Posts

முத்தரையப் பாவலர் சேக்கிழார்

Image

கரிகால சோழ சூரிய முத்தரையர்

Image

வள்ளல் கவுண்டர் வம்சாவளி

Image
வள்ளல் கவுண்டர் வம்சாவளி வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, வம்சாவளி முதலான கைபீயிது, புக்கு…. தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், வள்ளல்க் கவுண்டன் யெண்ணப்பட்ட தலைய நாட்டுப் பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கைபீயிது யென்னவென்றால்:- பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, ஈசுவறனுக்கு அதிபகுக்தி, ஓடேன தன்னுடைய ஆசாரத்துடனே மாமிசங்கள் நாலே பூசை பண்ணிக் கொண்டு வந்தான். தின பிறதியாஇ ஆரு நாள் பூசை பண்ணினதில் ஆறானாள் பூசை பண்ணுகுரதுக்கு வந்த சமயத்தில் ஈசுவறனுக்கு தின காலத்தில் பூசை பண்ணப்பட்ட சிவகோசறி யெண்ணப்பட்ட பிராமணற்மாம்சம் பூசை பண்ணி கொண்டு அனாசாரம் பண்ணுகுரவனை பிடிக்க வேணும்படியாக யோசிச்சு யிறுந்து சுவாமி அவனுடைய சொப்பனத்தில் அந்த அனாசாரம் செயிதவனுடைய பகுத்தியைக் காண்பிச்சு குடுக்குரோமே(ன்)றும் னீ வனத்தில் ஒளி

திருமங்கையாழ்வார் முத்தரையர் வேடுபறி திருவிழா அழைப்பிதழ்

Image

வள்ளல் அண்ணாமலை முத்துராஜா

Image
"வள்ளல்_அண்ணாமலை_முத்துராஜா" வள்ளல் அண்ணாமலை முத்துராஜா, திருச்சி வரகனேரியில் கணபதி முத்துராஜா,பாப்பாத்தி ஆகியோருக்கு 21.8.1902-ஆம் ஆண்டு முத்தரையர் சமுதாயத்தில் பிறந்தார். முத்தரையர் சமுதாயத்தின் விடிவெள்ளியாக உலகிற்க்கு அய்யா அவர்கள் விளங்கினார் . தனது 19-ஆம் வயதில் ஞானாம்பாளை மணம் முடித்தார். தங்களுக்கு குழந்தை இன்மையால் அய்யாதுரை முத்துராஜாவை தத்தாக எடுத்துக் கொண்டார். 1932 முதல் திருச்சி மாவட்ட வியாபாரிகள் சங்க தலைமை ஏற்று 22 ஆண்டுகள், தான் காலமாகும் வரை தலைவராக இருந்துள்ளார். திருச்சி சமாதான சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 1953-ல் இருந்து 1955 வரை திருச்சி நகராட்சி துணை தலைவராகவும் 1955-ல் இருந்து 1957 வரை திருச்சி நகராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். 1957-ஆம் ஆண்டில் இருந்து காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து அன்றைய "அந்தநல்லூர் சட்டமன்ற தொகுதியில்" வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் ஆனார். இந்த காலக்கட்டங்களில் திருச்சி நகராட்சி பகுதிக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற பணிகள் ஏராளம். இவரின் சிறந்த பணிகாரணமாக மூன்று முறை தலைவராக இருந்துள்ளார். நகர வளர

பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர்

Image
பரங்கிரி வேலுப்பிள்ளை முத்தரையர் பிள்ளை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் பொருளாதாரத்தில் மேன்மை அடைந்த அனைத்து சமுதாய மக்களும் பெயருக்குப் பின்னால் பிள்ளை என்று அழைப்பது வழக்கம் மேலும் 29 பட்டபெயர்களில் பிள்ளை பட்டமும் உண்டு 1906ல் திருச்சிராப்பள்ளி முத்துராஜா மகாஜன சங்கத்தை நிறுவியவர் திருச்சி நீதிமன்றம் அமைந்திருக்கும் இடத்தை தானமாக வழங்கிய 5முத்தரையர்களில் முதன்மையானவர் இன்றளவிலும் திருச்சி கோர்ட் அருகே பரங்கிரிவேலுபிள்ளை முத்தரையர்_பூங்கா அமைந்துள்ளது (இவர் தற்போது குழ.செல்லையா அவர்கள் தோற்றுவித்த தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் தலைவராக இருக்கும் ஐயா.ராமலிங்கம் அவர்களின் பாட்டனார் ஆவார்)  ஆவணம் #சோழநாடு_முத்தரையர்_சங்கம்

வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!

Image
வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரி!  குடியாத்தம் - சித்தூர் சாலையில் குடியாத்தத்தில் இருந்து 10கிமீ தொலைவில் அமைந்துள்ள ஊர் கல்லப்பாடி அவ்வூரின் அருகே வெங்கட்டூரில் ஒரு தனியார் வயலில் மூன்று நடுகற்கள் தற்போது பாதி புதைந்துள்ள நிலையில் காணப்படுகிறது. அவை மூன்றும் ஒரே காலக்கட்டத்தை சேர்ந்ததாக தெரிகிறது. அவை வீரபாண்டியன் தலைகொண்ட கோப்பரகேசரியான ஆதித்த கரிகாலனின் மூன்றாவது (கிபி 958) ஆட்சியாண்டை சேர்ந்தது. மூன்று கல்வெட்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. இவ்வூரில் இருந்து தொறு (பசுக்கள்) கொள்வதற்காக வணிகர்கள் சிலர் அவர்தம் அடியாட்களுடன் திருவூரல் சென்று தொறு மீட்டு திரும்பும்போது கோட்டுபூசலில் சோளனூர் எனும் ஊரழிஞ்சி இறந்திருக்கிறார்கள்.  விக்ரமாதித்தனாகிய தன்ம செட்டி மகன் சாத்தயன் என்பவருக்கு அடியானாக முத்தரை(ய)ன் காரி என்பவரும் உடன்சென்று கோட்டுபூசலில் உயிர்விட்டிருக்கிறார். அவருக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது.  கல்வெட்டில் சேங்குன்றத்து 'தூமடைப்பூர்' என குறிப்பிடப்பட்டுள்ளது. சேங்குன்றம் எனும் ஊரானது குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலைய