Posts

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.வடபரிசாரநாட்டு ஆலத்தூரை அவினாசி ஈஸ்வரன் கோயிலுக்குத் தேவதானமாக அளித்த கல்வெட்டில். வளஞ்சியன் பள்ளம் என்ற பெயர் இவ்வூரில் வளஞ்சியர் (வலையர்) பெருமை பெற்றிருந்தனர் என்பதைச் சுட்டுகின்றது. 2.விஜயாலய சோழ முத்தரையர், முத்தரையர்களிடம் இருந்தே தஞ்சையை கைப்பறினார் என்கிற ஆய்வாளர்களின் யூகத்திற்கு முற்றுப்புள்ளி | இந்தளூர் மற்றும் கழுக்காணி முட்டம் செப்பேடுகள், பல்லவ மன்னன் கம்பவர்மனிடம் இருந்தே விஜயாலய சோழன் தஞ்சையை கைப்பற்றினார் என்று தெளிவுபடுத்துகிறது. 3.தேவர்மலை முத்தரையர்  குடைவரை கோயில் 👇 4.இலங்கைத் தீவில் 970 மீன் வலைஞர் சிற்றூர்களும் 400 முத்துக்குளிக்கும் கிராமங்களும் இருந்துள்ளது. அதில் முக்கால்வாசி ஊர்கள் கடல்கோளினால் அழிந்துள்ளது. 5.சங்ககால மீனவர்களின் குடியிருப்பு அமைப்பை கூறும் பெரும்பாணாற்றுப்படை | சிறிய குடிசை போன்ற வீடுகளிலும், பெரிய தூண்களையுடைய உயர்ந்த மாடங்களிலும் வாழ்ந்துள்ளனர். இந்நூல் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. 6.இருப்பைக்குடி கிழவன், எட்டிச்சாத்தன் என்கிற சத்ரு பயங்கர முத்தரையர் 7.இலங்கையை

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.கும்பகோணம் கே.சுந்தராம்பாள்  இயற்றிய துஷ்யந்த நாடக கும்மியில்  வரும் செம்படவ வலையர் பகுதி 👇 2.செம்படவன் என்கிற வலையரசன்  மகளான பார்வதி தேவியை  வலையன் வடிவில் வந்து மணம்முடித்த  இறைவன் | செம்படவர், வலையர். 3.வலையர் பாட்டு என்கிற பகுதியில் நிறைய தாலாட்டு பாடல்கள் உள்ளன அதை ஒவ்வொன்றாக பார்க்க இருக்கிறோம் 👇 4.முத்தரையர் போர் நிகழ்வுகளை குறிப்பவையாக உள்ள நாட்டுப் பாடல்கள், முன் வீச்சில் ஆயிரம் பேரையும், பின் வீச்சில் ஆயிரம் பேரையும் வீழ்த்தியதாக பாடல் குறிக்கிறது. 5.வலையர், வளஞ்சியர், (வலைவர், வலைஞர், வலையமான்கள்) விகுதிக்காகவும் இன்னோசைக்காகவும் (ஞ்) சேர்க்கப்பட்டுள்ளது. 6.லிங்கத் திருவுருவையும் விநாயகரையும் குடைவரையின் ஒரு பகுதியாகவே அமைத்தவர்கள் முத்தரையர்கள். 7.சங்கறுக்கும் வளையர்களான  பரதவர்களே மருவி வலையர்கள்  என்றாகியிருக்கிறது. (வளை-சங்கு) | நெய்தல் நில வளை சங்கு எனவும், குறிஞ்சி நில வளை வலை எனவும் வந்திருக்க வேண்டும். 8.நுளையர் பாடியில் வாழும் வலையர்களுக்கு தலைவராக இருந்தவர் அறுபத்து மூன்று நாயன

முத்தரையர் கல்வெட்டுகள்

Image
1.இருஞ்சோழ நாட்டுத் தலைவன் சத்ரு பயங்கர முத்தரையர் மனைவி | அரசி அணுக்கன் அப்பிநங்கை கல்வெட்டு | 2.கங்கர்கள் யாவர் என தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.... 3.வாணகோ முத்தரையர் தன் சித்தப்பா பொன்மாந்தனார் மீது படையெடுத்த போது, போரில் இறந்துபட்ட இரண்டு வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகற்கள். 4.இராவணபுகழ் சோலை என்கிற விச்சாதிர முத்தரையர் வட்டெழுத்து கல்வெட்டு. 5.சோழ மற்றும் கொங்கு நாடுகளை ஆண்ட முத்தரையர்கள். 6.பாண்டியர்களும் முத்தரையர்களும் தாங்கfள் அமைத்த குடைவரைகளில் இலிங்கத் திருவுருவை அதன் ஒரு பாகமாகவே உருவாக்கும் மரபைப் பொதுவாகப் பின்பற்றியுள்ளார்கள். 7.வளஞ்சியர் என்போர் வெண்முத்து வலையல் விற்ற மீனவ வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் கவரை வலைஞர், கவரை செட்டி, கவரை நாயுடு என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். 8.பூதிகளரி என்னும் அமரூன்றி முத்தரையன்; இவனின் கலைத்தொண்டை காணும்போது இவன் மிகப்பெரிய மன்னனாக இருந்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அரசமலை என்ற ஊராட்சியில்

| குகன் வழிவந்த வலையர்கள் |

Image
| குகன் வழிவந்த வலையர்கள் | இந்தியாவில் அனைவருக்கும் இராமாயணம் பற்றி தெரியும். ராமன், லக்ஷ்மணன், இராவணன், மேகனந்தன், கும்பகர்ணன், விபீஷணன், அனுமன் போன்றவர்கள் தான் ராமாயணத்தில்  முக்கியமான கதாபாத்திரங்கள். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல சமுதாயங்கள் இவர்களை தன் குடி என்று பெரும் அளவில் உரிமை கொண்டாடுவது இல்லை.   பெரும் அளவில் தன் குடி என்று நிறையா சமுதாயங்கள் சொல்வது குகன், வால்மீகி போன்றவர்களை தான். அதுவும் காலம் காலமாக கூறி கொண்டார்கள். வால்மீகி ஒரு வேட்டுவர் என்று கருதபடுகிறது. வேட்டுவ மரபே  சேர்ந்த கோலி, பேடர் (போயர், நாயகர்), வேட்டைக்கார நாயக்கர் என பலர்  வால்மீகி அவர்களின் வம்சத்தினர் என்று சொல்கிறார்கள். அதேபோல் நிஷாதராஜ அரசன் தான் குகன். நிஷாதராஜன் என்கிற சம்ஸ்கிருத சொல் தமிழில்  வேட்டுவ அரசன் என்று பொருள் ஆகும். ஆம், குகன் ஒரு வேட்டுவர். இவர் கம்ப இராமாயணத்தில் நாவாய் வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஆயிர கணக்கான கப்பல் வைத்து இருந்தார் என்று கம்பராமாயண சொல்கிறது.  இவரே ராமனுக்கு கப்பல் உதவியும் செய்தார் என்று நாம் அறிந்ததே. குறிப்பு: கேரளாவில் இருக்க

சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்

Image
சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்... இந்திய விடுதலை வரலாற்றில் முத்தரையர்கள் நேதாஜி படைப்பிரிவான INA வில் சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தன் உயிரை தியாகம் செய்த முத்தரையர்கள்... #அம்பலக்காரன் #பெரிய_தம்பி தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தொண்டியன்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் 1944ல் போர்முனையில் தன் உயிரை இந்த நாட்டிற்காக இழந்தார்... [FFPO எண். 6507/1970, 19.11.1970, TNSAC] #அம்பலம் #கருப்பையா: 1901 இல் பிறந்தார், மாவட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவேகம்பேட்டை பாப்னியை பூர்வீகமாக கொண்டவர் அப்பா பெயர் காளிமுத்து. அவர் 1942 இன் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார், மேலும் 147, 433 IPC மற்றும் DIR இன் 38 இன் கீழ் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, திருவாடானை மற்றும் மதுரை சிறைகளில் வைக்கப்பட்டு, இறுதியாக பெல்லாரியில் உள்ள வெல்லஸ்லி சானடோரியம் சிறையில், 1946 இல் இறந்தார். [ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சீட்டு, ச

| வன்னிய முத்துராஜா |

Image
| வன்னிய முத்துராஜா | வன்னியர் எனும் பட்டம் பல சமுதாயத்துக்கு உண்டு. வலையர், அம்பலக்காரர்(வலையர்), முக்குவர்,  இருளர், மறவர், கள்ளர், குறும்பர், பள்ளி, என பல சமுதாயத்துக்கு வன்னியர் பட்டம் உண்டு. மதுரையில் வன்னிவேலம்பட்டி எனும் கிராமத்தில் 90% வன்னியர் பட்டம் உடைய வலையர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.  அதே போல் வன்னியர் பட்டம் உடைய அம்பலக்காரர்கள் இன்று வன்னிய முத்துராஜா என்று அழைக்கபடுகிறார்கள். மேலும் பழனி செப்பேடு வன்னி முத்தரசர் பற்றி பேசுகிறது. இவர்கள் திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.  குறிப்பு: மதுரையை சேர்ந்த வன்னியர்கள் இலங்கை சென்று வன்னி வள நாட்டை உருவாக்கி ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் பிரபலமானவர் தான் பண்டார வன்னியன். மதுரையில் வன்னியர் பட்டம் உடைய சமுதாயம் வலையர்கள். நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை முத்தரையர் வரலாறு தேடல் நன்றி

மாலவல்லியின் தியாகம் | சரித்திர நாவல் | முத்தரையர் பகுதி |

Image
||மாலவல்லியின் தியாகம்|| இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 16 - விஷ விருட்சம்      அன்று தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் அரண்மனையில், மந்திராலோசனை மண்டபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.      பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும், போர் முறை நன்கு அறிந்த நிபுணர்களும், கூட்டங் கூட்டமாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து அவரவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.      தஞ்சை அரசர் முத்தரையர் கோபத்தினால் கொதிக்கும் உள்ளத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அமைச்சர் புலிப்பள்ளியார் கொடும்பாளூருக்குப் போய்க் கோட்டை ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த விஷயம் முதலில் ஆரம்பமாகியது.      புலிப்பள்ளியார் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினார்.      “அரசே, சபையோர்களே! கொடும்பாளூரில் தான் நாம் முதலில் வேரோடு களைந்தெறிய வேண்டிய விஷ விருட்சம் கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் தான் பழையாறை நகர் சின்னப் பயல் விஜயன் ஒண்டிக் கொண்டிருக்கிறான். அந்த விஷ விருட்சம் வெட்டப்பட்டு விட்டால், சோழ அரசைப் பற்றிய நினைப்புக்கூட யாரு