முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு

முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு


அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவர காத்திருந்தார். இந்நிலையில் முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் இன்றைய திருக்கோகர்ணம் கோயிலுக்கு வடபுறத்தில் வாழ்ந்து வந்தனர் இவர்கள். கண்ணப்பர் குலத்தை சேர்ந்தவர்கள். கண்ணப்பர் வேட்டையாடி உணவு தேடும் பழக்கமும், வேட்டைப்பொருட்களை ஆண்டவனுக்கு படையலிட்டு மகிழும் குணமும், உடையவராய் பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். தினம் தினம் தான் வேட்டையாடி கொணர்ந்த மாமிசத்தை சுட்டுப் படையலிட்டு மகிழ்ந்தார். ஆண்டவனும் வனவாசியான வேடன் கண்ணப்பரின் அன்புப்படையலை ஏற்றுக்கொண்டார்.


ஒருநாள் தனது பாசமிகு பக்தனை சோதித்து புடம்போட ஆண்டவன் எண்ணினார். வேடன் கண்ணப்பர் தன்னை நாடிவரும் சமயம் தனது ஒரு கண்ணில் ரத்தம் வருமாறு செய்தார். பக்தர் கண்ணப்பர், இதனைக்கண்டு பதறினார். செய்வதறியாது, தனது கண்ணைத் தனது அம்பாலேயே தோண்டி எடுத்தார். இருகண்களும் எடுத்த நிலையில் ஆண்டவனின் கண்ணைப் பார்த்தால் மூடி ஒட்ட வைத்தார். இத்தகைய பாசமிகு பக்தன் கண்ணப்பரின் கருணையை மெச்சி கண்ணப்பரை கண்ணப்ப நாயனராக ஏற்று முக்தியளித்தார்.


அன்னையின் திருவிளையாடலின் படி முத்தரைய வேட அடியார்களாகிய கருப்பன், சுப்பன், காத்தமுத்து ஆகியோர் முன் உடும்பு உருவத்தில் காணப்பட்டார். தக்கதொரு வேட்டைப்பொருள் வாய்த்தது எனக்கருதி வேட அடியார்கள் உடும்பைப் பிடிக்க முயன்றனர். மறைந்து மறைந்து உடும்பு ஓட வேட அடியார்களும் பின்தொடர்ந்து ஓடினர். தொடர்ந்து ஓடிய உடும்பு அடர்ந்த காடுகளில் வெகுதூரம் ஓடி, வேடர்களின் கண்ணுக்கு தெரிந்த நிலையில் ஒரு பொந்துக்குள் புகுந்தது. அன்னை புண்ணிய பூமியில் தோன்றக் காத்திருந்து இடத்திலேயே அந்தப்பொந்து இருந்தது. இந்த இடம் அக்காலத்தில் காளிக்கோட்டை என்ற பெயரில் வழங்கி வந்தது. இந்த இடத்திலிருந்து கோட்டைப் பிற்காலத்தில் தொண்டைமான்களின் போரின்போது இடித்து அழிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. கவினாட்டு கண்மாயில் நடைபெற்ற பல போர்களை வரலாறு தெரிவிக்கிறது.


இன்றும் முத்தரையர் நாட்டு வேட அடியார் குலத்தவர் தான் வணங்கும் தெய்வங்களுக்கு சூட்டாங் கறி படைத்து மகிழ்வித்தும், பிற இனத்தவர்கள் கொண்டுவரும் காணிக்கைப் பொருள்களை ஆண்டவனுக்கு தாங்களே படைப்பம் படைப்புப் பொருள்களை தாங்களே புசிப்பதுமான வழக்கம். இத்தகைய படையல் பொருள்கைள வேறு இனத்தவர் எவருமே புசிப்பதில்லை. உண்பதுமில்லை, மாறாக மாற்று இனத்தவர் தெய்வங்களை வணங்கி, அருள்பெற்று முத்தரைய நாட்டு வேடர் பூசாரிகளிடம் தீர்த்தம், திருநீர், பிரசாதங்களைப் பெற்று செல்கின்றனர்.

வேறு படைப்புப் பொருள்களை பெற பிற இனத்தவர்கள் ஆசைப்படுவது இல்லை. மழை, நாட்டு நலம், மக்களின் நல்வாழ்வு வேண்டியும் நாட்டு வேட்டை எனும் பாரிவேட்டை என்றும் குறிப்பிட்ட காலங்களில் வேட்டையாடி தெய்வத்திற்கு படைத்து தெய்வங்களை மகிழ்வித்து வருகின்றனர். வேட்டையின்போது ஒன்றும் கிடைக்காத நிலையில் தெய்வபக்தி காரணமாக மனம் நோகாது வேட்டைக்கருவிகளை கழுவிப்படைத்து மகிழ்கின்றனர். இத்தகைய பக்திமிகு முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கைப்பட்ட அன்னை முத்துமாரியம்மன் அருள்வாக்காக அடியார்மேல் அருள்வந்து தக்கதொரு இடத்தில் தன்னை அமர்த்திப் பூசித்து வரும்படி கூறினார்.


அருள்வாக்குப்படி அன்னையின் திருவுருவச்சிலையை தங்களது இருப்பிடப்பகுதி நோக்கி சுமந்து வந்தனர். அன்னைக்குப் பிடித்தமான இடம் வந்தபோது இறக்கி வைக்க நேர்ந்தது. இந்த இடமே தனக்கு உகந்தது என அன்னை தெரிவித்தார். அந்த இடம்தான் இன்று அன்னை எழுந்தருளியுள்ள திருவப்பூர் ஆகும். இந்நிகழ்ச்சி கிபி 1732 ஆண்டுக்கு முன்னதாக நடைபெற்றதாகும். கண்கண்ட தெய்வமாம் அன்னை முத்துமாரியை தக்கதொரு கட்டிடத்தில் அமர்த்த இயலாத நிலை வேட அடியார்களோ அன்றைய பசியை போக்க காடு, மேடு அலைந்து காய், கனிகளையும் இலை, கிழங்குகளையும், வேட்டைப்பொருள்கள் மூலமாக உணவு தேட வேண்டிய நிலை. இந்நிலையில் கட்டிடம் கட்ட பொன், பொருளேது. பக்தர் நிலையறிந்து அன்னையவள் பச்சை இலைக்கூடாரம் அமைத்து பராமரிக்க கூறினார்.

பக்தர்கள் பங்களிப்புடன் முதல் தங்க ரதம் பவனி

புதுக்கோட்டை திருக்கோயில்களை சார்ந்த திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுகை மன்னர்கள் பிரதானமாக வழிபடும் கோவில் ஆகும்.
இக்கோயிலுக்கு காலம் காலமாக சட்டத்தேரில் பவனி வந்த அம்பாளுக்கு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் அறக்கட்டளை மற்றும் திருவப்பூர் கவிநாடு கிராமத்தார்களின் பெரும் முயற்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று வைரத்தேர் (மரத்தேர்) செய்யப்பட்டு கடந்த 24.2.2009ல் வெள்ளோட்டம் விடப்பட்டது.

மேலும் திருவப்பூர் முத்துமாரி அம்பாளுக்கு தங்கத்தில் தாலி, மூலஸ்தான கோபுர தங்க கலசம் அத்துடன் அழகிய மரவேலைப்பாடுகளுடன் கூடிய தாய் நிலை கதவு, முகப்பு மண்டபம், முகப்பு விமானம், கோபுர வர்ணங்கள், எலக்ட்ரிக்கல் வேலைகள் செய்யப்பட்டு மிகவும் சிறப்பாக 29.1.2010 அன்று மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அத்துடன் தங்கரத சுற்று பிரகார மண்டபம் (43 பாந்துகள்) தங்கரத பாதுகாப்பு அறை, தங்கரதத்திற்கான மரத்தேர், செப்புதகடு நகாசு வேலைகள் அனைத்தும் அறநிலையத்துறை அனுமதியுடன் ஆகம விதிகளுடன் செய்து முடிக்கப்பட்டு, தங்கரதத்திற்கான தங்கம் ஒட்டும் பணிக்காக காத்திருக்கிறது.

இதற்கு தேவையான தங்கம், வெள்ளி மற்றும் தங்கம் ஒட்டும் கூலி உட்பட அனைத்தும் தமிழகத்திலேயே முதன்முறையாக பக்தர்களின் முழு ஒத்துழைப்புடனும், பங்களிப்புடனும் செய்யப்படும் முதல் தங்க ரதம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் தங்கரதம் விரைவில் பவனி வர தாங்களும் இத்திருப்பணியில் இடம் பெற்று அம்மனின் அருள்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER