சங்க இலக்கியங்கள் அக்காலத்திய வேந்தர்களைக் குறிக்குமிடத்து சிறப்புடன் இந்த சொல்லாட்சியைக் கையாண்டுள்ளன ! மேலும் இதன் தொடர்ச்சியாகத்தான் பிற்கால பாண்டிய, சோழ வேந்தர்களும் கூட தம்மை " கள்ள வேந்தன்" , "கள்ளப் பெருமான்" , " கள்வன் " என்றெல்லாம் பலவாராக தத்தமது கல்வெட்டுகளில் பதிந்து கொண்டுள்ளனர் என்பதும் நமக்கு சொல்லாமலேயே விளங்கும் ! இவ்வாறாக கள்வர் என்ற வார்த்தையை தமிழ் இலக்கியங்களும், கல்வெட்டுகளும் உயரிய பொருளில் கையாண்டுள்ளன...   ஆனால் 'வார்த்தைகளின் பொருளை ' அந்தந்தக் காலகட்ட அரசியல் நிலையோடு ஒப்புமைப்படுத்தி முறையான ஆய்வியல் அணுகுமுறையைக் கையாளாமல்  சிலர் பழங்காலத்திய கள்வரை இந்நாளைய 'கள்ளர்' சாதியினரோடு தொடர்புபடுத்தி எழுதி வருகின்றனர். அந்த வகையில் சோழ, பாண்டிய மன்னர்களைப் போலவே " கள்வர் கள்வன்" என்ற பெயரால் செந்தலைக் கல்வெட்டுகளில் குறிக்கப்பெற்றுள்ள முத்தரையர் மரபுவழி மன்னரான "சுவரன் மாறனாகிய இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்&qu

பரகேசரி முத்தரையர்

Image
கோவில் நித்யதீபம் ஏற்ற பசுமாடுகளை பரிசாக தந்த முத்தரையர்... #இராஜேந்திர_சோழன் ஆட்சியில்  மலைதாங்கி கம்பன் உடையான் என்கிற #பரகேசரி_முத்தரையர் கோவில்  நித்திய தீபம் ஏற்றியதற்காக 32 பசுக்களை பரிசாக அளித்தார் இந்த மாடுகளை பையூர்  இளங்கோட்டத்து உட்பிரிவான #வெண்கலநாட்டு {நாட்டில் உள்ள} #சத்யாசிரையகுலகாலபுரம் என்ற வெண்கலத்தூரை சேர்ந்த மேய்ப்பன் சேரியின் பராமரிப்பில் மாடுகள் ஒப்படைக்கப்பட்ட செய்தியை சொல்லும் கல்வெட்டு.

பராந்தக சோழ முத்தரையர் (ராஜ ராஜ சோழனின் தந்தை)

Image
#இராஜராஜ_சோழன் தந்தை தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்தியுள்ள மேலும் ஓர் கல்வெட்டு🥰 #சிதம்பரம் தாலுக்காவில் உள்ள #காட்டுமன்னார்கோவில் #அனந்தீஸ்வரர் கோவில் {ANANTISVARA TEMPLE} வடக்கு சுவற்றில் உள்ள கல்வெட்டு செய்தி... #இராஜராஜ_சோழன் தந்தை இரண்டாம் #பராந்தக_முத்தரையர் அரசியார் {இராஜராஜ சோழன் தாய்} பஞ்சவன் மாதேவியார் 12 1/2 கழஞ்சு தங்கம் கொடையாக கொடுத்தார் என்ற கல்வெட்டு செய்தியை தாங்கி நிற்கிறது... இதுவரை காளபிடாரி கோவிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு செய்தியில் மட்டுமே இராஜராஜ சோழனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்திய செய்தியை பார்த்து இருப்பீர்கள்... அதன் தொடர்ச்சியாக அரசியார் பஞ்சவன் மாதேவியார் கணவர் என்று சொல்லும் கல்வெட்டிலும் தன்னை முத்தரையர் என்று அடையாளப் படுத்தியுள்ள செய்தி மேலும் முத்தரையர் சோழர் இருவரும் ஒருவரே என்பதும் இராஜராஜ சோழன் உரிமை கொள்ளும் ஒரே சமூகம் முத்தரையர் மட்டுமே என்பது உறுதியாகிறது...

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.முத்தரையன் கோட்டை, கன்மியூர் கோட்டை முதலிய ஊரவர்கள் திருவையாற்றேம்பலான திருஞானசம்பந்த நல்லூர் எனும் ஊரை கைக்கோளார் ஒருவருக்கு விற்றுக்கொடுத்த செய்தி அடங்கிய கல்வெட்டு. 2.இக்கல்வெட்டு சாழநாட்டுத் திருப்பாலையூர் சிவன்கோயில் இறைவனுக்கு பருத்திக்குடி நாட்டு மேன்முக்குளத்து கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பவர் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக இருபத்தைந்து பசுக்களை தானமாகத் தந்ததைக் தெரிவிக்கிறது. 3.தென்னிலங்கை வளஞ்சியர் (வலையர்) என்னும் வணிகக் குழுவினனான செகல் சேவுகத் தேவன் கல்வெட்டு 4.கரிகால சோழ குழுவினராகிய சோழ முத்தரையர் | திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டி பிச்சன் என்பவரிடம் இன்றும் உள்ள செப்பேடு. 5.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் திருமறைநாயனார்க்கு, பனங்காட்டாங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்ட செய்தி. 6.கோயிலுக்கு நிலதானம் அளித்த பிற்கால பாண்டியர் கல்வெட்டில் காணப்படும் முத்தரையர் பெயர்களும் ஊரும் | தரியமானான வடமுத்தரையன், நாசகனாழ்வானான சாயப்படை முத்தரையன்