Posts

முத்தரையர் பெயர்களின் ஒப்பீட்டில் வெளிப்படும் அரசிலி கோயில் கல்வெட்டு பிழை

Image
கி.பி. 12 ம் நூற்றாண்டில் அரசிலி ஆளுடையார் கோயிலில் கல்வெட்டை படியெடுத்தவர்கள் "நாந" என்பதனை "காக" என்று வாசித்துள்ளனர். "வலையன் கடியாறநாந வாணராய முத்தரையன்" என்பதனை "வலையன் கடியாரானுகாக வாணாராய முத்தரையன் வைத்த நொந்தா விளக்கு" என்று கூறி வலையனின் உறவினர் வாணராய முத்தரையன் என்று விளக்கம் கொடுத்துள்ளனர். சமகாலத்தில் மற்ற பெயர்களை நோக்கும்போது  1, இவ்வூர் வலையரில் சூற்றிச் சேந்தனான பெரிய நாட்டு முத்தரையன்  2, வலையன் #கடியாறநாந வாணராய முத்தரையன் 3, அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன் போன்ற பெயர்கள் மூலம் அப்பிழையை அறிய முடிகிறது. S.  ஜெகன் தஞ்சை

வலையர் படைப்பற்று

Image
வலையர் படைப்பற்று "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி" என்பது தமிழரின் மிக நீண்ட வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் புறப்பொருள் வெண்பாமாலை வரிகள் (35-வது பாடல்) ஆகும். இந்தப் பாடலுக்கு ஏற்ப தமிழர் நிலத்தின் #பூர்வக்குடியாகவும், #மறக்குடியினராகவும், #நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்தவர்கள் #வலையர்கள் என்பது நாம் அறிவோம்.  இந்த செந்தமிழ் நாட்டில் பிரிக்கப்பட்ட 12 பகுதிகளில் ஒன்றான #பன்றி_நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய #புதுக்கோட்டை  #கானாடு, #கோனாட்டில் பூர்விக #மறக்குடியினர் வாழ்ந்த பகுதியில் #வலையர்_படைப்பற்று ஊரான #மேலைக்குருந்தண்பிறையில் வாழ்ந்த #வலையர் #மூவன்காடப்பிள்ளை என்பவர் #திருமயம் வட்டத்திலுள்ள பிரமதேயமான #பேரையூரில் #பாடிக்காவல் முறையை ஏற்ற14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு 😍  மேலும் இந்த பகுதியில் வலையர் குடியினர் #போர்ப்படை தொழில் செய்தும் #காவல் தொழில் செய்தும் வாழ்ந்துளனர்

திருவானைக்கோயில் முத்தரையர் காவலும் காவற்காணியும்

Image
சோழ நாடு மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவானைக்கோயிலில் கிடைத்த கல்வெட்டு அரிய வரலாற்று செய்தியை தருகிறது. கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ராஜராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்தில் கீழ்பாலாற்றை சேர்ந்த காரிச்சாத்தன் துறையில் காணி உரிமை பெற்றிருந்த தாமணித்தேவன் மற்றும் அவரது சகோதரர்கள் திருவானைக் கோயிலுக்கு நிலவிற்பனை செய்த தகவலை தருகிறது.  இவர்கள் நில விற்பனை செய்ததற்கு ஒப்புதலாக திருவானைக் கோயிலின் சார்பாக பெருமான் அழகனான மணவாள முத்தரையன் என்பவர் கிழிப்புணைத் தீட்டாக நாலாயிரம் காசுகளைப் பெற்று நிலத்தினை விற்றவர்களுக்கு அளித்துள்ளார்.  திருப்பெருந்துறை கோயிலின் மிக பொறுப்பில் விளங்கிய மணவாள முத்தரையன் ராஜேந்திர சோழ மங்கலத்தின் காவல் பொறுப்பினை  ஏற்று அதற்காக சோழ அரசர்களால் காவல் காணி எனப்படும் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டு சிறப்புற்று இருந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது. பெருமான் அழகனான மணவாள முத்தரையனை  " ராஜேந்திர சோழ மங்கலத்து காணியுடைய  கள்ளரில் பெருமான் அழகனான மணவாள முத்தரையன் "...

முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

Image
வரகுணா பெருமானார் #சோழனின்_சகோதரி என்று சுந்தர சோழரின் அன்பில் ஆவணமும், வரகுணாட்டி பெருமானார் #முத்தரையர்_மகள் என்று மற்றொரு கல்வெட்டும் தெரிவிக்கிறது. முத்தரையரும் சோழரும் வேறு என்ற கருத்தில் மூழ்கியிருந்த வரலாராசிரியர்கள் இருவரும் வேறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பம் என்பது வரகுணாட்டி மூலம் மேலும் உறுதி செய்யப்படுகிறது. S. ஜெகன்

அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்” : ஒரு கல்வெட்டு சொல்லும் சோழ வம்ச ரகசியம்

Image
உத்தம சோழரின் தந்தையான கண்டராதித்த சோழரின் 5ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 955) கொடும்பாளூர் அரசரான "மஹிமாலய இருக்குவேள் பராந்தக வீரசோழன்" பழுவேட்டரையரின் திருப்பழுவூர் ஆலயத்துக்கு நிலம் நிவந்தமாக கொடுத்துள்ளார். பழுவேட்டரையர் மற்றும் இருக்குவேளார் ஆகியோர் சோழனுடன் மன உறவில் இருந்தவர்கள் ஆவர். அதே போல் கிபி 972 ம் ஆண்டு கண்டராதித்தரின் மகனான உத்தம சோழர் 3 ம் ஆட்சி ஆண்டில் பழுவேட்டரையரின் மகளான அரசியார் பஞ்சவன் மாதேவியார் தனது கணவரான அருண்மொழிவர்மனின் பெயரை உடையார்குடி கல்வெட்டில் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெயரானது, அருண்மொழிவர்மனின் இருக்குவேளிர் உறவையும் பராந்தக சோழனின் வாரிசு என்பதனை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும், மஹிமாலய இருக்குவேளிரின் பழுவூர் கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டை வெளியிட்டது பழுவேட்டரையர் மகளும் இராஜராஜனின் மனைவியுமான அரசியார் பஞ்சவன் மாதேவி என்பதனை மேலும் உறுதி படுத்துகிறது. S. ஜெகன்

சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்

Image
இராஜேந்திர சோழனின் படைகளில்  ஓர் படைப்பிரிவுக்கு  படைவீரர்களாக இருந்த #சுருதிமான்களுக்கு #தலைமை வகித்த #இராஜமல்ல_முத்தரையன்  இந்தக் கல்வெட்டு இராசேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது. "கோப்பரகேசரி பன்மரான உடையார் ஸ்ரீ இராஜேந்திர சோழதேவர்க்கு யாண்டு ங-ஆவது" என்று தொடங்குவதன் மூலம், இது அவரது 3-ஆம் ஆட்சி ஆண்டு (சுமார் கி.பி. 1015) கல்வெட்டு  "வடகரை விழாநாட்டு" - அதாவது காவிரி ஆற்றின் வடகரையில் இருந்த விழாநாடு என்னும் நாட்டுப் பிரிவில் உள்ள ஒரு ஊரைப் பற்றி பேசுகிறது.  "சுருதிமான் நக்கன் சந்திரனான இராஜமல்ல முத்தரையன்"  #சுருதிமான் என்பது இராஜேந்திர சோழரிடம் இருந்த ஓர் படைவீரர் பிரிவை குறிக்கிறது.  #இராஜமல்ல_முத்தரையன் இவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு  சோழ அரசின் படைத்தளபதியாகவோ இருந்திருக்க வேண்டும். சுருதிமான்கள் இருந்த ஒரு  படைபிரிவுக்கு முத்தரையர் தலைமை தாங்கினார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். *கடகத்தில் என்பது படைமுகாமை குறிப்பது. அல்லது படை தலைமை இடமாக இருக்கலாம். பதிவு: 3lion stodio's

"அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" கல்வெட்டு

Image
இந்த கல்வெட்டு படியெடுக்கப்பட்டு கிபி 1920 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அக்கல்வெட்டில் உள்ளது அருண்மொழிவர்மன் - அரசியார் பஞ்சவன் மாதேவியார் என்பது ஜனவரி 24, 2026 ம் ஆண்டுதான் கண்டறியப்பட்டது. 106 ஆண்டுகள் எத்தனையோ பேரின் ஆய்வுக்கு உட்பட்டாலும் அது அருண்மொழிவர்மன் என்பது எவர் மனதிலும்  உதிக்கவில்லை. இதற்கு முன்னர் வரலாற்று புதினம் எழுதிய #பாலகுமாரன் அவர்கள் முதலில் கண்டறிந்தாலும் அதனை வெளிப்படையாக தெரிவிக்காமல், அருண்மொழி வர்மன் முத்தரையர் குலத்தில் உதித்தவன் என்று பஞ்சவன் மாதேவியார் மற்றும் அவர் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரிகளை உருவாக்கியிருந்தார். அதற்கு ராஜராஜனை ஏன் முத்தரையர் என்று சொல்லுகிறீர்கள் என்று பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். விஜயாலய சோழனே முத்தரையர் மகன் என்பதனை ஆதாரத்துடன் நிரூபித்த பிறகு தற்சமயம் இராஜராஜ சோழன் மன்னராவதற்கு 12 ஆண்டுகள் முன்னர் தமது 25ம் வயதில் இளவரசராக இருந்த சமயம் அவருடைய அரசியார் பஞ்சவன் மாதேவியார் தன் கணவர் பெயர் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று கல்வெட்டாக உடையார்குடி அனந்தீவரர் ஆலயத்தில் தெரிவித்துள்ளார் என்ப...

பாண்டி முத்தரையனான அரட்டவதி அரையன்

Image
திருச்சி மாவட்டம் கடவூர் அருகே புதிய முத்தரையர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

"அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்"

Image
#உடையார் வரலாற்று புதினமானது கல்வெட்டுகள் அடிப்படையில் உருவானது ஆகும். #பழுவேட்டரையர் மற்றும் அவருடைய மகள்  #பஞ்சவன்_மாதேவி ஆகிய இருவரும் அருண்மொழி மற்றும் குந்தவையை பழுவூர் இல்லத்தில் வரவேற்கும் போது அருண்மொழியை பார்த்து #முத்தரையர் குலத்தில் தோன்றிய இளவரசரே வருக என்றழைப்பர்.  பஞ்சவன் மாதேவி அவர்கள் அருண்மொழி வர்மனை  "அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்" என்று உடையார்குடி கல்வெட்டில் திருமணமான பிறகு குறிப்பிட்டுள்ளதை அடிப்படையாக கொண்டே  ராஜராஜனை முத்தரையர் என்று பஞ்சவன் மாதேவியின் தந்தை பழுவேட்டரையர் அழைப்பது போல் வரலாற்று புதின ஆசிரியர் எழுதியுள்ளார். - S. ஜெகன்

இராஜ இராஜ சோழன் முத்தரையர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்.

Image
இராஜ ராஜ சோழன் படத்துக்கு கீழே "அரசி பஞ்சவன் மாதேவி கணவர் - அரையன் மகிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன்". அரையன் மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்பது ராஜராஜ சோழனின் இளவரச பருவ வழங்கு பெயராகும். சகோதரனின் கொலைக்கு பிறகு, அவர் சோழ அரச பதவி வேண்டாம் என்று விலகி இருந்த காலம் ஆகும்.  அந்த பெயர் இயற் பெயர் கிடையாது, வழங்கு பெயராகும்.  அரையன் - அரசன்  மஹிமாலயன் - மஹிமை வாய்ந்த உயர்ந்தவன்  பராந்தக - பெரும்பாட்டனார் மதுரை கொண்ட பரகேசரி பராந்தக சோழனின் பெயர்  முத்தரையன் - இளவரசனின் இளையவன்  கல்வெட்டு வெளியிடப்பட்ட காலம்  உத்தமசோழன் (கி.பி.970-985) இராஜ ராஜ சோழனின் மூத்த சகோதரன் ஆதித்ய சோழனின் கொலைக்கு பிறகு, உத்தம சோழன் மன்னராக பதவி ஏற்பார். அந்த கால கட்டத்தில் வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரசி  #பஞ்சவன்_மாதேவி கணவர் அரையன் (அரசர்) மஹிமாலயன் ஆயின பராந்தக முத்தரையன் என்று உள்ளது. பஞ்சவன் மாதேவியின் கணவர் இராஜராஜ சோழன் ஆவார்.  ஆதித்த கரிகாலன் கொலைக்கு பிறகு அவர் 15 ஆண்டுகள் அரச பதவி வேண்டாம் என்று விலகியிருப்பார். இராஜராஜன் என்ற வழங்கு பெயறா...

சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன்

Image
முத்துராஜா (முத்தரையன்) என்ற பட்டம் மன்னனின் இளைய மகனுக்கு உரிய பட்டம் ஆகும். மேலும், முத்தரையன் என்பது முத்துராஜா என்ற பட்டத்தின் தமிழ் வடிவம்.  (ஆதாரம்: எபி இண்டிகா பகுதி 27) சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையரின் அண்ணன் சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் ஆவார் . இளங்கோ முத்தரையரிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் இன்றி விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றி நிசும்பசூதனி ஆலயத்தை தஞ்சையில் எடுப்பித்தான். நார்த்தா மலைமேல் பழியிலீஸ்வரம் கோயிலை தம்பி சாத்தன் பழியிலி இளங்கோ முத்தரையன் குடைவித்துள்ளான். அருகே, விஜயாலய சோழீஸ்வரம் கோயிலை அண்ணன் கட்டியுள்ளான்.  இளங்கோ முத்தரையரிடமிருந்து தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி கைப்பற்றிய விஜயாலய சோழன் யார்? குவாவன் சாத்தன் முத்தரையரின் மூத்தமகனான சாத்தன் பூதி இளங்கோ அதியரையன் தான் பிற்கால சோழ சாம்ராஜ்யத்தை நிறுவியவர் ஆவார். தஞ்சையை எவ்வித எதிர்ப்பும் இன்றி இளைய சகோதரர் இளங்கோ முத்தரையரிடமிருந்து கைப்பற்றி, பிறகு நிசும்பசூதனிக்கு ஆலயம் எடுப்பித்தவரும் அவரே! -ஜெகன்

சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்!

Image
#முத்தரையன் என்ற பட்டம் #சோழ_இளவரசன் பட்டம் என்றும், மன்னரின் இளையவனுக்கு உரியது என்பதனை முதன் முதல் கூறியது நான். அதன்மூலம்தான் #இளங்கோ_முத்தரையனிடமிருந்து தஞ்சையை கைப்பற்றியவன் அவனுடைய மூத்த சகோதரனும் விஜயாலய சோழீஸ்வரத்தை எடுப்பித்தவனும் ஆன விடேல் விடுகு சாத்தன் பூதி இளங்கோ வதியரையன் என்பதனை என்னால் முதலில் உலகுக்கு கூற முடிந்தது. ஆனால், #முத்துராஜா என்பதன் தமிழ் வடிவம் முத்தரையர் என்று கூறிய #நீலகண்ட_சாஸ்திரி போன்ற வரலாற்று ஆசிரியர்கள் "முத்துராஜா" என்பது #சோழஇளவரசனின் பட்டம் என்று இரண்டு செப்புப்பட்டயம் மற்றும் 12க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் மூலம் முன்னரே உறுதியாக ஆவணப்படுத்தியுள்ளனர். சோழரும் நாங்கதான்! முத்தரையரும் நாங்கதான்! பழைய தமிழக எல்லைப்பகுதியில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வாழும் #மீனவர்களின்_பாதிபேர் முத்துராஜாக்கள் ஆவர். நன்னீரில் #மீன்பிடித்தல் மற்றும் #வேட்டையாடுதல் அவர்களின் குலத்தொழில் என நெல்லூர் சாசனம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் வாழும் முத்துராஜா, வலையர், பாளையக்காரர், அம்பலக்காரர் மற்றும் இன்னபிற உட்பிரிவுகளை கொண்ட முத்தரையர் மக்களை #நாட்டு...

சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள்

Image
சமரசமில்லா முத்தரையர் குல சேர்வைக்காரர்கள்  மதுரை மாநகர் முனுசுபாளையம் பகுதியில் குறிப்பிடும்படியான அளவு முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்த முனுசுபாளையம் பகுதி முத்தரையர் மக்களுக்கு பிரதான பட்டம் சேர்வை ஆகும். இவர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட பகுதியிலிருந்து குறிப்பாக தானமநாடு என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்து வந்ததாக கருதுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கடந்த காலங்களில் தானம நாட்டில் இருந்து தென் மாவட்ட பகுதியில் குடியேறிய மற்ற தானம நாட்டு முத்தரையர் மக்களுடன் தான் அதிக மனஉறவு வைத்திருந்தனர். மிக முக்கியமாக இந்த முனுசுபாளையம் முத்தரையர் சமூக மக்கள் சுதந்திரத்திற்கு முற்பட்ட காலகட்டத்தில் இருந்தே  'இந்து சேர்வை' என்ற பெயரிலே சாதி சான்றிதழ் உட்பட அனைத்து விதமான அரசு சான்றிதழ்களையும் பெற்று வந்துள்ளனர். ஆனால் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு காலம் காலமாக இந்து சேர்வை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட சாதி சான்றிதழ் இனி அந்தப் பெயரில் வழங்கப்படமாட்டாது என்று அப்போதைய அரசு அலுவலர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் எங...

ஒற்றியூரில் சோழர்கள் — முத்தரையர்களின் பழம்பெரும் வரலாறு

Image
#ரேனாட்டு_சோழர்களின் தலைநகரமாக #ஒற்றியூர் இருந்தது. தற்போதைய வடசென்னையில் #திருஒற்றியூர் என்ற பகுதியாக உள்ளது. அன்பில் செப்பேட்டில் ஒற்றியூரான் வம்சத்தில் #விஜயாலய_சோழன் தோன்றினான் என்றுள்ளது. கடற்கரை ஒட்டிய அப்பகுதியில் #முத்தரையர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பெருபாலோனோர் முன்பு மீனவர்களாக இருந்தனர். திரு. G. K. J. பாரதி என்பவர் ஒற்றியூர் MLAஆக இருந்த முத்தரையர் ஆவார்(காங்கிரஸ் கட்சி). இவர் 1996 பாராளுமன்ற தேர்தலில் முரசொலி மாறனை எதிர்த்து மத்திய சென்னையில் போட்டியிட்டார். பிறகு 1998 பாராளுமன்ற தேர்தலில் வடசென்னையில் போட்டியிட்டார். பதிவு: ஜெகன் சுந்தர்ராஜன்

சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்

Image
"சோழர் பட்டம் கொண்ட முத்தரையர்கள்" தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஒன்றிய பகுதியில் வசிக்கும் "முத்துராஜ குல முத்தரையர்களில்" குறிப்பிட்ட ஓர் பங்காளி பிரிவினர்கள் "சோழராசா" என்ற கூட்டப் பெயர் கொண்டவர்களாக இருக்கின்றனர். காலம் காலமாக இந்த வகையராவினர்கள் "சோழராசா மற்றும் சோழன்" என்ற பட்டம் தாங்கியவர்களாக உள்ளனர். இந்த "சோழராசா" என்ற பட்டம் தாங்கிய கூட்டத்தினர்கள் முன்னொரு காலத்தில் இன்றைய திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள அன்றைய முற்கால சோழர்களின் தலைநகரான உறையூரில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு முதலில் உறையூரில் இருந்து இடம் பெயர்ந்து இன்றைய முசிறி பகுதிக்கு குடிபெயர்ந்து பின்பு அங்கிருந்து பல்வேறு குழுக்கலாக திருச்சி,நாமக்கல்,கரூர் மாவட்ட பகுதிகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். மிக முக்கியமாக இவர்களின் குலதெய்வமே ஒரு சோழ மன்னர் ஆவார் ஆம் இவர்களின் குல தெய்வத்தின் பெயர் "சோழராசா" ஆகும். தன் மூதாதயரான முப்பாட்டன் "சோழ மன்னரையே" தங்கள் குல தெய்வமாக கொண்டுள்...

பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன்

Image
திருப்பாலையூர் கோவிலருகே காணப்படும் பலகையின் ஒருபுறத்தில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. கிரந்தம் மற்றும் வட்டெழுத்து எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டு முற்காலப் பாண்டிய மன்னன் சடையமாறனின் இரண்டின் எதிர் ஆண்டினைச் சேர்ந்தது.  பருத்திக்குடி நாட்டிலிருந்த கேரளசிங்க முத்தரையனான மாதேவன் மருதன் என்பார் திருப்பாலையூர் படாரர்க்கு ஒரு நந்தா விளக்கிற்காக 25 பசுக்களை வழங்கியுள்ளார். இப்பசுக்கள் பிரித்து கொண்டக்குடி அம்மானப்பி என்பவருக்கு ஐந்தும் கொற்றனட்டி என்பவருக்கு பத்தும் சங்கரங்குளவன் என்பவருக்கு ஐந்தும் சங்கரன் பெற்றான் என்பவருக்கு ஐந்தும் வழங்கப்பட்டது. இவர்கள் தடையில்லாமல் விளக்கு எரிப்பதற்காக நெய் வழங்க வேண்டும். வடமொழியில் தானமளித்தவரின் ஊர்ப்பெயர் வர்த்தகிராமம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்ப்பகுதி "கோச்சடை ய மாறற்கு யாண்டு 2 இதனெதிரா மாண்டு (சா)ழ நாட்டு தேவதாந திரு ப்பாலைஊர் ஈஸ்வர படாரர்க்கு பருத் திக்குடி நாட்டு மேன்முக்குள த்து கேரள சிங்க முத்தரையனா யின மாதேவன் மருதன் திருநொ ந்தா விளக்கு ஒன்றெரிய அ டுத்த பசு 25 இவைச்சி னால் நியதம் உழக்கு நெய் முட்டாமை...

சோழனுக்கு பெண் கொடுக்கும் வலையர்கள்

Image
வலங்கை இடங்கை புராணம் நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் இயற்றப்பட்டது. அதில், #வலையர் என்போர் காவல் தொழில் செய்வோர் என்றும் சோழனுக்கு பெண் கொடுப்போர் என்றும் உள்ளது.  நாடாளும் சோழனுக்கு பெண் கொடுப்பவர் என்பது, கரிகாற் சோழனின் குழுவினராகிய சூரிய முத்திரியர் என்ற 500 வருடம் முந்தைய புதுக்கோட்டை செப்பு பட்டைய வரிகளுடன்  ஒத்துப்போகிறது. வலையன் சோழனுக்கு பெண்கொடுக்க கடமைப்பட்டவன் என்று பெருமையாக கூறப்பட்டுள்ளது. மற்ற இனத்தவரை இயன்றவரை இழிவு செய்துள்ளனர் இப்புராணத்தில். பதிவு: ஜெகன் சுந்தர்ராஜன்

முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர்

Image
முத்தரையர் குல வேங்கை, வங்கார முத்தரையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா திருவுருவப்படம்

Image
சோழ மஹாராஜா புண்ணியகுமார முத்துராஜா படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்

கரடி காத்தான் வலையர் திருவுருவப்படம்

Image
கரடி காத்தான் வலையர் படம் உதவி: முத்தரையர் வரலாறு முகநூல் பக்கம்