முத்தரையர் கல்வெட்டுகள்

1.இருஞ்சோழ நாட்டுத் தலைவன் சத்ரு பயங்கர முத்தரையர் மனைவி | அரசி அணுக்கன் அப்பிநங்கை கல்வெட்டு |

2.கங்கர்கள் யாவர் என தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்....

3.வாணகோ முத்தரையர் தன் சித்தப்பா பொன்மாந்தனார் மீது படையெடுத்த போது, போரில் இறந்துபட்ட இரண்டு வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள்.

4.இராவணபுகழ் சோலை என்கிற விச்சாதிர முத்தரையர் வட்டெழுத்து கல்வெட்டு.

5.சோழ மற்றும் கொங்கு நாடுகளை ஆண்ட முத்தரையர்கள்.

6.பாண்டியர்களும் முத்தரையர்களும் தாங்கfள் அமைத்த குடைவரைகளில் இலிங்கத் திருவுருவை அதன் ஒரு பாகமாகவே உருவாக்கும் மரபைப் பொதுவாகப் பின்பற்றியுள்ளார்கள்.

7.வளஞ்சியர் என்போர் வெண்முத்து வலையல் விற்ற மீனவ வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் கவரை வலைஞர், கவரை செட்டி, கவரை நாயுடு என்றும் அழைக்கப்பட்டுள்ளனர்.

8.பூதிகளரி என்னும் அமரூன்றி முத்தரையன்;

இவனின் கலைத்தொண்டை காணும்போது இவன் மிகப்பெரிய மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை என்ற ஊராட்சியில் இவனது கோயில் பணி காணப்படுகிறது. இவன் குவாவன் சாத்தனின் மகனான சாத்தன் பூதிக்கும் "பூதிகளரி" என்ற மகன் இருந்துள்ளான். பூதி களரிக்கு அமரூன்றி முத்தரையன் என்ற பட்டப்பெயர் உண்டு. இவன் இங்கு உள்ள பூவாலைக்குடி என்னும் ஊரில் புஷ்பவனேஸ்வரர் என்ற குகைக்கோயிலை அமைத்துள்ளான்.

இவனது பிற கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டம் திருச்சின்னம்பூண்டி,செந்தலை, திருக்கோற்றுத்துறை, கும்பகோணம் வட்டத்தில் உள்ள கோடிக்காவல் ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. இவனால் கட்டப்பட்டுள்ள புதுக்கோட்டை மாவட்ட கோயிலைக் காணலாம் இக்கோயிலில் பதிமூன்று கல்வெட்டுகள் உள்ளன. 

ஆதாரம் ARE 142/1907 DAMILILA Vol 1R78
முத்தரையர் ஆர்.திருநாடன் காசிநாதன் பக்:96

9.நாட்டின் பூர்வீகக் குடி மக்கள். பர்வதராஜகுல வலையர், வலைஞர், பரதவர், பரவர், மூப்பன், வலை இடையர், பட்டினவன், செம்படவர், முக்குவர்.

10.பதினொன்றாம் திருமுறை பகுதி 2ல் வரும் திருமுருகாற்றுப்படை வலையர் பகுதிகள் 👇

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER