Posts

Showing posts from 2020

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

Image
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7,21,38,958 ஆகும். தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களாவர். தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின முஸ்லீம்களில் சுமார் 95 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும், சிறுபான்மையின கிறித்தவர்களில் சுமார் 80 விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர். பிற்படுத்தப்பட்டேர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்புகளைச் சார்ந்தவர்கள் சமூக, பொருளாதார மற்றும் கல்வி ஆகிய அனைத்துத் துறைகளிலும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களுக்கு இணையாக முன்னேற்றம் அடையும் பொருட்டு இத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீடானது கல்வி மற்றும் மாநில அரசுத்துறையில் வேலைவாய்ப்பு பெற்று பொர

DNT என்றால் என்ன..??

Image
DNT என்றால் என்ன..?? DNT தேவை ஏன்..?? சலுகைக்காகவா DNT..?? உரிமைக்காகவா DNT..?? 1.சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்திவருவது எதற்காக? சமூகநீதி பேசுகின்ற தமிழகத்தில் சீர்மரபினர் மக்களுக்கு மட்டும் தொடர்ந்து அநீதியே இழைக்கப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு அன்னிய அரசு வழங்கிய உரிமைகளும் சலுகைகளும் கூட பறிக்கப்பட்டு விட்டன. எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு 10% தனி இடஒதுக்கீடு கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தீவிரமான போரட்டங்களை நடத்தி வருகிறது  2, எந்தெந்த சாதி சீர்மரபினர் வகுப்பில் வருகின்றனர்? தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சாதியினர் உள்ளனர். அதில் பிரமலைக்கள்ளர், கூத்தப்பர் கள்ளர், பெரியசூரி கள்ளர், கந்தர்வக்கோட்டை கள்ளர் என்ற நான்கு(4) கள்ளர்களும், மறவர், ஆப்பநாடு கொண்டயன் கோட்டை மறவர், செம்ப நாட்டு மறவர், மறவர் என்ற மூன்று(3) மறவர்களும், வலையர், செட்டிநாடு வலையர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், சேர்வை, அம்பலகாரர், அம்பலக்காரர், வேட்டைக்காரன் என்ற எட்டு(8) முத்தரையர்களும், போயர

சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் வலையர், அம்பலக்காரர்

Image
சீர்மரபினர் பட்டியலில் உள்ள 68 சாதிகளில் முத்தரையர் சமூகத்தின் இரண்டு பிரதான பிரிவுகளான "வலையர்" மற்றும் "அம்பலக்காரர்" சாதிகளும் உள்ளடங்கியுள்ளது. இந்த பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு இதுவரை இந்திய மற்றும் தமிழக அரசுகள் செய்திருப்பது என்ன ? இன்னும் செய்ய வேண்டியது என்ன ?  1. வலையர்களுக்கு தனி புனரமைப்பு வாரியம். 2. அம்பலக்காரர்களுக்கு தனி நல வாரியம். 3. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனிதனியே 10% தனி இடஒதுக்கீடு. 4. அம்பலக்காரர் / வலையர் மக்கள்தொகை தனி கணக்கெடுப்பு. 5. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் 10 லட்ச ரூபாய் வரை பொருப்பற்ற‌ கடனுதவி 6. அம்பலக்காரர் / வலையர்களுக்கு தனி நல திட்டங்கள் 7. கல்வி நிலையங்களில் தனி இடஒதுக்கீடு. 8. மருத்துவ படிப்பில் தனி இடஒதுக்கீடு. 9. வீடு, நிலமற்ற வலையர்/ அம்பலக்காரர் பிரிவினருக்கு உடனடி வீட்டுவசதி திட்டங்கள், மற்றும் நிலம் வழங்கும் திட்டங்கள் 10. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு கீழாக சீர்மரபினர் என்பதனை மாற்றி சீர் மரபினருக்கென்று தனித் அரசு துறை. 11. வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை / அரசு வேலைகளில் தனி இட ஒதுக்கீடு / ம

வலையர் வழங்கும் விருந்து

Image
பெரும்பாணாற்றுப்படை ------------------------------------------------- வலைஞர் வழங்கும் விருந்து; பாலை, முல்லை, குறிஞ்சி, மருதம் ஆகிய நிலங்களை, முறையே கடந்து செல்லும் பெரும்பாணன், இறுதியாகக் கடக்க வேண்டிய நெய்தல் நில இயல்பையும், அந்நிலம் வாழ் வலைஞர் வாழ்க்கை முறைகளையும் விளக்கத் தொடங்கினார். வலைஞர் குடில்கள், மெல்லிய மூங்கில்களை வரிசையாகப் பரப்பி, வஞ்சி அல்லது காஞ்சி மரத்தின் வெள்ளிய கொம்புகளை இடை இடையே இட்டுத், தாழை நார்கொண்டு கட்டி, தருப்பைப் புல் வேய்ந்து, பெய்யும் மழையால் நனையாவாறு சுவர்களைக் காத்தற் பொருட்டு, குறிய இறப்பை, நாற்புறங்களிலும் அமையக் கட்டப் பட்டிருக்கும்.. ஓடும் நீரில் எதிர்த்து ஏறும் மீன்களை வாரிக் கொட்டும் பறிகள், மனை முற்றத்தில் காணப்படும். உணவிற்குத் துணைக்கறியாகப் பயன்ப்டவல்ல அவரை, பீர்க்கு, புடலை, பாகல் போலும் காய்களைத் தரும் கொடிகளை வளர்த்து, அவை பெருகப் படர்ந்து பயன் தரற் பொருட்டு, வளைந்து கவிர்த்த புன்னைக் கிளைகளை நட்டுப், போடப் பட்டிருக்கும் பந்தலும் ஆங்கு காணப்படும்... மேலே பந்தல் நிழல் செய்ய, கீழே, மெத்தென்ற மணல் பரந்த அந்த இடம், இருந்து இளைப்பாற

வலையர் - பெரும்பாணாற்றுப்படை

Image
பத்துப் பாட்டு நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையில் பாட்டுடைத் தலைவனாக தொண்டைமான் இளந்திரையனைக் கொண்டாடப் படுகிறது. இந்நூலில் உப்பு வாணிகம் செய்பவர்களின் பயண வழியில் அவர்கள் காணும் ஐந்து நில மக்களின் வாழக்கை முறையை கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியுள்ளார். அதில் வலைஞர்  குல மக்களின் வாழ்க்கை முறையை கூறும்போது, அவர்கள் கள்ளு தயாரித்து உண்ணும்  முறையை கூறுகிறார். எளிய செயல்முறைதான் வீட்டில் செய்து பார்க்கலாம் தயாரிப்பு முறையை கவனியுங்கள்.. உரலில் இட்டுக் குற்றாத கொழியல் அரிசியை(சுத்தம் செய்யாத) களியாகச் சமைத்து அதை கூழாக்க வேண்டும். பின்னர் அந்தக் கூழை அகலமான தட்டில் இட்டு ஆறச் செய்து, நல்ல முளை அரிசியை(பாலை நெல்) இடித்து கூழுடன் சேர்த்து கலக்கி இரண்டு இரவும் இரண்டு பகலும் மூடி வைத்து விட வேண்டும். பின்னர் அந்தக் கூழை வெந்நீரில்  வேகவைத்து வடிகட்டியால் வடிகட்ட வேண்டும். சுவையான கள் தயார். இதற்கு "நறும்பிழி" என்று பெயர்.  இந்தக் கள்ளுக்கு தொட்டுக்க என்ன சுவையாக இருக்கும் ?? வடிகட்டிய கள்ளுடன், பச்சை மீனைப் பிடித்து அதைச் சுட்டு சாப்பிட்டால்  எப்பேர்பட்ட உடல்வலிய

வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்

Image
வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள் நாகரிகம் சென்றடையாத கிராமப்புறப் பகுதிகளையே நாட்டுப்புறம் என அழைக்கிறோம். நாட்டுப்புறம் என்ற சொல் சிற்றூர், சிற்றூரைச் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம். அங்கு வாழும் மக்களிடையே மலர்ந்து மணம் பரப்பும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள் போன்றவைகளை நாட்டுப்புற இலக்கியம் எனக் கூறலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று முன்னோரால் போற்றப்படும் தமிழ் மொழியின் தோற்றம் போன்றே இவள் என்று பிறந்தனள் என்று அறியப்படாத இயல்பை பொறுத்த வரையில் நாட்டுப்புற மக்களோடு இரண்டறக் கலந்தவை என்று கூறலாம். அதாவது வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கள ஆய்வால் சேகரிக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் முனைவர் சக்திவேல் அவர்கள் இவ்விலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துவார். 1. நாட்டுப்புறப் பாடல்கள், 2. கதைகள், 3. கதைப்பாடல்கள், 4. பழமொழிகள், 5. விடுகதைகள், 6. புராணம் முதலியன. வாய்மொழி இலக்கியங்களை ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என வகைப்படுத்துவர் இ

கண்ணப்பநாயனார் வரலாறு - Kannapa Nayanar Mutharaiyar History.

Image
கண்ணப்பநாயனார் வரலாறு - Kannapa Nayanar Mutharaiyar History. தமிழ் புராணம் போற்றும் சிவ கண்ணப்பர் : "மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக் காளத்திக் கண்ணப்பர் திரு நாடு என்பர், நாவலர் புகழ்ந்து போற்ற நல் வளம் பெருகி நின்ற பூ அலர் வாவி சோலை சூழ்ந்த பொத்தப்பி நாடு."          'நிலத்திற் றிகழ்திருக் காளத்தி யார்திரு நெற்றியின்மே னலத்திற் பொழிதரு கண்ணிற் குருதிகண் டுண்ணடுங்கி வலத்திற் கடுங்கணை யாற்றன் மலர்க்கண் ணிடந்தப்பினான் குலத்திற் கிராதனங் கண்ணப்ப னாமென்று கூறுவரே.'     "வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்         விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்     காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்         காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்     தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்         சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ     ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப         வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே." பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புர

முத்தன் பள்ளம் (நாவல்)

Image
முத்தன் பள்ளம்: முத்தனின் முன்னோர்கள் திருக்காட்டுப்பள்ளி, செந்தலையை  தலைநகராக்கி ஆட்சி புரிந்தவர்கள் , ஆட்சி மாறுதலுக்குப் பிறகு நாயக்கர், மராட்டியர் காலத்தில் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் காவல்பணி செய்வதாக ஒப்புக்கொண்டு  வெவ்வேறு கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றார்கள் . அப்படித்தான் திருக்காட்டுப்பள்ளியிலிருந்த முத்தனையும்  ' தோப்புவிடுதி' பெருந்தலை தனக்கும், ஊருக்கும் காவகாக்க வேண்டுமென்று சொல்லி அழைத்துவந்து  ஊருக்குக் கிழக்காக இடம் ஒதுக்கி தங்க வைத்தார்... தோப்புவிடுதிக்கு இடம்பெயர்ந்து வரும்போது , முத்தன்  தன் குலதெய்வமான காவக்  கருப்பையும் சேர்த்தே பிடிமண்ணில் சுமந்து வந்தான்.ஊரின் கிழக்காலே முத்தனும்,  ஊருக்கு மேற்காலே  அடர்த்த பத்தைக்குள் அவன் குலசாமியான கருப்பசாமியும்  குடியேறிக் கொண்டனர். முத்தனுடைய கருப்பசாமி தோப்புவிடுதிக்கு வந்து சேருவதற்கு முன்னாள் அந்த ஊருக்குள் பெண் தெய்வங்கள் மட்டும்தான் இருந்தது. கருப்பசாமி வந்த பின்னால் பெண் தெய்வங்களோடு காவக்கருப்பும் சேர்ந்து கொண்டதாகவும், கருப்பு சேர்ந்த பின்னாடி தாய்த் தெய்வங்களுக்கும் சக்தி கூடிப்போச்சு என்று ஊர

மடிக்கேரி (முத்துராஜகேரி)

Image
  பாபமெல்லாம் போக்கும் பரமேஸ்வரன்: ---------------------------------------------------------------------------- மடிக்கேரி (முத்துராஜகேரி) --------------------------------------------------- கர்நாடக மாநிலத்திலுள்ள  கொடகு மாவட்டத்தின் தலைநகர் மடிக்கேரி. இப்பகுதியை ஆண்ட முத்துராஜா மன்னர்களின்  நினைவாக இந்நகரம் முத்துராஜகேரி (முத்துராஜாவின் நகரம்) என்று அழைக்கப்பட்டு அந்தப் பெயரே நாளடைவில் மடிக்கேரி என்று ஆகியிருக்கிறது. மடிக்கேரியை ஆங்கிலேயர் மெர்க்காரா என்று அழைத்தனர். முத்துராஜா மன்னர்கள் வம்ச வழியைச் சேர்ந்த லிங்கராஜேந்திர மன்னர் ஒருமுறை அனாவசியமாகக் கோபம் கொண்டு பக்திமானும் ஒழுக்கத்தில் சிறந்தவருமான ஓர் அந்தணரைக் கொன்று விடுகிறார். அந்த அந்தணர் பிரம்மராட்சசனாக மாறி மன்னருக்குத் தொந்தரவு கொடுத்தாராம். நிம்மதியிழந்த மன்னர் ஜோதிடர்களின் அறிவுரைப்படி காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றைக் கொண்டு வந்து ஆலயம் கட்டி அதில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன் பின்னரே மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியானதாக தலபுராணம் தெரிவிக்கிறது. இவ்வாறு 1820ம் ஆண்டு மன்னர் பிரதிஷ்டை செய்த இந்த சிவா

நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR / BHOYA / BHOI / BHOIR

Image
நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR நாயக்கர் போயர் ----------------------------------- நாயக்கர் / போயர் / NAYAK / NAYAKAR / NAIDU / BOYAR /BHOYA / BHOI /BHOIR போயர்(Boyar) அல்லது போய நாயுடு என்று அழைக்கப்படுவோர் இந்தியாவில் உள்ள ஒரு சாதிப் பிரிவினர். 1909 இல், சென்னை மாகாணத்திற்காக மக்கள் தொகைக் கணக்குகளை ஆய்வு செய்த எட்கர் துர்ச்டன், அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையில், நாயுடு என்ற அடைமொழியை பயன்படுத்திய சாதியினர் பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, கொல்ல, கலிங்கி, காப்பு, முத்துராஜா மற்றும் வேலம ஆகியோர் எனக் கூறியுள்ளார். மேலும் துர்ஸ்டன் நாயுடு தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் என்றழைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். பொருளடக்கம் -------------------------------- 1 போயர் (Boyar) என்றழைக்கப்படும் (Bedar) வேட்டுவ சாதி மக்கள் 1.1 மகாராஷ்டிராவில் போயர்கள் 1.2 தெனிந்தியாவில் போயர்கள் 2 வரலாறு --------------------- 2.1 இந்தியாவின் மத்திய மாகாணங்களில் போய நாயக்கர்களின் வரலாறு 3 முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் 4 குறிப்பிடத்தக்க போய நாயக்க