Posts

Showing posts from September, 2023

பரகேசரி முத்தரையர்

Image
கோவில் நித்யதீபம் ஏற்ற பசுமாடுகளை பரிசாக தந்த முத்தரையர்... #இராஜேந்திர_சோழன் ஆட்சியில்  மலைதாங்கி கம்பன் உடையான் என்கிற #பரகேசரி_முத்தரையர் கோவில்  நித்திய தீபம் ஏற்றியதற்காக 32 பசுக்களை பரிசாக அளித்தார் இந்த மாடுகளை பையூர்  இளங்கோட்டத்து உட்பிரிவான #வெண்கலநாட்டு {நாட்டில் உள்ள} #சத்யாசிரையகுலகாலபுரம் என்ற வெண்கலத்தூரை சேர்ந்த மேய்ப்பன் சேரியின் பராமரிப்பில் மாடுகள் ஒப்படைக்கப்பட்ட செய்தியை சொல்லும் கல்வெட்டு.

பராந்தக சோழ முத்தரையர் (ராஜ ராஜ சோழனின் தந்தை)

Image
#இராஜராஜ_சோழன் தந்தை தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்தியுள்ள மேலும் ஓர் கல்வெட்டு🥰 #சிதம்பரம் தாலுக்காவில் உள்ள #காட்டுமன்னார்கோவில் #அனந்தீஸ்வரர் கோவில் {ANANTISVARA TEMPLE} வடக்கு சுவற்றில் உள்ள கல்வெட்டு செய்தி... #இராஜராஜ_சோழன் தந்தை இரண்டாம் #பராந்தக_முத்தரையர் அரசியார் {இராஜராஜ சோழன் தாய்} பஞ்சவன் மாதேவியார் 12 1/2 கழஞ்சு தங்கம் கொடையாக கொடுத்தார் என்ற கல்வெட்டு செய்தியை தாங்கி நிற்கிறது... இதுவரை காளபிடாரி கோவிலுக்கு கொடை கொடுத்த கல்வெட்டு செய்தியில் மட்டுமே இராஜராஜ சோழனின் தந்தை இரண்டாம் பராந்தக சோழன் தன்னை முத்தரையர் என்று அடையாளபடுத்திய செய்தியை பார்த்து இருப்பீர்கள்... அதன் தொடர்ச்சியாக அரசியார் பஞ்சவன் மாதேவியார் கணவர் என்று சொல்லும் கல்வெட்டிலும் தன்னை முத்தரையர் என்று அடையாளப் படுத்தியுள்ள செய்தி மேலும் முத்தரையர் சோழர் இருவரும் ஒருவரே என்பதும் இராஜராஜ சோழன் உரிமை கொள்ளும் ஒரே சமூகம் முத்தரையர் மட்டுமே என்பது உறுதியாகிறது...

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.முத்தரையன் கோட்டை, கன்மியூர் கோட்டை முதலிய ஊரவர்கள் திருவையாற்றேம்பலான திருஞானசம்பந்த நல்லூர் எனும் ஊரை கைக்கோளார் ஒருவருக்கு விற்றுக்கொடுத்த செய்தி அடங்கிய கல்வெட்டு. 2.இக்கல்வெட்டு சாழநாட்டுத் திருப்பாலையூர் சிவன்கோயில் இறைவனுக்கு பருத்திக்குடி நாட்டு மேன்முக்குளத்து கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பவர் திருநந்தாவிளக்கு எரிப்பதற்காக இருபத்தைந்து பசுக்களை தானமாகத் தந்ததைக் தெரிவிக்கிறது. 3.தென்னிலங்கை வளஞ்சியர் (வலையர்) என்னும் வணிகக் குழுவினனான செகல் சேவுகத் தேவன் கல்வெட்டு 4.கரிகால சோழ குழுவினராகிய சோழ முத்தரையர் | திருவரங்குளம் கிராமம் கோவில்பட்டி பிச்சன் என்பவரிடம் இன்றும் உள்ள செப்பேடு. 5.மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூர் திருமறைநாயனார்க்கு, பனங்காட்டாங்குடி, இலுப்பைக்குடி, மடைக்கழி ஏம்பலான வலையங்குடி ஆகிய ஊர்களை இறையிலிதானமாக வழங்கப்பட்ட செய்தி. 6.கோயிலுக்கு நிலதானம் அளித்த பிற்கால பாண்டியர் கல்வெட்டில் காணப்படும் முத்தரையர் பெயர்களும் ஊரும் | தரியமானான வடமுத்தரையன், நாசகனாழ்வானான சாயப்படை முத்தரையன்

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.வடபரிசாரநாட்டு ஆலத்தூரை அவினாசி ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதானமாக அளித்த கல்வெட்டில். வளஞ்சியன் பள்ளம் என்ற பெயர் இவ்வூரில் வளஞ்சியர் (வலையர்) பெருமை பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டுகின்றது. 2.விஜயாலய சோழ முத்தரையர், முத்தரையர்களிடம் இருந்தே தஞ்சையை கைப்பறினார் என்கிற ஆய்வாளர்களின் யூகத்திற்கு முற்றுப்புள்ளி | இந்தளூர் மற்றும் கழுக்காணி முட்டம் செப்பேடுகள், பல்லவ மன்னன் கம்பவர்மனிடம் இருந்தே விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றினார் என்று தெளிவுபடுத்துகிறது. 3.தேவர்மலை முத்தரையர்  குடைவரை கோயில் 👇 4.இலங்கைத் தீவில் 970 மீன் வலைஞர் சிற்றூர்களும் 400 முத்துக்குளிக்கும் கிராமங்களும் இருந்துள்ளது. அதில் முக்கால்வாசி ஊர்கள் கடல்கோளினால் அழிந்துள்ளது. 5.சங்ககால மீனவர்களின் குடியிருப்பு அமைப்பை கூறும் பெரும்பாணாற்றுப்படை | சிறிய குடிசை போன்ற வீடுகளிலும், பெரிய தூண்களையுடைய உயர்ந்த மாடங்களிலும் வாழ்ந்துள்ளனர். இந்நூல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 6.இருப்பைக்குடி கிழவன், எட்டிச்சாத்தன் என்கிற சத்ரு பயங்கர முத்தரையர் 7.இலங்கையை

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.கும்பகோணம் கே.சுந்தராம்பாள்  இயற்றிய துஷ்யந்த நாடக கும்மியில்  வரும் செம்படவ வலையர் பகுதி 👇 2.செம்படவன் என்கிற வலையரசன்  மகளான பார்வதி தேவியை  வலையன் வடிவில் வந்து மணம்முடித்த  இறைவன் | செம்படவர், வலையர். 3.வலையர் பாட்டு என்கிற பகுதியில் நிறைய தாலாட்டு பாடல்கள் உள்ளன அதை ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம் 👇 4.முத்தரையர் போர் நிகழ்வுகளை குறிப்பவையாக உள்ள நாட்டுப் பாடல்கள், முன் வீச்சில் ஆயிரம் பேரையும், பின் வீச்சில் ஆயிரம் பேரையும் வீழ்த்தியதாக பாடல் குறிக்கிறது. 5.வலையர், வளஞ்சியர், (வலைவர், வலைஞர், வலையமான்கள்) விகுதிக்காகவும் இன்னோசைக்காகவும் (ஞ்) சேர்க்கப்பட்டுள்ளது. 6.லிங்கத் திருவுருவையும் விநாயகரையும் குடைவரையின் ஒரு பகுதியாகவே அமைத்தவர்கள் முத்தரையர்கள். 7.சங்கறுக்கும் வளையர்களான  பரதவர்களே மருவி வலையர்கள்  என்றாகியிருக்கிறது. (வளை-சங்கு) | நெய்தல் நில வளை சங்கு எனவும், குறிஞ்சி நில வளை வலை எனவும் வந்திருக்க வேண்டும். 8.நுளையர் பாடியில் வாழும் வலையர்களுக்கு தலைவராக இருந்தவர் அறுபத்து மூன்று நாயன

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.இருஞ்சோழ நாட்டுத் தலைவன் சத்ரு பயங்கர முத்தரையர் மனைவி | அரசி அணுக்கன் அப்பிநங்கை கல்வெட்டு | 2.கங்கர்கள் யாவர் என தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.... 3.வாணகோ முத்தரையர் தன் சித்தப்பா பொன்மாந்தனார் மீது படையெடுத்த போது, போரில் இறந்துபட்ட இரண்டு வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள். 4.இராவணபுகழ் சோலை என்கிற விச்சாதிர முத்தரையர் வட்டெழுத்து கல்வெட்டு. 5.சோழ மற்றும் கொங்கு நாடுகளை ஆண்ட முத்தரையர்கள். 6.பாண்டியர்களும் முத்தரையர்களும் தாங்கfள் அமைத்த குடைவரைகளில் இலிங்கத் திருவுருவை அதன் ஒரு பாகமாகவே உருவாக்கும் மரபைப் பொதுவாகப் பின்பற்றியுள்ளார்கள். 7.வளஞ்சியர் என்போர் வெண்முத்து வலையல் விற்ற மீனவ வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் கவரை வலைஞர், கவரை செட்டி, கவரை நாயுடு என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். 8.பூதிகளரி என்னும் அமரூன்றி முத்தரையன்; இவனின் கலைத்தொண்டை காணும்போது இவன் மிகப்பெரிய மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை என்ற ஊராட்சியில்