ஆதித்தன் மண்டலியான இராஜாதிராஜ வங்கார முத்தரையர்


வங்கார முத்தரையர்
---------------------------------------

குலோத்தூங்க சோழன் சோழ நாட்டை ஆண்டான். இவனுக்குப் பின்
3ஆம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகியோர் சோழ நாட்டை
ஆண்டனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் முத்தரையர் ஆட்சி மங்கத்
துவங்கியது. ஏற்கனவே இருந்த ராஜபரம்பரையினர் பதவி இழந்து,
தளபதிகள் போன்ற பெரும் அரச அலுவலர்களும், செல்வாக்குக் குறைந்து இருந்தனர்.

இவ்வாறு செல்வாக்கில் ஆட்சியில் சரிவு ஏற்பட்டும், வங்கார முத்தரையன் அந்தஸ்தில் சோழரிடம் நல்ல செல்வாக்குப் பெற்றவனாகவே
இருந்துள்ளான். இவனதுப் பெயராக புதுக்கோட்டை நகரில் வங்காரு
தெரு , என்றும் மண்டையூர் ஊராட்சியில் வங்காரன்பட்டி ஊரும் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய "வங்காரு தெரு இன்று கீழ 5,6,7 ஆம் வீதிகளாக மாற்றமடைந்துள்ளது
இங்கே முத்தரையர்கள் நிறைந்து வாழ்ந்தனர். இன்றும் முத்தரையர் நிறைந்த பகுதியாகவே இந்த
'வங்காரு தெரு" திகழ்கின்றது.

இந்த "வங்காரு முத்தரையர்" சோழனின் படையில், மண்டலியாக
தானைத் தலைவராகப் பணியாற்றி இருக்கின்றார். இவர்களின் ஆட்சிகாலத்தில், பாண்டியர்களுடன் உறவாகவோ, பகையாகவோ தொடர்புடன் வாழ்ந்துள்ளனர். பாண்டியர் வரலாற்றுப் புதினங்களில் இந்த "வங்கார முத்தரையன் இடம் பெற்று விளங்கியுள்ளான்.

புதுக்கோட்டையில் வங்கார தெரு இருந்த பகுதி "கலச மங்கலம்
என்றபெயரிலும், புதுக்கோட்டை வடமேற்குப் பகுதி, சிங்க மங்கலம் என்ற
பெயரிலும் முத்தரையர் நிறைந்து வாழ்ந்துள்ளனர். இவை சிறு
நகரங்களாக விளங்கி இருந்தன. புதுக்கோட்டையை வடிவமைக்கப்ப
நகராக அமைக்கத் திட்டமிட்ட தொண்டைமான் கி.பி.1812ஆம் ஆண்டில்
இந்த நகர்களை இரவு 2 மணிக்கு இரண்டாம் ராஜா விஜயரகுநி
தொண்டைமான் காலத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. திட்டமிட்டு தீயிட்ட பகுதி என மக்கள் குறை கூறிய போது, அம்மக்களை பொன்னம்பட்டி மலையீடு அன்னச்சத்திரம் மேட்டுப்பட்டி திருமலைரயபுரம் தோப்புக்கொல்லை கொத்த கோட்டை விஜயரெகுநாதபுரம் பிரசன்னா ரகுநாதபுரம் போன்ற பகுதிகளுக்கு அனுப்பினார்.
வங்காரு முத்தரையர் "வங்காரு சிங்கன்" என்றும் சிறப்புப் பெயர் பெற்றான் மூன்றாம் குலோத்துங்கச் சோழனுடைய கிபி 1181 இல் போர் படை தளபதியாக இருந்த வங்காரமுத்தரையர் திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்குன்றம் என்ற இடத்தில் ஒரு உள்ளான், (தொகுதி 7ல் க.எ.123ல்) வங்காரமுத்தரையர் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது இதில் "பொங்கும் சினப்படை சிங்கன் புரண்டு விழ செங்குன்றம் இன்று பிணக்குன்றம் ஆகியது" என்று போரின் உக்கிரத்தைக் கல்வெட்டு விவரிக்கிறது.

இந்தப் போரில் நூற்றுக்கணக்கான யானைகள் குதிரைகள் காலாட்படைகளை வெற்றி கொண்டுள்ளான் இந்த வங்காரமுத்தரையன். கேட்பாரற்று சிதறிக் கிடந்த பிணங்களை நாயும் நரியும் காக்கையும் கழுகுகளும் தின்றன என்ற பரணி பாடல் இங்கே தான் நடந்துள்ளது.

இவன் குலோத்துங்கச் சோழனின் 5 வது ஆட்சி ஆண்டில் கிபி 1183 தான் தருமங்களை எல்லாம் செய்துள்ளான். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் வட்டத்திலுள்ள திட்டக்குடி கோயிலில் எழுந்தருளியிருக்கும் பெருமானுக்கு அமுது படைக்க நிலத்தைக் கொடுத்துள்ளான். இந்த சமயம் பெரும் செல்வாக்குடன் விளங்கியுள்ளான்.
"வங்கார முத்தரையன்" இதில் "கடமையும், பாடி காவலும் இறையிலியாக கடந்தை ஆதித்தன் மண்டலியாக வங்கார முத்தரைய்ன்" விடுவித்து உள்ளான் இவன் பெரும் செல்வாக்குடன் ஆட்சியாளனாக அரசு செலுத்தும் அதிகாரியாக இருந்ததை தொகுதி 3 கல்வெட்டு எண் 295 குறிப்பிடப்பட்டுள்ளன.

குலோத்துங்க சோழனின் எட்டாவது ஆட்சி ஆண்டு கிபி 1186 காலத்தில் இந்த திட்டக்குடி கோயிலுக்கு பல தருமங்களைச் செய்து உள்ளான், "வங்காரமுத்தரையர்"அதனை, முற்றும், கடமையும், பாடி காவலும், இக்கோவிலுக்கு விட்டு சந்திராதித்தவற் காலம் வரை செல்ல கடவது என்று ஆணையிட்டு கல்வெட்டு விட்டேன் ஆதித்தன் மண்டலியான வங்கார ம
முத்தரையன் என்றே கூறுகிறது. இந்தச் செய்தி தொகுதி, 3 கல்வெட்டு என் 297ல் சிறப்பாக வெட்டப்பட்டுள்ளது.

குலோத்தூங்கச் சோழனின் 11ஆவது ஆட்சியாண்டில் கி.பி.1809ல் இந்த
வங்காரு முத்தரையன் இதே திட்டக்குடி கோயிலில் கோவிலில் கோவிலை
எழுப்பியுள்ளான். இந்தக் கோயிலில் வங்கார முத்தரையனால்,
எழுந்தருளிவித்த (எழுப்பட்ட) விச்சேசர தேவர்க்குப் பல தருமங்களைச் செய்துள்ளான். தான் செய்த தர்மம் என்றென்றும் நிலைத்து இருக்க
வேண்டுமென்ற விருப்பத்தில், சந்திரன். சூரியன், உள்ளரைக்கு்ம்
(சந்திராத்தித்தவர்) செல்ல விட்டேன் என்று கூறும் வங்கார முத்தரையன் தன்னை மண்டலியான ராஜ ராஜ
வங்கார முத்தரையன் என்று கல்வெட்டியுள்ளான். இந்த வரலாற்று செய்தியை க.தொகுதி 3ல் க.எண் 288ல் கூறப்பட்டுள்ளது.

தான் செய்த தர்மம் என்றென்றும் நிலைத்து இருக்க முத்தரையன் என்று கல்வெட்டியுள்ளான். இந்த வரலாற்றுச் செய்தி கல்வெட்டுத் தொகுதி 3ல் கல்வெட்டு எண்.288ல் கூறப்பட்டுள்ளது.

அதே கோயிலில் மூன்றாண்டு கழித்து திருக்கோயிலில் உடையார் ராஜராஜ வங்காரமுத்தரையர், நாயனார் விச்சேசுவர தேவரை எழுந்தருளச் செய்துள்ளான். இவனால் ஏற்படுத்தப்பட்ட கோவிலுக்கு உள்ளூர் வியாபாரி ஒருவன் எப்போதும் கோவில் விளங்க பொன் கொடுத்துள்ளான். க.தொகுதி 3 க.எண் 287ல் இந்த விவரம் கூறப்பட்டுள்ளது.

இரண்டாம் ராஜாதிராஜன் கி.பி.1163-1179 காலத்தில், இதே தீிட்டக்குடி
கோயிலில் திருவிடையாட்டம் காரியம் செய்ய வேண்டியுள்ளார். அதற்காக
தனக்குரிய நிலத்திலிருந்து, இவ்வூர் நிலத்தில் 5 வேலி (ஐவெல்லி) நிலம்
திருப்படி மாற்றுக்காக, கடமையும், பாடிகாவலையும் தவிர்த்து, (ஏனெனில்
கடமையும், பாடிகாவலையும் கோயிலுக்கு ஏற்கனவே கொடுத்து விட்டார்) கல்வெட்டிக் கொடுத்துள்ளார். இப்படி ஆணையிட்டு, கல்வெட்டியவன்
கடந்தை சேந்தன் ஆதித்தனான, ராஜ, ராஜ வங்கார முத்தரையன்
என்பவனே என்று கல்வெட்டு கூறுகிறது. இந்தச் செய்தி கல்.தொகுதி-லே
க.எண்.298ல் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது

முதலாம் ராஜேந்திரனின் மகன் காலத்தில் அதே விருத்தாசலம் வட்டம்
திட்டக்குடியில் கோயில் பணிகளுக்காக வாங்கார முத்தரையன் பல நிலக் கொடைகளை வழங்கியுள்ளான். இதனை இந்நாட்டுக் காணியாளன்
(நிலத்திற்குச் சொந்தக்காரன்) கடந்தை ஆதித்தன் மகன் புலிகன் ஆன ராசராச வங்காரமுத்தரையர் படிக்காவலான நிலங்களில் என்று கல்வெட்டு சிறப்பித்துக் கூறுகிறது. இச்செய்தியும் தொகுதி 3ல் க.எண் 280ல் உள்ளது.

ராஜராஜன் காலத்திலேயே இந்த வங்கார முத்தரையன் தஞ்சாவூர்
மாவட்டம், வேப்பங்குளத்தில் "வரத ஸ்ரீ வாங்கார முத்தரையன் ஒலை"
என்றே குறிப்பிடப்படும் கல்வெட்டில், ஜெயம்கொண்ட சோழ மண்டத்து
புரவுவரி, தினைக் கல நாயகன். ஊற்றுக் காட்டுக் கோட்டத்து நீர் வெளூர்
நாட்டு தொறு வன்காரனைப் பொந்தைப் பாக்கிழான் மகன் கச்சிப்பட்டு
திருக்காரைக் காடுடைய மகாதேவற்கு, திரு நொந்தா விளக்கு வைக்க 90
ஆடுகளைக் கொடையளித்துக் கல்வெட்டியுள்ளான். தொகுதி.3ல்
களண்.6ல் இச்செய்தி வெளிவந்துள்ளது.

இரஜேந்திர சோழனின் காலத்தில் ஆறாவது ஆட்சியாண்டில்
வேப்பங்குளம் கல்வெட்டிலேயே வரத ஸ்ரீ வங்கார முத்தரையன் ஒலை
எனத் தொடங்கி பெரும் பரையூர் ஊரவர், கண்டு, திட்டைக்குடி உடையார்
மளருடைய பெருமக்கள் மடப்புறமாக விடப்பட்டதை விளக்குகிறது. இந்தச்
செய்தியைக் கல்வெட்டுத் தொகுதி 3ல் க.எண்.278ல் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறப்புடன் விளங்கும் "வங்கார முத்தரையன்" பற்றி கிடைத்துள்ள கல்வெட்டுக்கள் இவையே ஆகும். இவையன்றி எத்தனை
மறைந்துள்ளதோ? நாமறியோம். இந்தக் கல்வெட்டுக்களில் காணி
உடையவன், கடந்தை ஆதித்தன் வங்கார சிங்கன், ஆதித்தன் மண்டலி, ராஜராஜன் வரத ஸ்ரீ வங்காரன் ஒலை என்றெல்லாம் சிறப்பித்து இவனைப்பற்றிய கல்வெட்டுக்கள் கிடைக்கும்போது வரலாறு இன்னும் விரிவடையும் வட ஆற்காடு மாவட்டம், திருவண்ணாமலை வட்டம் செங்குன்றத்தில் க.எண்.123ல் (11-1900) ஏ.ஆர்

1.முரு குந்து காஞ்சியும், வஞ்சியும் கொண்ட மொய்த்தார் மகதன் திரு
குங் களை க

2.ழல் விக்கிய நாள் சி பராந்தனில் பெருகுங் குருதிப்பு நல் வாய் தொறும்
பிலவாய் ம

3.துப் பருக்குங் குழுதுடன் செம்மை கொண்டாற்கும் பனிக் கடலெ 2 மட்டியன் றெ

4.றிய தார் புனை வாண (புரந்தர நி வெட்டிமின்றெ கொன்ற வெண்மணிப் பொடியுதிர வெள்ள

5.த் தொட்டி யென்றெனுந் தொல்லை வாண்டே
யன்றெ தெவ்வர் பாய் பரின்

6.த்தானை கலக்குவதே 2 வாரொன்று முழுமையாய், மற்றவ ரொன்றும் பழுது ரையார் மகதை வெ

7.ந்தன் பொரொன்று புரியா முன் பெரிய குறிச்சியி லெழுந்த புகை யெ சுண்டாய் காரென்று கன லெ

8.ரிமை மின்னென்று தளரெலக் காரைக் காட்டிலூ ரொன்று மதில் விழுந்த பொரெ வியு முருமதிர் வ

9.தொக்குங் காணெ 2 கொங்கும். கலிங்கமும், கொண்ட
கொடித்தெ ருதியார் தங்கும்பதி கொண்ட வா

10.ணாதி பா தணியாதது தென் கொல் பொங்கும் சினப்படை வங்கார சிங்கன் புரண்டு விழச் செங்குன்ற மின்

11.று பிணக்குன்ற மாக்கிய தெர்மன்னனெ 2 முனியொரு படைக் கூலை விட்

12.டரச ரானார், மூலதனமும், பரியு முறை யனி வாரித் தென்பகை யடக்கிய பின்

13.வாண குல தீபன் செய்த, தனியாண்மை வடதிக்கில் றி கிற்பீர்
பின்னொரு பொருப்ப

15.றை தவிர்த் தொரு குதிரை வலியால் வினை வாய்பறை தவிற் கொ
கோலின் வலி

16.யாலெ 2 சூழும் பிணவனை மேல் தொய் கழுகின் பந்தற் கீழ் வீழும்
கழுகினங்க்கள்

17.மெய் காப்ப வாழுந் தன் தொன்னகரெ போல் வடுகர், துஞ்சத்
துயிற்றியதே மன்ன

18.வர் கொண் மரகதர் கோன் வாள் 2 சொல்லிவிடு செரு மீனவர்
சூழுமுரிமை கொடாழ் கடலெ

19.ல்லி விடுபடை வெறுவ ரெனு மியமபுரியெறுவம் சொல்லி விடு முத
சாதிபா கூளி கருதி லருந்

20.புக வல்லி விடும் அயிராபதம் வான் வர விடு நாளையே உ

வங்கார முத்தரையனைப் பற்றிய கல்வெட்டுக்கள் தொகுதி 86
க.எண்.6, 278, 287, 288, 285, 295, 297, மற்றும் 298 ஆகியவத்
சிறப்பாகக் குறிப்பிடப்பட்டும் உள்ளது...

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER