Posts

அம்பலக்காரர் செப்பேடு

Image
அம்பலகாரர் செப்பேடு ____________________________ 63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் அம்பலகாரர் செப்பேடு  திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் 47 செ.மீ .நீளமும்,27செ.மீ அகலமும் 2.25 கிலோ எடையும் கொண்ட அறிய செப்பேடு ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இருபுறமும் தமிழில் 115 வரிகளில் அச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது .இதை ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளர்கள் புலவர்ராசு ,கொங்கு குழந்தைசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர் . நெடுநாள் ஓலைச்சுவடியில் இருந்த பட்டயம் 1878 ஆம் ஆண்டு செப்பேடாக வெட்டப்பட்டுள்ளது . மதுரையைச் சேர்ந்த சேது அம்பலக்காரர் சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் அன்னதான மடம் ஏற்படுத்தி திருவஞ்சைக்கனம் ஆத்மநாத பண்டாரம் வசம் மடத்தை ஒப்படைத்துள்ளார் . சோழ நாடு ,பாண்டிய நாடு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அம்பலகாரர் ,சேர்வைக்காரர் ,முத்துராயர் ,முத்திரியப்பார் ,வன்னியர் என்ற பட்டப்பெயர்  பெற்று வாழும் சேது அம்பலம் , சோமணம்பலம் , குமாரணம்பலம் ,முருகனம்பலம் ,வடுகனம்பலம் ,குரும்பனம்பலம் ஆகிய ஏழு பிரிவினரும்  அந்த ஏழுவகைத் தேவ அம்பலகாரர் தர்ம மடத்திற்கு உரியவர்கள் ,

முத்தரையச் சோழர் வரலாறு

Image
முத்தரையச் சோழர் வரலாறு ___________________________ முத்தரையர் என்கிற வழங்கு பெயர் தொன்மையான அரையர் குலத்தவர் என்கிற பொருளை வழங்கி நிற்கிறது. அப்படி எனில் அவர் எந்த அரசமரபில் தொன்மையானவர் என்று அது குறிப்பிடுகிறது என்பதே நமது ஆய்வு. முத்தரையரைப் போன்று பாண்டியர் என்கிற சொல்லும் பண்டைய அரையர் என்றும், பண்டைய அரச குலத்தவர் என்றும் கூறி நிற்கிறது. அவர்களையும் எந்த குடிவழியில் வந்தவர் என்றும் ஆராயவேண்டியுள்ளது. பாண்டியர் மீனவர் குடிவழியில் வந்தவர் என்று மிக எளிதாகக் கூறிவிடமுடியும். அதற்கு ஆதாரம் நிறைய உள்ளன. ஒரு புலவர் தென்திசையில் இருந்த பாண்டியரைக் குறிக்கவும், வடதிசையில் இருந்த கன்னட மற்றும் ஆந்திரர்களைக் குறிக்கவும் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளதை பார்க்கலாம். "தென்பரதவர் மிடல் சாய வடவடுகர் வாளோட்டிய” என்றுக் குறிப்பிடுகிறார். சோழன் இளஞ்சேட்சென்னி பாண்டியரையும், வடுகரையும் வென்றதையே இவ்வாறு குறிப்பிடுகிறார். எனவே பாண்டியர் பரதவ குலத்தவர் என்றும், மீன் கொடி அவர்களுகடையது என்றும் கூறிவிடலாம். ஆனால் சோழ நாட்டை ஆண்டுவந்த முத்தரையர் எக்குடியினர் என்பதை சற்று ஆழ்ந்து ஆராய்ந்துதான் கூ

இலக்கியங்களில் முத்தரையர்

Image
 இலக்கியங்களில் முத்தரையர் _______________________________ 1.கொங்கு மண்டல சதகம்; ------------------------------------------------------ "சொற்றவறா தோர் கனிவுலகத்தோர் துகலற நூல் கற்றவர், தங்கட்குதவுதல் நோம்பெனக் கொண்ட வராம் செற்றமிகும் முத்தரசர்கள்  வாழ்வு செழித் தரசும் மற்றும் புகழும் பெற்றாண்டதும் கொங்கு மண்டலமே" 2.தமிழரியும் பெருமாள் நூல்; -------------------------------------------------- "அங்காடி கொள்ளப் போய் யானை கண்டேன் அணி நகர மன்றினிலே, சேனை கண்டேன் கொங்காளும் முத்தரசர் தம்மைக் கண்டேன் கொடித் தேரும், பரிமாவுங் கூடக் கண்டேன் அங்கிருவர் எதிர் நின்று வெட்டக் கண்டேன் அது கண்டு யானைத் தலையைத் தாழ்த்தலுற்றேன் இங்கிதனை இன்ன தென்று இயம்பு வோர்க்கே எதிரில்லை இப்புவிக்குள் என்ற வாறே" 3.நாலடியார் இலக்கியம்; ---------------------------------------------------- பாடல்: 200 "பெரு முத்தரையர் பெரிதுவந் தீயும் கருணைச் சோறாவர் கய்வர் - கருணையைப் பேரு மறியார் நனி விரும்பு தாளாண் மை நீரு மகிழ் தாகி விடும்" பாடல்: 296 "மல்லன் மா ஞாலத்து வாழ்பவரு னெல்லான் செல்வ ரெனின

ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்

Image
ஓலைச்சுவடி மற்றும் செப்புப் பட்டயங்களில் முத்தரையர்  ____________________________________________ வரலாற்றை அறிய செப்புப்பட்டயங்கள் மிகவும் உதவியாக உள்ளன இதேபோல கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் வரலாற்றை நமக்கு தெரிவிக்கின்றன புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தகைய பல செப்பேடுகளும் மேலும் பகுதிகளிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் முத்தரையர் வரலாறு கூறும் செப்பேடுகள் பல உள்ளன அவை முத்தரையரைப் பற்றிக் கூறும் செய்திகளைக் காண்போம் 1.புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பேரூராட்சி அம்பலகாரர் திரு.மயிலப்பன் முத்தரையர் அவர்களிடம் கீழ்க்காண்ட ஒன்பது செப்பு ஏடுகள் உள்ளன. அவைகளில் சாலியவாகன சகாப்தம் 1400க்கு கிபி 1478க்கு மேல் செல்லாயி நின்ற நந்தன வருடம் வைகாசி மாதம் 9ஆம் தேதி வழங்கப்பட்ட செப்புப் பட்டயங்களில், ஆலவள நாட்டிக்கு வந்தவர்கள் பேய் வெட்டி மயிலாடி ஆவான் முத்திரியர், அமரன் முத்திரியர், ஆலமங்காட்டார் சொரிய முத்திரியர் ஆக நாலு வகை முத்திரியர் பற்றிக் கூறுகிறது. 2.இவரிடமே உள்ள சாலிவாகன சகாப்தம் 1400 க்கு மேல் செல்லா நின்ற விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி குறிப்பிடும் செப்புப் பட்டயத்தில், பேய் வெட்டி மய

சமயம் வளர்த்த முத்தரையர் சான்றோர்கள்

Image
சமயம் வளர்த்த சான்றோர்கள் ____________________________________ 1.திருமங்கை ஆழ்வார்; ----------------------------------------------- திருமங்கை ஆழ்வாரின் தந்தை பெயர் ஆலிநாடன். தாயார் வல்லித்திரு என்பதாகும். இவரின் இயற்பெயர் நீலன் என்று பெற்றோர் பெயரிட்டனர். இவர் காவிரி வளநாட்டில் திருவாலி நாட்டில் திருக்குறையலூர் என்ற ஊரில் கிபி ஏழாம் நூற்றாண்டில் பிறந்தார். இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்கி பல கலைகளையும் வைக்கப்பட்டார். இவர் இளமையிலேயே போர் கலையையும் கற்றுத் தேர்ந்தார். இவர் போர்த்திறத்தையும் உடல் வலிமையையும் வனப்பையும் வளர்த்துக் கொண்டிருந்தார், அப்போது நீலன் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையர் மன்னரிடம் படைத்தளபதியானர். சோழர்களை எதிர்த்த அரசர்களை எல்லாம் நீலன் வெற்றி கொண்டார் வெற்றிக்களிப்பில் தனது சேனாதிபதியை ஆலிநாட்டிற்கு அரசனாக்கினார். இந்த நாட்டிற்கு திருமங்கை என்னும் ஊர் தலைநகராக இருந்தது. நீலன் பகைவர்களுக்கு காலன் போல் விளங்கியதன் காரணமாக பரகாலன் என்ற சிறப்பு பட்டத்தையும் எட்டிக் கடம்பன் என்ற சோழ முத்தரையன் மன்னர் அளித்தார். இதனால் நீலன் என்பவரை திருமங்கை மன்னர் என்றே அனைவரும