Posts

வலைஞர்

Image
தமிழர்கள் கடலில் சென்று மீன் பிடிக்கும் தொழிலை மிக நெடுங்காலந்தொட்டு செய்து வருகின்றனர். சங்க இலக்கியங்களில் மீன் பிடிக்கும் தொழில் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப் படுகின்றன. கடலில் சென்று மீன்பிடி தொழில் செய்பவர்களை மீனவர் என்று இன்றைக்கு நாம் அழைக்கிறோம். இவர்களைச் சங்க காலத்தில் ‘வலைஞர்’ என்று சுட்டியுள்ளனர். ‘வலைஞர்’ என்பது வலையால் மீன்பிடிப்பவர் எனும் பொருளில் வரும் ஒரு காரணப் பெயராகும். சங்க இலக்கியங்களில் மீன் வகைகள் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன. மடு, குளம், கழனி போன்ற நீர்நிலைகளிலுமிருந்து மீன் பிடித்த குறிப்புகளும் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் ‘மீனவர்’ என்ற சொல் எங்கும் இடம் பெற்றிருக்கவில்லை. அகநானூற்றூப் பாடலொன்று கடலுக்குள் சென்று மீன்பிடிப்போனைத் ‘திமிலோன்’ என்றும் சுட்டுகின்றது. திமில் என்றால் ‘மீன்படகு’ (Tamil Lexicon,, ப.1880) என்பதாகும். ‘திண்டிமில் வன்பரதவர் (புறம். 24) என்று புறநானூற்றுப் பாடலொன்றும் சுட்டுகிறது. ஓங்குதிரைப் பரப்பின் வாங்குவிசைக் கொளீஇ திமிலோன் தந்த கடுங்கண் வயமீன் தழைஅணி அல்குல் செல்வத் தங்கையர் விழவுஅயர் மறுகின் விலைஎனப் பகரும

பாண்டிய நாட்டை ஆண்ட வலையர்கள்

Image
| பாண்டிய நாட்டை ஆண்ட வலையர்கள் | பண்டைய காலத்தில் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த மக்கள் தான் வணிகத்தில் மிக சிறந்தவர்களாக இருந்தார்கள். இதுக்கு காரணம் அவர்கள் அருகே இருக்கும் கடல் ஆகும். கப்பலில் பல நாட்டுக்கு சென்று பல பொருட்களை வணிகம் செய்தார்கள் நம் முன்னோர்கள். இதன் காரணமாகவே அவர்கள் மிகவும் செழிப்பாக இருந்தார்கள். 13 நூற்றாண்டில் பாரதம் வந்த மார்கோ போலோ எனும் இத்தாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் அவரின்  நாட்குறிப்பிள்  "உலகத்தில் மிகவும் பணக்கார தேசம் பாண்டிய தேசம்" என்று குறிப்பிட்டு உள்ளார். இதுக்கு முக்கிய காரணம் பாண்டியர்கள் செய்த வணிகம் ஆகும்.   அகநானூறு பாடலில் " அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித் துறைப் பரவ, பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை " இப்பாடல் பாண்டியனின் கொற்கைத் துறைமுகத்தில் பழையர் பழங்குடி மக்கள் நிறைநிலா நாளின் அந்தி வேளையில் தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், சங்குகளையும் போட்டு கடல் தெய்வத்தை வழிபட்டனர் என்று கூறுகிறது. இவர்களே கடல் வழியாக பல நாடு சென்று, வணிகம

குன்னாண்டார் கோவில் தல வரலாறு

Image
குன்னாண்டார் கோவில் தல வரலாறு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அமைந்துள்ளது குன்னாண்டார் கோவில். புதுக்கோட்டையில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த குன்னாண்டார்கோவில் (குன்று ஆண்டார் கோவில்) பகுதியில் உள்ள கல்வெட்டுக்களில் திருக்குன்றக்குடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரில் தாழ்வான ஒரு குன்றின் கிழக்கு பகுதியில் இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்தை சேர்ந்த (கி.பி. 710-715) குகைக்கோவில் உள்ளது. இது பல்லவர்களின் கீழ் சிற்றரசர்களாக ஆண்டு வந்த முத்தரையர்களின் படைப்பாகும். இது புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் குகைக்கோவிலை ஒத்து அமைந்துள்ளது. குகைக்கோவில் ஒரு கருவறையும், அதற்கு முன்பாக ஒரு சிறிய மண்டபத்தையும் கொண்டது. குன்றின் உச்சியில் சுப்பிரமணியருக்கு ஒரு கோவில் அமைந்துள்ளது. இது காலத்தால் மிகவும் பிற்பட்டதாகும். குன்று தோறும் குமரன் கோவில் அமைந்த காரணத்தால் பிற்காலத்தில் இக்கோவில் குன்றாண்டார் கோவில் என அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்கில் குன்னாண்டார் கோவில் என்று மருவியதாக கூறப்படுகிறது. குகைகோவில் கருவறையின் வெளிப்பக்கம் உள்ள சிறிய மண்டபத்தின் தெற்கு சுவற்றில் வ

முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு

Image
முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் கண்டெடுத்த திருவப்பூர் முத்துமாரி அம்மன் தல வரலாறு அன்னை முத்துமாரி இப்புண்ணிய பூமியில் தோன்றியப் பக்தர்களுக்கு அருள்பாலிக்க விரும்பினார். தக்கதொரு பக்தன் மூலம் வெளிவர காத்திருந்தார். இந்நிலையில் முத்தரையர் நாட்டு வேட அடியார்கள் இன்றைய திருக்கோகர்ணம் கோயிலுக்கு வடபுறத்தில் வாழ்ந்து வந்தனர் இவர்கள். கண்ணப்பர் குலத்தை சேர்ந்தவர்கள். கண்ணப்பர் வேட்டையாடி உணவு தேடும் பழக்கமும், வேட்டைப்பொருட்களை ஆண்டவனுக்கு படையலிட்டு மகிழும் குணமும், உடையவராய் பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். தினம் தினம் தான் வேட்டையாடி கொணர்ந்த மாமிசத்தை சுட்டுப் படையலிட்டு மகிழ்ந்தார். ஆண்டவனும் வனவாசியான வேடன் கண்ணப்பரின் அன்புப்படையலை ஏற்றுக்கொண்டார். ஒருநாள் தனது பாசமிகு பக்தனை சோதித்து புடம்போட ஆண்டவன் எண்ணினார். வேடன் கண்ணப்பர் தன்னை நாடிவரும் சமயம் தனது ஒரு கண்ணில் ரத்தம் வருமாறு செய்தார். பக்தர் கண்ணப்பர், இதனைக்கண்டு பதறினார். செய்வதறியாது, தனது கண்ணைத் தனது அம்பாலேயே தோண்டி எடுத்தார். இருகண்களும் எடுத்த நிலையில் ஆண்டவனின் கண்ணைப் பார்த்தால் மூடி ஒட்ட வைத்த

முத்தரையர்கள் கண்டெடுத்த ஸ்ரீ செகுட்டைய்யனார்

Image
முத்தரையர்கள் கண்டெடுத்த அய்யனார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிங்கம்புணரி அருகில் எஸ் கோவில்பட்டி உள்ள ஸ்ரீசெகுட்டைய்யனார் கோவில் வரலாறு... முன்பு ஒரு காலத்தில் வேட்டையாடுவதற்தா நம் ஆட்கள் குழுவாக சென்று வேட்டையாடுவதுமாக இருந்தனர் அன்றும் குழுவாக வேட்டையாட சென்ற வலையர்கள் சிறு சிறு குழுவாக பிரிந்து வேட்டையாட காட்டுக்குள் நுழைந்தனர்  அவர்களின் குழுவில் உள்ள ஒருவர் மட்டும் தனியாக கிழங்கு தோண்டும் போது ஓங்கி பாறையில் வெட்டியபோது தன் அந்த இடம் ரெத்த வெள்ளமாகவும் தன் கண்களில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடியத் தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் மயக்கம் வந்து அப்படியே நிலை தடுமாறி கீழே விழுந்தார் தன் முதலாளி கிழே விழுந்தை பார்த்த அவரின் செல்ல நாய் ரத்தம் வந்த இடத்தை பார்த்து பயந்து போன நாய் கத்திக்கொண்டே தன் குழு ஆட்களை தேடி சென்றது கத்திக்கொண்டே வந்த நாயை பின்தொடர்ந்து வந்த அவர்கள் இரத்த பாய்ந்து வந்தபடியே இறந்து கிடந்தவரை பார்த்து அதிந்து போய் இரத்தம் வரும் இடத்தை பார்த்து அதிர்ந்து போனார்கள் வெளியே வந்த செவிட்டய்யனாரை பார்த்து வெலவெலத்து போய் அய்யா இவர் தெரியாமல்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியை சுற்றியுள்ள முத்தரையர் கிராமங்கள்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை மையமாக வைத்து ஏறத்தாழ 20 கி.மீ சுற்றளவில் மட்டும் 110 ஊர்களுக்கும் மேற்பட்ட கிராமங்களில் முத்தரையர்கள் மிக மிக அடர்த்தியாக வாழ்கின்றனர்.  அவை பின்வருமாறு  🟣மதகுபட்டி கீழத்தெரு 🟣மதகுபட்டி மேலத்தெரு 🟣சலுகைபுரம் 🟣தச்சன்புதுபட்டி 🟣உச்சபுளிபட்டி 🟣ஊத்துபட்டி 🟣நமசுபட்டி 🟣முத்துபட்டி 🟣கருத்தன்பட்டி 🟣மேல அம்மச்சிபட்டி 🟣நடு அம்மச்சிபட்டி 🟣கீழ அம்மச்சிபட்டி 🟣சிலந்தகுடி 🟣கத்தபட்டு 🟣கத்தாலபட்டி 🟣சின்ன ஓலகுடி  🟣பெரிய ஓலகுடி 🟣நரியங்குடி 🟣ஆழவிளாம்பட்டி 🟣புத்தடிபட்டி 🟣கோவில்பட்டி 🟣அழகுலத்தான்பட்டி 🟣சொக்கநாதபுரம் 🟣இலந்தமங்கலம் 🟣மேல வெளஞ்சம்பட்டி 🟣கீழ வெளஞ்சம்பட்டி 🟣அம்மன்பட்டி 🟣பாகனேரி 🟣சடையம்பட்டி 🟣துரும்புபட்டி 🟣கொங்காருபட்டி 🟣கீழக்கோட்டை 🟣வீரப்பட்டி 🟣வளையாதிரினிபட்டி  🟣திருமன்பட்டி 🟣வில்லிபட்டி 🟣அழங்கன்பட்டி 🟣பெருமாள்பட்டி 🟣பாப்பாகுடி 🟣மேல சாலூர் 🟣கீழ சாலூர் 🟣பெருமாள்பட்டி 🟣குருந்தன்பட்டி 🟣செம்முனியான் பட்டினம் 🟣பேரனிபட்டி 🟣பிரவலூர் 🟣ஒக்கூர் புதூர்  🟣கொளக்கட்டை பட்டி 🟣ஒக்கூர் முத்தரையர் நகர் 🟣வலையர் புதுபட்டி (ஒக்குபட்டி)

மூக்கறுப்பு போரும் முத்தரையர் சமூகமும்

Image
"மூக்கறுப்பு போரும் முத்தரையர் சமூகமும்" வரலாற்றின் மிகக் கொடுமையான போர் முறைகளில் ஒன்றுதான் மூக்கறுப்பு போர். எதிரி நாட்டினரைக் கொல்லாமல், அவர்களின் மூக்கை மீசையுடன் அறுத்து நிரந்தரமான வடுவை ஏற்படுத்தி, முகத்தை சிதைப்பதுதான் அந்தப் போர் முறை. இவ்வாறான கொடூரமான போரை ஒரு சமயம் தமிழ்நாடு சந்தித்தது அதிலும் மதுரை சந்தித்தது, இந்த போரில் பெரிதும் பாதிக்கப்பட்டது இன்றைய தென் பகுதி மற்றும் கொங்கு பகுதி மக்களே ஆகும். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களிலே பெரும் புகழ் கொண்டவர் திருமலை நாயக்கர் ஆவார். இந்த திருமலை நாயக்கர் காலக்கட்டமான 16-ஆம் நூற்றாண்டில் மைசூர் அரசரான கந்திருவ நரச ராஜா என்பவர் தனது தளபதி கெம்பையா தலைமையில் பெரும் படை ஒன்றை திரட்டி மதுரையின் மீது போர் தொடுத்தான். இந்த பெரும் படையானது மதுரை நோக்கி செல்லும் போது திருமலை நாயக்கர் ஆட்சி எல்லையான சேலம் பகுதிக்குள் நுழைந்த உடன் கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரது மூக்குகளையும் வெட்டி மைசூர் மன்னருக்கு பரிசாக கொடுக்க சாக்கு பையில் குவித்து சேகரித்து பின்பு அதை மைசூருக்கு அனுப்பினான். தொட