Posts

Showing posts from May, 2026

திண்டுக்கல் நத்தம் கணவாய் போர் - கண்ணப்ப குல அம்பலக்காரர்களின் இரத்த சரித்திரம்

Image
#திண்டுக்கல் #நத்தம்_கணவாய்_போர் குலதெய்வத்திற்காகவும் தங்கள் பெண்ணுக்காகவும் உயிர்தியாகம் செய்த அம்பலக்காரர்களின் #ரத்த_சரித்திரம்... திருச்சிக்கு வடக்கே கொல்லி மலையில் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அய்யலூரில் அய்யனார், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு அதோடு சேர்ந்த 27 பாளையப்பட்டு தெய்வங்கள் அம்பல இனத்தாரால் வழிபாடு செய்யப்பட்டு வந்தன. இத்தெய்வங்களுக்கு வழிபடு பூசாரிகளாக அமைந்தவர்கள் கண்ணப்பக் கோத்திரத்தைச் சேர்ந்த அம்பலங்கள். மாலிக்காபூர் படையெடுப்பை ஒட்டி இந்நிலப்பகுதி இஸ்லாமிய ராஜாக்களின் கைகளில் சென்றது. அதில் ஒரு இஸ்லாமிய ராஜா அம்பல இனத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க விரும்பிப் பெண் கேட்க அவர்களோ புற சமயத்தார் எனக் கூறித் தர மறுக்கின்றனர். இதனால் இஸ்லாமிய ராஜாவின் கோபத்துக்கு இரையாகிப் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தல் தாங்காமல் தங்கள் குலப் பெண்ணை மணம் முடித்துத் தர சம்மதம் தெரிவிக்கின்றனர். அதையொட்டி திருமண விருந்தும் சிறப்பாக நடைபெற அம்பல இன மக்கள் மணப்பெண்ணுடன் கலந்து கொள்கின்றனர். விருந்தில் உணவோடு சிறப்பாக கறியும் பரிமாறப்படுகிறது. அம்ப...

🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴

Image
🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴 🔴 #ஓலைச்சுவடி_ஆதாரங்களுடன் கி.பி.1690ம் ஆண்டு எழுதப்பட்ட அழகர் வருணிப்பு என்னும் ஓலைச்சுவடி அழகர்மலை அழகர் பெருமாளுக்கும் முத்தரையர்களுக்குமான ஆழ்ந்த தொடர்பை மிக அழகாக மணி மணியாக பதிவுசெய்துள்ளது... முத்தரையர் மூலம் தோன்றிய அழகர் மலையான் : வலையர் ஒருவன் தன் மனைவி, மக்களின் பசி போக்குவதற்காக, பெருமாள்மலை அருகே வள்ளிக்கிழங்கு தோண்டுகிறான். அப்பொழுது கடப்பாறை தைத்து திருமால் தலையிலிருந்து இரத்தம் வருகிறது. அதனால் பயந்து, வீழ்ந்து, கலங்கிய வலையர் தெய்வம் தனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறான். பாண்டிய மன்னனிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறான். அதனைக் கேட்டு பாண்டிய மன்னன், தொண்டர் இதயத்து உறையும் சுந்தரராசப் பெருமானுக்குக் கோயிலும் குளமும் முழுதும் விளங்கும்படி அமைக்கிறான் (ஏடு:102). இவ்வாறு கூறப்படுகிறது கள்ளழகர் தோற்றம் பற்றிய வரலாற்று #வலையர்_மகன் : அழகர் சிலை முத்தரையர்களால் கண்டெடுக்கப்பட்டதால் அழகர் வீற்றிருக்கும் மலையை "வலையன்மகன் வாழும் ம...