HISTORY OF VETTUVA GOUNDER --------------------------------------------------------- கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர். வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரான், வேட்டுவதியரையன், ஊராளி, நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம். கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு ஆதாரங்கள்கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புராணங்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர், வெங்கம்பூர், திருச்செங்கோடு, ஈரோடு, ஏழூர், மூக்குத்திபாளையம், பருத்திபள்ளி, வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை, அவினாசி, திருமுருகன் பூண்டி, இரும்பறை, பழமங்கலம், அந்தியூர், சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம், திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர
Comments
Post a Comment