Posts

Showing posts from July, 2020

ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்

Image
ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்  ____________________________________________ வரலாற்றை அறிய செப்புப்பட்டயங்கள் மிகவும் உதவியாக உள்ளன இதேபோல கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்றை நமக்கு தெரிவிக்கின்றன புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தகைய பல செப்பேடுகளும் மேலும் பகுதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முத்தரையர் வரலாறு கூறும் செப்பேடுகள் பல உள்ளன அவை முத்தரையரைப் பற்றிக் கூறும் செய்திகளைக் காண்போம் 1.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அம்பலகாரர் திரு.மயிலப்பன் முத்தரையர் அவர்களிடம் கீழ்க்காண்ட ஒன்பது செப்பு ஏடுகள் உள்ளன. அவைகளில் சாலியவாகன சகாப்தம் 1400க்கு கிபி 1478க்கு மேல் செல்லாயி நின்ற நந்தன வருடம் வைகாசி மாதம் 9ஆம் தேதி வழங்கப்பட்ட செப்புப் பட்டயங்களில், ஆலவள நாட்டிக்கு வந்தவர்கள் பேய் வெட்டி மயிலாடி ஆவான் முத்திரியர், அமரன் முத்திரியர், ஆலமங்காட்டார் சொரிய முத்திரியர் ஆக நாலு வகை முத்திரியர் பற்றிக் கூறுகிறது. 2.இவரிடமே உள்ள சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லா நின்ற விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி குறிப்பிடும் செப்புப் பட்டயத்தில், பேய் வெட்டி மய

சமயம் வளர்த்த முத்தரையர் சான்றோர்கள்

Image
சமயம் வளர்த்த சான்றோர்கள் ____________________________________ 1.திருமங்கை ஆழ்வார்; ----------------------------------------------- திருமங்கை ஆழ்வாரின் தந்தை பெயர் ஆலிநாடன். தாயார் வல்லித்திரு என்பதாகும். இவரின் இயற்பெயர் நீலன் என்று பெற்றோர் பெயரிட்டனர். இவர் காவிரி வளநாட்டில் திருவாலி நாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்கி பல கலைகளையும் வைக்கப்பட்டார். இவர் இளமையிலேயே போர் கலையையும் கற்றுத் தேர்ந்தார். இவர் போர்த்திறத்தையும் உடல் வலிமையையும் வனப்பையும் வளர்த்துக் கொண்டிருந்தார், அப்போது நீலன் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையர் மன்னரிடம் படைத்தளபதியானர். சோழர்களை எதிர்த்த அரசர்களை எல்லாம் நீலன் வெற்றி கொண்டார் வெற்றிக்களிப்பில் தனது சேனாதிபதியை ஆலிநாட்டிற்கு அரசனாக்கினார். இந்த நாட்டிற்கு திருமங்கை என்னும் ஊர் தலைநகராக இருந்தது. நீலன் பகைவர்களுக்கு காலன் போல் விளங்கியதன் காரணமாக பரகாலன் என்ற சிறப்பு பட்டத்தையும் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையன் மன்னர் அளித்தார். இதனால் நீலன் என்பவரை திருமங்கை மன்னர் என்றே அனைவரும

முத்தரையர் கலைக்கோயில்கள்

Image
முத்தரையர் கலைக்கோயில்கள் ______________________________ 1.திருமெய்யம் குகைக்கோயில்; -------------------------------------------- புதுக்கோட்டை காரைக்குடி பெருவழியில் திருமயம் என்ற திருமயம் ஊர் சுமார் 22வது கிலோ மீட்டரில் உள்ளது. இங்கு உள்ள மறையும், இதன்மீது பிற்காலத்தில் கோட்டையும் பிரபலமானது. மலை உச்சியில் வைக்கப்பட்டுள்ள பீரங்கி மற்றும் சுணை பார்க்க வியப்பாக இருக்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் இப்பகுதியில் முத்தரையர் பிரிவுகள் அம்பலகாரர்கள் மிகுந்து வாழ்கின்றனர். கிபி 6ம் நூற்றாண்டில் முத்தரையர்கள், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் அரசாண்டனர். அதில் குறிப்பாக திருமயம் கோவிலை மையமாக வைத்தும் ஆட்சி புரிந்துள்ளனர், முத்தரையர்கள் கற்றளி கோயில்களையும் குகைக் கோயில்களையும் அமைத்துள்ளனர். அழியாத கோயில்களைக் கட்டியும் கட்டிடக்கலையில் *முத்தரையர் பாணி* என்ற தனித்துவத்தையும் வளர்த்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் எல்லாம் மலைகளும் குன்றுகளும் காணப்பட்டது அந்தந்த இடங்களில் குடைவரைகளை அமைத்து அழியாப் புகழுடன் விளங்கியுள்ள

கலை வளர்த்த முத்தரையர் காவலர்கள்

Image
கலை வளர்த்த முத்தரையர் காவலர்கள்: _____________________________ 1.பெரும்பிடுகு பெருந்தேவி; ---------------------------------- இவரைப் பற்றி முன்பே கண்டோம் இவள் தனது மரபினர் குடைவித்த திருமயத்தில் சத்தியகிரி நாதப் பெருமாள் கோவிலை புதுப்பித்து கட்டினார். இவள் விடேல்விடுகு விழுப்பேரதியரையன் என்னும் சாத்தன் மாறனின் தாயார் ஆவார். முத்தரையர்களால் அமைக்கப்பட்டதும் காலத்தால் முற்பட்டதுமான குகைக்கோயிலாக திருமயம் விஷ்ணு குகைக் கோயில் விளங்குகிறது. 2.மகதராயர் செய்வித்த கல்மண்டபம்; -------------------------------------- புதுகை மாவட்டம் வல்லக்த்திராகோட்டை (வல்லத்தரையர் கோட்டை) ஊருக்குத் தெற்கே ஆற்றின் வடகரையில் திருவிடை நேரி என்றும் பெருந்திருவாட்டி நல்லூர் என்றும் பெயர் பெற்று இன்று திருவிடையார்பட்டி  என்ற பெயரில் வழங்கும் ஊரில் ஸ்ரீ மூலநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் திரு மண்டபத்தை எல்லாம் தலையாரான இராகுத்த மிண்டர் விசையாலய முத்தரையர் திருமேனிக்கு நன்றாக பெருங் கிளையாரான மகதராயர் செய்வித்தார் என கல்வெட்டு தெரிவிக்கின்றது. 3.தென்னவன் இளங்கோ முத்தரையன்; -------------------------

கொடையளித்த முத்தரையர் கோமான்கள்

Image
கொடையளித்த கோமான்கள் ____________________________ 1.முத்தரையர் மகளார் வரகுணனாட்டி --------------------------------------------- புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூரை தலைநகராக கொண்டு சங்க காலம் முதல் 9ம் நூற்றாண்டு வரை, ஆண்ட வேளிர்குல மரபில், வந்த இருக்குவேள் என்பவரின் பட்டத்து ராணி வரகுணனாட்டி, இவர் முத்தரையர் மகளார் என கல்வெட்டு சுட்டுகின்றது. இவள் குடுமியான்மலை பெருமானுக்கு விடிவிளக்கு வைக்க துளைப் பொன் ஏழு கழஞ்சு கொடை அளித்துள்ளார்... இதன் காலம் கி.பி.970-985 எனக் கருதப்படுகிறது. பு.க.எண்.45,155... 2.பெரும்பிடுகு முத்தரையர் மனைவி அரசி நங்கையார்... ------------------------------------------ இந்த அரசி குடுமியாமலை மேலைக் கோயிலுக்கு எப்போதும் விளக்கு எரிய இரு கழஞ்சு பொன் கொடை கொடுத்துள்ளார். கல்வெட்டில் காணப்படும் பெரும்பிடுகு முத்தரையன் செந்தலைக் கல்வெட்டின்படி சுவறன் மாறன் என்ற புகழ் பெற்றவன். புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டையில் இவனது உருவம் பொறித்த நடு கல்லில் "ஸ்ரீ சத்ரு கேஸரி" "அபிமான தீரன்" "ஸ்ரீ கள்வர் கள்வன்" வாள் வரி வேங்கை க

முத்தரையர் தலைவர்கள்

Image
முத்தரையர் தலைவர்கள்: ________________________ 1.அனபாய முத்தரையர் -------------------------------------- சோழ நாட்டை ஆண்ட 3ஆம் ராஜராஜனின் 4 வட்டம், திருநெடுங்களம் கோவிலில் அனபாய முத்தரையர் பற்றிய செய் ஆட்சியாண்டில் கி.பி. 1219-20) காலத்தில், திருச்சி மாவட்டம் இலாது, உள்ளது. இவரின் தந்தை விசையாலய முத்தரையன் ஆவார். அடைய முத்தரையாக்கு. அடியார்கள் இடர்களைவான், விளம்பக்குடையான் தில்லை திருநட்டப் பெருமாள் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு. இவன் 3ஆம் இராஜராஜனின் லால்குடிப்பகுதி ஆட்சியாளனை இருந்தவன். இவனுக்குக் கோவில் சார்பாக நிலம் விற்கப்பட்டுள்ள செய்தி வெட்டுத் தொகுதி 26ல் க.எண் 729லும் விளக்குகிறது. இவன் தந்தை விசையாலய முத்தரையன் நினைவாக லிங்கத்தைக் கோவிலில் நிறுவ எண்ணினான். அது சமயம் உறையூர்க்கு வருகை தந்த சோழன் திரிபுகள் தேவர்டம் அனுமதியும் பெற்றான். இவன் தந்தையைப் போற்றும் வகையில், உலக நாதீஸ்வரர் முடையார் என்ற பெயரில் லிங்கத்தை நிறுவினான். இத் திருப்பணிக்காகத் தியாகவல்லி சருப்பேதி மங்கலத்தின் சபையோரிடமும், நிலக் கொடையளித்துள்ளான். இந்த நிலத்திலிருந்து ஒரு வேலிக்கு