Posts

மூன்று தரை பல்லவ முத்தரையர்கள்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள் ______________________________ பல்லவ முத்தரையர்கள்: ------------------------------------------- 1. பரதன் வியாளகஜ மல்லப் பல்லவரையன்: முதலாம் இராராஜனின் கி.பி. 987 ல் உடையார்குடி கல்வெட்டில் இவனைப்பற்றிய செய்திகள் வந்துள்ளன. இதனை ஆவணம் இதழ் கல்: 1994ம் ஆண்டில் வெளியிட்டுள்ளது. பரதன் வியாள கஜ மல்லப் பல்லவரையனின் தந்தை பல்லவ முத்தரையன் ஆவான். இந்தப் பல்லவ முத்தரையன் வெண்ணையூர் நாட்டவன். இவன் அரசியல் செல்வாக்குப் பெற்ற தலைவனாக இருந்தவன். இவனது அபிமானம் பெற்ற ஆதித்த கரிகால் சோழ இளவல் ஒருவனைச் சில அதிகாரிகள் கூடிக் கொன்று விட்டனர். இந்த இவளலின் ஆன்மா சாந்தியடைய வேண்டி 2 3/4 வேலியும், 1 மா நிலத்தையும் விலைக்கு வாங்கியுள்ளான். இந்த நிலத்தை திரு நந்தீஸ்வரத்து பட்டாரகர் கோயில் முன்பு கட்டப்பட்டுள்ள மூவாயிரத்து நூற்றுவனான நிலையம்பலத்து தண்ணீராட்டும் அந்தனரின் பராமரிப்பிற்காக கொடையாக அளித்துள்ளான். இதன் மூலம் இவனுக்கும், கரிகால் சோழனுக்கும் குல அடிப்படையில் பிணைப்பு இருந்துள்ளதை நன்கு அறியலாம். 2. பல்லவ முத்தரையன்: -------------------------------

மூன்று தரை பாண்டிய முத்தரையர்கள்

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள் ___________________________ பாண்டியநாட்டு முத்தரையர்கள் ____________________________ 1.அஞ்நூற்றுவ முத்தரையன்: ------------------------------------------ இவனது கல்வெட்டு கன்னியாகுமரி மாவட்டம், திருநந்திக்கரை சுவாமிக்கு திருநந்தா விளக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. இச்செய்தி தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறை தொடர் எண் 1969/38Hல் உள்ளது. இவனுக்கு சித்த குட்டி அம்பி என்ற பெயரும் உள்ளது. இவனைப் பற்றிய கல்வெட்டு.👇 1.வரத ஸ்ரீ கறைக் கண் 2.ட ஈ ஷ்வ ரத்துக கலம் 3.ற்ற யாண்டு திருநந்தி 4.க் கரைய் பட்டாரகர்க்கு 5.நாஞ்சி நாட்டு வேய் கோ 6.ட்டு மலையுடைய 7.சித்த குட்டி அ 8.ம்பியாயின அஞ்ஞா 9.ந்றுவ முத்தரையன் 10.நிசதம் உரிய் நெய் 11.எரிவதாக வைச்ச திரு 12.நந்தா விளக்கு ஒன்று 13.க்கு வைச்ச சாவா மூவா எ 14.ருமை ஒன்பது இவை பெ 15.ரு மக்களுக்குச் சமைஞ் (ச) 16.இடையன் வீரன் மங்கல 17.வன் வய்த்த (ந)ன். இக்கல்வெட்டில் நாஞ்சில்நாட்டு, வேய்கோட்டு மலையுடைய  சித்தகுட்டி அம்பியான "அய்நூற்றுவ முத்தரையன்" என்கிறது. தினசரியும் இவனால் வைக்கப்பட்ட த

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (33முதல் 35வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள் ____________________________ சோழ முத்தரையர்கள் : _____________________________ 33.வாமதேவ முத்தரையர்: ----------------------------------------- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில் கிபி 1578 இல் (சகாத்தம் 1500) கல்வெட்டாக கனகசபை மண்டபத்தில் உள்ளதில் வாமதேவ முத்தரையர் பற்றி கூறுகிறது... மிகுந்த கலையம்சத்துடன் சுற்றுலா மையமாக திகழக்கூடிய வரலாற்று சிறப்பு மிகு கட்டம் சிற்பக்கலையுடனும் ஆவுடையார் கோவிலில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஆத்மநாதர் இருந்தபோதும் வழங்கப்படுவது எல்லாம் மாணிக்கவாசகருக்கு தான் நடை பெறுகிறது... இக்கோயிலில் கனகசபை மண்டபத்தை முழு பொறுப்பேற்று கட்டி முடித்தவர் வாமதேவ முத்தரையர் ஆவார். இம்மண்டபம் விசையை ஆண்டில் தொடங்கி பிலவங்க ஆண்டில் (சகாத்தம் 1524-32) எட்டு ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் நாடகம் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளது... கோயில் திருப்பணி பொறுப்பேற்றிருந்த பரதேசி முத்தரையனிடம் காளையார்கோவில் கூற்றத்து கரியமாணிக்கனும் தம்பி அழகனும் சாலியானேந்தல் நிலத்தை கோயிலுக்கு சகாப்தம் 1524 கொடுத்த

மூன்று தரை சோழ முத்தரையர்கள் (29 முதல் 32 வரை)

Image
நாடாண்ட முத்தரைய மன்னர்கள்: _________________________ சோழ முத்தரையர் (கள்): ______________________ 29. குன்று சூழ் நாட்டு முத்தரையன்: ---------------------------------------- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் குடுமியான்மலை சிகாநாதர் கோயிலில் தென்புரம் சுவரில் விக்கிரம ஆண்டு வைகாசி மாதம் 25ஆம் நாள் (15 ஆம் நூற்றாண்டு) கல்வெட்டு எண் 906 இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது... வலையரும், முத்தரையரும் ஒரே சாதி என்பதற்கு எடுத்துக்காட்டான சான்றாக இக்கல்வெட்டு விளங்குகிறது. முத்தரையர்கள் நாடாண்டவர்கள், ஏறத்தாழ ஐந்து நூற்றாண்டுகள் மன்னர்களாகவும் பல நூற்றாண்டுகள் ஆட்சியில் பங்கு கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். இவ்வாறு மகோன்னத நிலையிலிருந்த முத்தரையர், காலத்தின் கோலம் நிலைதடுமாறிய தொழில்களை மேற்கொண்டு உள்ளதை இக் கல்வெட்டு விளக்குகிறது. வலையரும் முத்தரையரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில் முத்தரையர்கள் மட்டும் பிற சாதியினர் இறந்துபட்ட போது கட்டைகள் முக்காடு இடுதலை தீச்சட்டி கொண்டு சுளுந்து கொளுத்துதல் காத்து சுடுதல் போன்ற இழிவான செயல்களை செய்து வர கட்டாயப்படுத்த பட்டுள்ளனர். இதேசமயம் சுபக

எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன் (முத்தரையர்களின் முதல் கல்வெட்டு)

Image
(எரிகல் முத்துராஜு தனஞ்சயவர்மன்) களமல்ல கல்வெட்டுப் பாடமும் விளக்கமும்... கல்வெட்டு பாடம்: ……../ కల్ముతురా / జు ధనంజ / య ఱు రేనా / ణ్డు ఏళన్ / చిఱుంబూరి / రేవణకాలు / (పం) పు చెనూరు కాజు / ఆఱికాశా ఊరి / ణ్డవారు ఊరి / న వారు ఊరిస…/ హాపాతకస / కు ….. / kalmutura / ju dananja / ya ru raina / ndu elen / chirumburi / raivanakalu (pam) / pu chenuru kaju / arikasa ori / ndavaru ori / na vaaru orisa…. / hapatakasa / ku … / கல்முத்துரா / ஜு தனஞ்ஜ / ய ரு ரைனா / ண்டு ஏலன் / சிறும்பூரி /ரைவணகாலு (பம்) / பு செனூரு காஜு / அரிகாசா ஊரி / ண்டவாரு ஊரி / னவாரு ஊரிச …. / ஹபாத கச / கு 1. ………………. 2. కల్ముతురా  கல்முத்துரா 3. జు ధనంజ  ஜ தனன்ஜ 4. య ఱు రేనా  ய ரு ரைனா 5. ణ్డు ఏళన్  ண்டு ஏலன் 6. చిఱుంబూరి  சிறும்பூரி 7. రేవణకాలు (పం)  ரைவணகாலு(பம்) 8. పు చెనూరు కాజు  பு செனூரு காஜு 9. ఆఱికాశా ఊరి  அரிகாசா ஊரி 10. ణ్డవారు ఊరి  ண்டவாரு ஊரி 11. న వారు ఊరిస…  னவாரு ஊரிச 12. 13. 14. 15. 16. హాపాతకస  ஹபாதகச 17. కు.  கு தனஞ்சயன்:- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன

முத்தரையர் கள்ளரா..??

Image
1881 ம் ஆண்டில் நடைபெற்ற சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முசிறி அருகே உள்ள ஒரு கிராமத்தில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த அம்பலகாரர்கள் தங்களை கள்ளர் சாதி என்பதாக  பதிவிடுவதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்கு புகார்  மனு ஒன்றை அனுப்பியுள்ளனர். மேலூர் வட்டாரக் கள்ளர்கள் வெள்ளையர் காலம் முதல் தங்களை 'அம்பலகாரர் ' என கூறிக் கொண்டமையால்  முத்தரைய அம்பலகாரர்களையும்  அக்காலத்தில் கள்ளர் சாதியாக கணக்கிட முனைந்துள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்றாகும்...      இதேபோல புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1931 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கீட்டிலும் கூட முத்தரையர் சமூகத்தின் உட்பிரிவினரான வலையர், சேர்வை, அம்பலகாரர் மக்களை கள்ளர் சாதியோடு சேர்த்து  கணக்கிட்டுள்ளனர்...  முத்தரையர்களுக்கும் , கள்ளர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் சிலரின் கடந்த காலத்திய தவறுகளால் இருசமூகத்தினரையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளும்போக்கு இன்றளவும் நீடித்து வருகிறது.  குறிப்பாக கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியரான ந. மு. வேங்கடசாமி நாட்டார்

இரணசிங்க முத்தரையர் கல்வெட்டு

Image
2017 கால பதிவு... இரணசிங்க முத்தரையன் கல்வெட்டு கண்டுபிடிப்பு "விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன்" பற்றிய 1100 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு ! ------------------------------------------ ------------------------------------------ முத்தரையர் மரபில் ஒன்பதாம் நூற்றாண்டில் தன்னாட்சி பெற்று ஆண்ட கோஇளங்கோ முத்தரையனின் சம காலத்தில் புதுக்கோட்டை பகுதியில் இந்த 'இரணசிங்க முத்தரையன் '  ஆதித்த சோழனுக்கு பக்க பலமாக இருந்து நாடாள்வாராகச் செயல்பட்டுள்ளார். நிருபதுங்கப் பல்லவனின் கல்வெட்டு குறிப்பிடும் "முத்தரையர் நாடு" பகுதியில் முத்தரையர்களின் நேரடி ஆட்சி நிறைவுற்றபிறகு ஒன்பதாம் நூற்றாண்டுவாக்கில் நாடுகட்டி ஆண்ட  முத்தரையர்கள் பின்னர் சோழப்பேரரசிற்கு உட்பட்ட நாட்டு அரையர்களாகவும், நாடாள்வாராகவும் மாற்றம் பெற்றனர். ( உதாரணம் - முத்தரையர் மரபினராகிய தானவதரையர்கள் ஆண்ட தானம நாடு) பிற்காலச் சோழராட்சியில் நாட்டுத் தலைவர்களாகவும், நாடாள்வாராகவும், அரையர்களாகவம் , படைத் தளபதிகளாகவும், போர் மறவர்களாகவும் மாற்றம் பெற்ற முத்தரையர்கள்  நீர்ப்பாசனப் பண