வள்ளல் கவுண்டர் வம்சாவளி


வள்ளல் கவுண்டர் வம்சாவளி

வள்ளல் கவுண்டன் யெண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாரனுடைய, வம்சாவளி முதலான கைபீயிது, புக்கு…. தாறாபுரம் துக்கடி அறவகுறுச்சி தாலூகா கசுபாவுக்கு சேற்ந்த மஞ்சறா பூமிதெலத்துலே யிறுக்கும், வள்ளல்க் கவுண்டன் யெண்ணப்பட்ட தலைய நாட்டுப் பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கைபீயிது யென்னவென்றால்:- பூற்வத்தில் குறுகுல வம்சமான செத்திரிய சாதியில் ஸ்ரீகாள ஹஸ்திபுரத்தில் வாசமாயிறுக்கப்பட்ட உடுப்பூறில் நாகறாசாயென்ங்குறவற் குமாரற் திண்ணநாற் யெங்குறவன் தேவாம்சைய குணாதிசயம்கள் நாலே வனத்தில் வேட்டைக்கு போஇ பட்சிகள் மிறுகங்களைக் கொண்டு வந்து, ஈசுவறனுக்கு அதிபகுக்தி, ஓடேன தன்னுடைய ஆசாரத்துடனே மாமிசங்கள் நாலே பூசை பண்ணிக் கொண்டு வந்தான். தின பிறதியாஇ ஆரு நாள் பூசை பண்ணினதில் ஆறானாள் பூசை பண்ணுகுரதுக்கு வந்த சமயத்தில் ஈசுவறனுக்கு தின காலத்தில் பூசை பண்ணப்பட்ட சிவகோசறி யெண்ணப்பட்ட பிராமணற்மாம்சம் பூசை பண்ணி கொண்டு அனாசாரம் பண்ணுகுரவனை பிடிக்க வேணும்படியாக யோசிச்சு யிறுந்து சுவாமி அவனுடைய சொப்பனத்தில் அந்த அனாசாரம் செயிதவனுடைய பகுத்தியைக் காண்பிச்சு குடுக்குரோமே(ன்)றும் னீ வனத்தில் ஒளிஞ்சியிறு யென்று சொன்னாற். அப்போ அந்த காரணாற்த்தத்துக்கு ஆக ஈசுவறன் தம்முடய நேத்திரங்களிலே ஒறு நேத்திரம் ஒளிகும் படியாஇ காண்பித்தாற். அதை பாத்து மாம்ச பூசை பண்ணப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் சுவாமிக்கு கண்ணு போஇ விட்டது யெண்ணும்படியா யெண்ணி தன்னுடைய கண்ணை ஒண்ணு ஆயுதத்துநாலே யெடுத்து, சுவாமிக்கு வைச்சான். மறுபடி ஈசுவறன் நேத்திரம் ஒளுகும்படியாக பண்ணிநாற். மறுபடி திண்ணனாற் யெங்குறவன் தன்னுடைய ரெண்டான் கண்ணைப் பிடிங்கி வைக்க வேணும்படியாக யெண்ணி, சுவாமினுடைய நேத்திரத்தை தன் காலுனாலே மிதிச்சுக் கொண்டு தன் கண்ணை பிடிங்கி வெச்சான். அந்த சமயத்தில் சுவாமி யிவனுடைய பகுத்திக்கு மிகவும்சந்தோஷப்பட்டு விறுஷப வாகனாறுடறாயி பிறதிட்சணமாஇ னீ யென்னுடைய பகுத்தன் யென்று சொல்லி கைலாசத்துக்கு வறவளைச்சு கொண்டாற். மேல் யெளுதப்பட்ட திண்ணநாற் யெங்குறவன் மாம்ச பூசை பண்ணி முகுத்தி பெற்று வேட குலனென்றும் கண்ணப்ப னென்றும் பேறாச்சுது. அந்த வம்சத்தில் உள்ள வம்ச பரம்பரைக்கு வேட்டுவ சாதியென்று பேற் வுண்டாச்சுது.

வேடகுல சாதியில் காள அஸ்தி பிறதேசங்களுக்கு றாசாவா இறுக்கப்பட்ட வம்ச பறம்பரையிலே முத்துறாசாக்கள் கூட்டமென்று பேற் பிறசுத்திப்பட்டு யிறுக்கும் நாளையில்…. அக்காலத்தில் கொங்கு தேசமான சேறன் றாச்சியத்தில் சிவ பிறாமணாள்,செட்டியள் காணியாட்சிக்காறறாயி இறுக்கும் நாளையில் அக்காலத்தில் றாச்சியாதிபதிகளான சோளசேற பாண்டிய மூணு றாசாக்களிடத்திலேயும் வல்லுவக்கானும் அச்சுத களப்பாளன் ஒட்டியன் யிந்த மூன்று பேறும் யிந்த றாச்சியங்களிலே அங்காமி பண்ணிக் கொண்டு யிறுக்கும் நாளையில் சிவபிறாமண செட்டிகள், அங்காமிக்கு பொறுக்க மாட்டாமல், பாண்டிய றாசா அவற்கள் யிடத்தில் போஇ சொல்லி கொண்டாற்கள் அப்போ அந்த மூன்று பேரையும் பிடிக்குரதுக்கு அகப்படாமல் போனபடியநாலே அந்தத் திறுடனெ பிடிக்கத் தக்க மனுஷாளை யேற்ப்படுத்திக் கொண்டு வந்தால் அவாளுக்கு ஆதீனம் உண்டு பண்ணி குடுக்குரோமென்று பாண்டிய றாசா வுத்திர பண்ணிநாற். காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து றாசாக்கள் கூட்டத்தில் சிவபிறாமணாள் செட்டியள் போஇ யிந்த அங்காமி சேதிகள் யெல்லாம் சொல்லிக் கொண்டு பாண்டிய றாசா வுத்திரவு செயித சேதி அறிய பண்ணினார்கள். அப்போ புன்னாடி கோத்திரத்தில் தன்ண்டெறி முத்துறாசா யெங்குற பேறுண்டானவன் சிறுது சனத்துடனே பிறக்கப்பட்டு சிவ பிறாமண செட்டியளையும் கூட்டிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்து வந்து அந்த சில்லரை பண்ணிண மூன்று பேரையும் பிடிச்சி குடுக்குரோமென்று சொல்லிக் கொண்டு பாண்டிய றாசாயிடத்தில் பாக்கு வெத்தலை வாங்கிக் கொண்டு ஒட்டியன் யெண்ணப்பட்டவனையும், அவனைச் சேற்ந்த சனங்களையும் வெட்டி செயித்து செயம் கொண்டு வந்தபடிநாலே பாண்டிய றாசா மிகவும் சந்தோஷப்பட்டு, வேட்டுவ றாசாக்களென்று பேறும் குடுத்து யிந்த நாட்டில் பாடி பனிரெண்டு மூன்றி முப்பத்தி ஆறுக்கு மேலான காணியாஷ்சியும் உண்டு பண்ணி குடுத்து அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் ரொம்பவும் தயவுநாலே தம்முடைய பேறான சவுந்திர பாண்டிய தண்டேறி முத்துறாசா யென்ங்குற பெரையும் குடுத்து முன் முத்து றாசாவுக்கு வுண்டான வசவசெங்கறடால், புலிக்கொடி, வெள்ளைக்கொடை முதலான விறுதுகள் அல்லாமல் பல்லக்கு,சாமதுரோக ஹரவெண்டயம்,குதிரை மேல் டக்கா, ஒட்டகை மேல் நகாறு, ஆனைமேல் நலபத்து, யெறுத்து மேல் தம்மட்டம், சங்கீத மேளம், பூறிகை, காஹள பேறி சின்னம், பக்கா-யிது முதலான பிறுதுகளும் குடுத்து மணலூறுக்கு சேந்தபாடி பனிரெண்டு முப்பத்தி ஆறு கிறாமங்கள், உள்ப்பட்டட சீமைகழு பட்டாதி காறியாஇ பட்டாபிஷேகம் பண்ணிவிச்சு குடுத்தாற்கள்.

சவுந்திர பாண்டிய றாசா அவற்கள் கடாட்சயத்துநாலே மணலூறுக்கு சேற்ந்த சீமைக்கு பாளைகற் பிறுபுத்துவக் காறாயி சகல பிறுதுகளும் பெற்றவற்களாயி சவுந்திர பாண்டிய முத்து றாசா யென்ங்குற பேற் பிறசுத்தி பட்டவ றாயின தலையூறுலே கெடி உண்டு பண்ணி கொண்டு பாளைகற் ஆதிபத்தியம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள்.

அந்த நாள் முதல் பரம்பறையாஇ மணலூறு சீற்மைக்கு சேற்ந்த பாளையகற் பிறபுத்துவத்துக்கு பட்டதிகாறியானவற் களுக்கு சவுந்திர பாண்டிய னென்ங்குற பேற்பெறசுத்தியாஇ உண்டான சொற்களாயி பிறபுத்துவம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். அதின் பிற்க்காலம் வம்ச பறம்பறையிலெ பட்டாதிகாறியான சவுந்திர பாண்டிய வேட்டுவன் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியானவற்கள் பேரில் சோள றாசா உயுத்தம் பண்ணி கொண்டு யிறுந்த சமயத்தில் சோள சமுஸ்தானத்தின் பேறில் பாண்டிய சமுஸ்தானாதிபதி தண்டு யெடுக்கும்போது தமக்குள்ளாக யிறுக்கப்பட்ட பாளையப்பட்டாற் முதலான பேரையும் வறச் சொல்லி உத்திரவு ஆயி மதுரை சமுஸ்தானத்துக்குப் போயிறுக்கும் போது தண்டு யெடுத்து பாளையம் யெறங்கின சமயத்தில் கூடாரம் அடிக்க வேண்டியதுக்காக கல்லுகளை யெடுத்துக் கொண்டு வரச் சொல்லி மணலாற் சீற்மைக்கு பாளைகறான செனங்களுக்கு உத்திரவு பண்ணினாற்கள். அப்போ அந்த கல்லுயெடுத்துக் கொண்டு வாரவேலை வெட்டி வேலையென்றும், அப்படிவெட்டி வேலை நாங்கள் செயிகுரதுயில்லை யென்று சொன்னார்கள். அது சேதி பாண்டிய றாசா அவற்கள் கேள்விப்பட்டு சவுந்திர பாண்டிய வேட்டுவரை தரிவிச்சு வுன்னுடை சனங்களை கல்லுகள் யெடுத்துக் கொண்டு வறச் சொன்னதுக்கு வெட்டி வேலை செயிகுரதுயில்லை யென்று சொன்னாற்களே, ஒனக்கு அடுப்புக்கு கல்லு வேணுமே அது யெடுத்துக் கொண்டு வாரதுயில்லையா வென்று கேட்டாற்கள். அது வெட்டி வேலையானதால் கல்லை யெடுக்குரது யில்லை யென்று சொன்னாற். பாண்டியறாசா அது சேதிகளுக்கு மனசுலே ஆயாசம் தோண்ணி னீ சமயல் யெப்படி பண்ணுவாஇ யென்று கேட்டாற். நான் அதுக்கு தலையெ வெட்டி அடுப்பு வச்சு சமயல் பண்ணு ஓமென்று சொன்னாற். அன்னேறத்தில் ரெண்டு மூணு பேரை தலெயெ வெட்டி அடுப்பு கூட்டி சமயல் பண்ண சொல்லி சொன்ன யிடத்தில் சமயலும் ஆயி, தலையும் வெடியாமல் யிறுந்த படியனாலே, பாண்டிய றாசா அதைக் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டு, யிவாள் யிடத்தில் சாத்திர தற்மமும் ரொம்பவும் யிறுக்குரது யென்று தோணப்பட்டு யினிமேல் யிப்படிக்கு செய்ய வேண்டா மென்று உத்திரவு செயிது, மணலூறு நாட்டாரென்று உண்டான பாளையகறுக்கு தலையநாடு யென்று பேர் குடுத்தாற்கள். அதுநாலே தலையனாடு யென்றும் தலையூர் நாட்டு பாளையகற் ஆதீனத்துக்குப் பட்டக்காறு யென்றும் தலைய நாட்டு பாளையகாற் ஆதீனத்துக்குப் பட்டக்காறு யென்று வம்ச பறம்பறையிலே சவுந்தறபாண்டிய பாளையகரென்று பிறசுத்திப்பட்டு யிறுந்தாற்கள்.

அதின் பிற்க்காலும் தலைய நாட்டு பளையகற் ஆதீனத்து வம்ச பறம்பறையிலே கனக சபாபதி பாண்டியன் யென்னப் பட்டபேற் உண்டானவற் நாளையில் திறுஞான சம்பந்த கண்ணுடைய வள்ளலாற் மடத்துக்கு சீஷநான படியனாலே வள்ளல் யென்று பேற் வரப்பட்டது. அந்த நாள் முதல் சிவ சமயசையில் சித்தாத்த ஆசாரங்களாஇ நடந்து கொண்டு அறமனையாற் குடுத்த கிதாபும் குறுமனையிலே வுண்டான பேறும் கூட்டி கனகசபாபதி பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டாற்களாயிருந்தார்கள். மேல் யெளுதப்பட்ட வம்ச பறம்பறைகளுக்கு போகுகாலமான படியனாலேயும் தகவலாயிறுக்கப்பட்ட ஆதறவுகள் ராசீகங்களிலே கைதப்பி போனபடியநாலேயும் யித்தினை தலைமுரை யென்று தெறியவில்லை.

சாலீவாகன சகாபுதம் 1315 முதல் நாளத வரை பட்டம்ங்களும் வறிசைகளும் அவாளவாளுடைய நடைதைகளும் யிதின் கீளை யெளுதி வறுகுரது.

1. அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 37

2. யிவற் குமாரன் தண்டெறி முத்தய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 22

3. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 23

4. யிவற் குமாரன் அன்னதான பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 34

5. யிவற் குமாரன் வாரணவாசி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 45

6. யிவற் குமாரன் மெயிப் பொறுள் நாத பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 10

7. யிவற் குமாரன் சொக்கய பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 44

8. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 53

9. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 35

10. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 50

11. யிவற் குமாரன் கனக சபாபதி பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 15

12. யிவற் குமாரன் சவுந்தற பாண்டிய வள்ளல் பட்டம் ஆண்டு 18

——— ———– 12 391 ———– ————

சாலிவாகன சகாபுதம் 1706 வருஷம் வரைக்கும் தலைமுரை 12க்கும் வருஷம் 391க்கு அவாளவாளுடைய னாளையில் நடந்த நடத்தையள் கீளே யெளுதி வறுகுரது.

முதல் தலைமுறை பட்டக்கார் அலகடம் செயித கையிக்கு ஆளியிடு பாண்டிய வள்ளல் நாளையில் சிறு புள்ளையாஇ யிறுக்குர போது, சிறுது ஆபரணங்கள் அலங்கரிச்சு யிறுக்குர சமயத்தில் கம்மாள சாதியில் ஒறுவன் னோட்டக் காரர் உத்தியோகத்திலே யிறுக்கப்பட்டவன். அந்த ஆபறணங்களுக்கு ஆசைப்பட்டு அந்த கொளந்தை பேறில் யிறுக்கப்பட்ட ஆபறணங்களெ யெல்லாம் வாங்கிக் கொண்டு அந்த கொளந்தைய்யை கெணத்துலே தள்ளி போட்டான். அந்த சமயத்தில குளந்தையானவன் கிணத்துக்குளேயிறுந்து விறுஷசத்தின் வேரை ஆதறவு பத்திக் கொண்டு கிணத்த வாறியிலே மேடேறி ஒளிஞ்சி கொண்டு யிறுந்தான். அந்த சமயத்திலே தாயாறு தொப்பனாற் சனங்கள் யெல்லாம் குளந்தைய்யெ காணமென்று தேடி கிணத்துலே யிறுந்த குளந்தையெ கண்டுபிடிக்கும் யிடத்தில் அபொ தாயாரை தோப்ப நாறை தன்னை வதை பண்ண வேணுமென்று னினத்து கிணத்துலே தள்ளின கைக்கு விறுது போடுவிக்க வேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டு அநத கம்மாள சாதி னோட்டக்காரனை தரிவிச்சி அவன் கைக்கு பொன்னாளி மோதிரமும் போட்டு அவனுக்குப் பொன்னாளி நோட்டக்கார னென்று பேறும் குடுத்து யிந்த தலைய நாட்டில் சேற்ந்த முடக்காறு முதலான கிறாமங்களிலே னோட்டக்கார காணியாட்சி உண்டு பண்ணி குடுத்த பாடியனாலே அலகடம் செயித கையிக்கு ஆளியிட்ட பாண்டிய வள்ளல் யென்று பேற் பிறசுத்தி பட்டவறாயி பட்டம் ஆண்டு கொண்டு பேறியவாள் சம்பாதிச்ச ஆதீனம் பறிபாலனம் பண்ணிக் கொண்டு வந்தாற்கள். ரெண்டான் தலைமுரை முதல் னாலான் தலைமுறை அன்னதான பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு பூமிதெலத்தில் கோட்டை கொத்தளம் போட்டுவிச்சுக் கொண்டு அன்னதானகாற் யென்று பேற் பெறகத்திப் பட்டவளாயிறுந்தாற்கள். அஞ்சான் தலைமுரை வாணவாசி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற் அவற்கள் துரைதனம் ஆண்டு வறும் காலத்தில் றாசாக்கள் தயவுக்குப் பாத்திரனாயி காத்துக் கொண்டுயிறுந்துஅறமனை யாற் கட்டு(லேயிருந்த) வூளியத்தில் சாகுறுதயாஇ முன்னிலைக்காரனாயி யிறுந்து… தலைய நாட்டு கிறாமங்களில் சேற்ந்த சீற்மைய்யை சுத்த சாரியாஇ அனுபவிச்சுக் கொண்டு பூமீதெலத்தில் போயி கிணறுகள் உண்டு பண்ணிக் கொண்டு பிறசுத்தி புறுஷனாயி யிறுந்தாற்கள். அக்காலத்தில் பூமிதெலம் பாளைகற் கெடியில் ஆனை, குதிரை முதலான சங்கத்துடனே யிறுக்கும் வேளையில் சிலுக்கால் பொம்மய னாயக்கனுக்கு குமாற வற்க்கமென்று பேறும் குடுத்து ண்டிபட்டி கிறாமமும் உம்பளிக்கையாக விட்டாற்கள்.

ஆறான் தலைமுரை பட்டக்காரன் முதல் ஒன்பதான் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாள் வரைக்கும் பூற்வத்தில் பெறியவாள் சம்பாதிச்சு யிறுக்கப்பட்ட ஆதீனம் விளங்க பண்ணிக் கொண்டு அவாளுக்கு உண்டான பிறுதுகள் ளொடனே அந்தந்த காலத்தில் பிறபுத்துவம் பண்ணப்பட்ட றாசாக்கள் தயவுக்கு பாத்திறநாயி காத்துக் கொண்டு அறமனை யாற்கட்கு பண்ணினபடிக்கு பணமும் செலுத்திவிச்சு கொண்டு பிறசுத்தி புருஷாளாயிறுந்தாற்கள்.

பத்தான் தலைமுரை சவுந்திற பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் பாண்டிய தேசாதிபதியான னாயக்கற வற்கள் சமட்சமத்தில் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு யிறுக்கும் நாளையில்யிந்த தலையநாட்டு சீற்மைக்கு பெஷ்க்கா வருஷம் 1 க்கு முவ்வாயிரம் பொன்னும், அரமணை காரியத்துக்காக வறப்பட்ட மனுஷாள் னித்திராபங்கம் பண்ணாத யிறுக்கும்படியாஇ நித்திரை வேளைக்கு யெளுப்பாமல் யிறுக்குரதுக்காக வருஷம் 1 க்கு ஆயிறம் பொன்னும் செலுத்திக் கொண்டு கிறாமங்கள் அனுபவிச்சுக் கொண்டு பிறசிதி புறுஷாளா யிறுந்தாற்கள்.

பதினோறாம் தலைமுரை கனகசபாபதி பாண்டிய வள்ளல் நாளையில் அக்காலத்தில் றாச்சிய பிறபுத்துவம் பண்ணப்பட்ட மயிசூறு சமுஸ்தானம் ஆளப்பட்ட கர்த்தாக்கள் நாளையில் கடைசியில் யிந்த நாட்டுக்குச் சேற்ந்த கிறாமங்களையெல்லாம் அறமனைக்கு சபுத்தி பண்ணிக் கொண்டு தலையனாட்டு கிறாமங்களிலே நஞ்சை காணியில் 12 புஞ்சையில் 500 யிது தண்டிகை மானியமென்று சுத்த சுறுவ மானியமாயி விட்டாற்கள். அதுமுதல் மானியம் அனுபவிச்சுக் கொண்டு பிறசுத்தி புறுஷறாயி இறுந்து கொண்டு யிந்த நாட்டில் மகமை ஆதாயத்தில் வருஷம் 1 க்கு 100 பொன்அனுபவிச்சுக் கொண்டு வந்தாற்கள்.

சாலீவாகன சகாபுத்தம் 170(7)க்கு விசுவாசவசு வருஷம் காற்த்திகை மீ 23 தேதி சோமவாரம் பச்சமீ யிந்த சுப தினத்தில் சவுந்தற பாண்டிய வள்ளல் கவுண்டன் யென்னப்பட்ட பட்டகாற் தெயிவகெதி அடஞ்ச நாளையில் அவர் குமாரனான வறுக்கு அக்காலத்தில் றாச்சியம் பிறபுத்துவம் பண்ணப்பட்ட டிப்புசுலுதான் துரைத்தனத்தில் அறமனை மனுஷாளும் யிறுந்து நாடூறு பாளையபட்டாற் அனவறும் வந்து பட்டமும் கட்டிவெச்சு கனகசபாபதி பாண்டிய வள்ளல் யெண்ணப்பட்ட பேற் வௌங்க பண்ணிநாற்கள். அந்தனாள் முதல் தலையானாட்டுப் பட்டக்காறனென்று பேற் உண்டானவனாகி மகா றாச றாச ஸ்ரீ கும்பினியாற் தயவுக்கு பாத்திரனாயி காத்துக் கொண்டு குடித்தினக்காரனாகி யிறுந்து கொண்டு சறுக்காறுலே கட்டுப்பண்ணின படிக்கு மிகவும் வணக்கத்துடனே காத்து யிறுக்குரேன்.

நாளது ஆசறுலே யிறுக்கப்பட்ட வள்ளல் கவுண்டன் பூமி தெலத்திலே குடியிருப்புக்காரனாயி முப்பது வயிசு புறுஷனாயி காத்துக் கொண்டு யிறுக்கிறேன். - வள்ளல் கவுண்டன் ருசு

நிமிந்தபட்டி நீலியப்பக் கவுண்டன் வமிசாவளி

தாறாபுரம் துக்குடி அறவக்குறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த னிமிந்தபட்டி கிறாமத்திலே யிறுக்கும் பட்டக்காரர் னீலியப்ப கவுண்டன் எண்ணப்பட்ட பூற்வத்து பாளையகாறன் கைபீது. தாறாபுறம் துக்குடி அறவகுறுச்சி தாலூக்காவுக்கு சேற்ந்த நிமிந்தபட்டியிலே யிருக்கும் னீலியப்ப கவுண்டன் யென்னப் பட்ட வெங்கல் நாடுனுடைய பட்டக்காரனுடைய வம்சாவளி முதலான கையிபீது யென்னவென்றால்:

பூற்வத்தில் காளஅஸ்த்தி பிறதேசத்துலே முத்துராச சாதியென்று பேற் பிறசுத்தி பட்டவற்களாயி அந்த ராச்சியத்தில் பாளைப்பட்டுக்காற்களாஇ யிறுக்கும் நாளையில் அக்காலத்தில் கொங்கனுட றாச்சியத்துக்கு பாண்டிய றாசா துறைதனமாயிருக்கும்போது, செட்டி சிவ பிறாமணன் குடித்தனக்கார றாயி இறுக்கும் நாளையில் ஒட்டிய ராசா வென்ங்குறவன் க்ஷ செட்டி சிவ பிறாமணாளை கஷ்டப்படுத்தி கொண்டுயிறுந்தத்திநாலே அந்த செட்டி சிவபிறாமணாள் திருகாள அஷ்தி பிறதேசத்துக்கு வந்து முத்துறாசாக்களுக்கு காறிய கர்த்தறாகிய சக்குறபாணி றாசா யென்ங்குறவற்யிடத்துக்கு வந்து காத்து யிறுந்து ஒட்டிய றாசா தங்களுக்கு மிகவும் உபத்திரபடுத்தினபடியனாலே.. பிறாத்தி.. தங்களுடைய ஆசறுவில் வந்துயிறுக்குராமென்றும் ஒட்டிய றாசா உபத்திரவம் னிவாரணம் பண்ணிவிக்க வேணுமென்றும் சொல்லிக் கொண்டாற்கள். அப்போ செட்டி சிவபிராமணாளெ பாத்து ஒங்கள் தேசத்தில் றாச்சிய பிறபுத்துவ கற்த்தறாகிய கூன் பாண்டிய ராசா அவற்கள் னிறுபம் வந்ததானால் யெங்களுடளிலே சிபாயியாயி யிறுக்கப்பட்டவாளை அனுப்பிவிச்சு ஒட்டிய றாசாவை அடிச்சு துரைத்தி விடுகுரோமென்று சொன்னார்கள்.

செட்டி சிவபிறாமணாள் பிறப்பட்டு கூன் பாண்டிய றாசா அவற்கள் சமட்சமத்துக்கு வந்து காளஅஸ்தி பிறதேசத்துலே யிறுக்கப்பட்ட முத்து ராசாக்களுக்கு தாங்கள் னீறுபம் குடுத்தால் அவாளைக் கொண்டு ஒட்டிய ராசாவை செயிச்சு நாங்கள் குடினிலை பண்ணிக் கொண்டு யிறுக்குரோமென்று சொல்லிக் கொண்டாற்கள். அப்படியே ஒட்டிய றாசாவை செயிச்ச பெற்களுக்கு ஆதீனம் வுண்டு பண்ணி கொடுத்து சகல பொகுமதிகளும் பண்ணுகுரோமென்று உத்திரவு பண்ணிநாற்கள்.

செட்டி சிவபிறாமண்ணாள் மறுபடியும் காளஅஸ்தி பிறித்தியத்துக்குப் போஇ அவடத்தில்ச் செக்கிறபாணி றாசா யிடத்தில் பாண்டிய றாசா உத்திரவு செயித சேதிகளை அறிக்கை பண்ணினாற்கள். அப்பொச் சக்கிறபாணி றாசா அவற்கள் முத்துறாசாக்கள் கூட்டத்துலே நல்ல சிபாயிா யிறுக்கப் பட்டவனை சிறிது தளமும் கூட்டி அனுப்பிக்கச் சொல்லி உத்திறவு செய்தாற்கள்.

அந்த சமயத்தில் கோத்திரத்தில் னீலியப்பனெண்ணப் பட்டவனுக்கு, சிறிது பலமுங் கூட்டி ஒட்டிய றாசாவை செய்யம் பண்ணிவறச் சொல்லி உத்தரவு செய்தாற்கள். காளஅஷ்தி பிறதேசம் ஆளப்பட்டச் செக்கிறபாணிறாசா அவற்கள் யிடத்தில் உத்திரவு வாங்கிக் கொண்டு, யெளுவது தண்டிகைக் காரறும் சிறுது பலத்தொடனே கூடாதிறுபதி திறுணாமலை மாற்க்கமாஇ பிறப்பட்டு வந்து யெறங்கி யிறுக்கும் வேளையில் காவேரி ஆரு வரைக்கும் ஒட்டிய றாசா உபத்திரமென்றுக் கேள்விப்பட்டு, காவேறியாறும் தாண்டி வந்து ஒட்டிய ராசா ஒடனே சண்டைபண்ணி, ஒட்டிய றாசா சனங்களை பொகுபேறை வெட்டின படியனாலே அந்த ஒட்டியா றாசா திண்டுக்கல்லுக்குச் சேந்த அமட்டரை வரைக்கும் தொரத்திக் கொண்டு போனார்கள். ஒட்டிய றாசா தன் சீவனை தப்பவிச்சு கொண்டு போயி ஓடிப்போயி விட்டான். ஒட்டிய றாசாவை செயம் பண்ணிக் கொண்டவனாயி பாண்டிய தேசாதிபதியான கூன் பாண்டிய றாசா அவற்கள் சமட்சமத்துக்கு போஇ ஒட்டிய றாசாவை செயம் பண்ணின செதிய்யை அறிக்கை பண்ணிக் கொண்டார்கள். அப்போ பாண்டிய றாசா மிகவும் சந்தோஷப்பட்டு பல்லாக்கு, உபயசாமரம், சூரிபான், கொடை, நகாறு, நலபத்து, பூரிசை, தித்தி பில்லாகொவி, சங்கீத வாத்தியம், யிது முதலான வாத்தியங்களும், கல்கிதுராஇ, ஷ்ரீபொசு முதலான பிறதுகளும் குடுத்து. வெங்கல நாடு, அம்பறாவதி வடகரைக்கி வடக்கு, காவேறியாத்துக்கு தெற்கு, மணநாட்டு யெல்லைக்கு கிளக்கு, கரூறுக்கு மெற்க்கு, அறயநாட்டுக்கு மேற்க்கு, யிந்த நாங்கெல்லைக்கு உள்ப்பட்ட வெங்கல நாட்டுக்கு ஆதீனமும் குடுத்து, பட்டமும் கட்டி வெங்கல நாட்டுப் பட்டக்காரர் னீலியப்பக் கவுண்டற் யெண்ணப்பட்ட பேறும் குடுத்து, புள்ளை புள்ளை வம்சபறம்பறையாஇ யிந்த நாட்டுக்குப் பட்டம் ஆண்டுக் கொண்டு வாவென்று கட்டளையிட்டாற்கள். அந்த நாளில் பாண்டிய றாசா அவற்கள் தயவுனாலே வெங்கல நாட்டு பட்டக்கார னீலியப்பக் கவுண்டற் யென்ன பேற் பெறசுத்திப்பட்டவராயி வெங்கல நாட்டுக்கு வந்து நிமிந்தபட்டி கிராமத்தில் குடியிறுப்புக் காரறாயி இறுந்துக் கொண்டு, நாடு முளுமையும் சுத்த சாரியைஇ அனுபவிச்சுக் கொண்ட, அறமனையிலே கட்டு பண்ணின ஊளியத்தில் ஆசீராயி இறுந்து கொண்டு பட்டமாண்ட வருஷம் 32. கொங்கு தேசத்தில் வெங்கல நாட்டு பட்டக்காரர் னீலியப்பக் கவுண்டற் யெண்ணப்பட்ட பேற் பிறசுத்திப் பட்டவறாயி வம்ச பறம்பரையிலே யிந்த ஆதீனத்துக்கு கற்த்தறான புள்ளைகளுக்கு னீலியப்ப கவுண்டன் யெண்ணப்பட்ட பேறை வௌங்கப் பண்ணிக் கொண்டு பட்டம் ஆண்டுக் கொண்டு வறுகிறது. சாலீவாகன சகாபுதம் 1301 முதல் நாளது வரைக்கும் பட்டம் ஆண்டு வந்தவர்கள் தலைமுரை 20க்கு அவாளவாள்ளுடய நடத்தைகள் முதலானதுகளும் பட்டமாண்ட வருஷங்களும் இதின் கீள் யெளுதி வறுகுரது.

1. னீலியப்பக் கவுண்டற் பட்டம் அண்ட வருஷம் 67

2. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 40

3. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 6

4. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 12

5. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 8

6.யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 19

7. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 24

8. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 11

9. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 9

10. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 16

11. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 30

12. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 7

13. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 21

14. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 14

15. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 23

16. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 17

17. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 26

18. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 15

19. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 41

20. யிவற் குமாரன் பட்டம் ஆண்ட வருஷம் 25

—– ——

20 411

—– —— வெங்கல நாட்டு பட்டக்காரர் ஆதீனம் உண்டான நாள் முதல் வம்சபறம்பறையிலே நீலியப் கவுண்டற் யெண்ணப் பட்டபேற் வுண்டானவற்களாயி பட்டம் ஆண்டு கொண்டு வந்தவற்களில் பூற்வத்து முதல் தலைமுரைகள் தெரியவில்லை. சாலிவாகன சகாபுதம் - 1301 முதல் 1712 சாதாறுண வறுஷம் வரைக்கும் பட்டம் ஆண்டு வந்த தலமைுரை யிறுவதுக்கு வருஷம் 411 ஆச்சுது. சகாபுத்தம் 1301க்கு மேல் பட்டம் ஆண்ட முதல் தலைமுரை நீலியப்பக் கவுண்டற் நாளையில், அவாளுடைய தயவு சம்பாதிச்சுக் கொண்டு வெங்கல நாட்டு கிறாமங்கள் சாறியாஇ அனுபவிச்சுக் கொண்டு, சறுகாறுலே கட்டு பண்ணினபடிக்கு பணம் செலுத்திவிச்சுக் கொண்டு பாண்டிய றாசா நாளையில் வுண்டான பிறுதுகள் வாத்தியங்கள் முதலானத்துடனே பொகுசூரனாயி யிறுக்கும் காலத்தில், அக்காலத்து சில்லரைகள் பண்ணின கள்ளற் முதலான வேற்களை யெல்லாம் (க)ட்டி குத்தினபோது ஒறு தம்புறானானவனைவெட்டி நாற்கள் அப்போது தம்புறாணென்று அறிஞ்சு தலையெயை கண்டு மகத்தாஇய தோஷம் வந்துதுயென்று அநேக திறிவியங்களை தானம்பண்ணி, முடிகண்ட தம்புறான் தலை வெட்டினயிடத்தில் முடிகொண்ட சோளபுரம் யென்று வூற் கட்டி வைச்சு, முடிகொண்ட சோளபுரம் யென்று வூறு பேற்விளங்க பண்ணிநாற்கள். அதின் பிற்காலம் னிமிந்தபட்டி னீலியப்பக் கவுண்டற் யென்று பேற்ப்பட்ட வம்ச பறம்பரை பட்டகாரற்களும் பொகு சூறற்களயி யிறுந்து கொண்டு தம்முடைய பெரியவாள் சம்பாதிச்சு ஆதீனத்தை பறிபாலனம் பண்ணிக் கொண்டு அந்தந்த காலத்தில் ராசியம் பிறபுத்துவம் பண்ணப் பட்டவற்களுடைய தயவு பாத்திரர்களாய் நடந்து கொண்டு யிருந்தாற்கள். அதின் பிற்க்காலம் பதினாலாம் தலைமுறை னீலியப்பக் கவுண்டற் நாளையில், அக்காலத்தில் றாஞ்சியாதிபதியான மயிசூரு கற்த்தாக்கள் நாளையில், அக்காலத்தில் சாமயனாயக்கன் பாளையகாரன் சிறுது சில்லறை உபத்திரவம் பண்ணின படியநாலே, அப்போ சாமெநாயக்கனுடனே சண்டைபண்ணி அவனை அடக்கினபடியனாலே, மயிசூறு கற்த்தாக்கள் பொகுமதிகளும் பண்ணி ஆண்டா கோவில் பள்ள பாளையத்தில் செய்யி 6, தளவாயி பாளையத்தில் செய்யி 6, வாங்கல்லுலே செய்யி 6, னெறுவூருலே செய்யி 8, கள்ள குறுச்சி நஞ்சை சுத்தசாறியாஇ…. சேந்த மாவிடை மறுவிடை முதலானதுகளும்……. பாதிகாவல் உண்டுபண்ணி குடுத்தாற்கள். அந்த நாள் முதல் வெங்கல நாட்டில் முன் பெறியவாள் உண்டு பண்ணிக் கொண்ட பட்டக்காரர் ஆதீனமும் பாதிகாவல் முதலானதுகளும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு வந்தாற்கள்.

அதின் பிற்க்காலம் 20 தலைமுறை பட்டக்காரறான தோப்பனாற் நாளையில் அக்காலத்தில் நபாபு மவுதல்லி கான துறையவற்கள் நாளையில், அப்போ வெங்கல நாடு வடகரை ஆம்பிறாவதிக்கு வடக்கு, காவேறி ஆத்துக்கு தெற்கு, மணனாட்டு யெல்லைக்கு கிளக்கு. இந்த நான்கெல்லைக்கு வுள்பட்ட கிராமங்களுக்கு யிறாசார் நெமுகம் செயிது வருஷம் 1க்கு ரூபாயி 6000. யிது அறமனைக்கு செலுத்திக் கொண்டு வந்தாற்கள்.

நாளது ஆசறுலேயிறுக்கப்பட்ட னீலியப்பக் கவுண்டன் யென்னப்பட்ட பேற் உண்டானவனுக்கு சாலிவாகன சகாபுதம் 1698 யேற்விளம்பி வருஷம், ஆனி மாதம், 4 தேதி புதன் கிளமை, யிந்த சுபதினத்தில் அக்காலத்தில் றாச்சியம் பிறபுத்துவம் பண்ணப்பட்ட நவாபு அயிதரல்லிகான் நாளையில், தாலூகா அதிகாரம் பண்ணப்பட்டவனுடைய உத்திரவுபடிக்கு நாடனவறும் கூடி பட்டம் கட்டிநாற்கள். அந்த நாள் முதல் வெங்கல நாட்டிலே குடித்தனம் பண்ணப்பட்ட நிலங்களுக்கு கால் தீறுவை சறுக்காறுக்கு குடுத்துக் கொண்டு வறும்படியாஇ நெமுகம் பண்ணிநாற்கள்.

மகாறாச றாசஷ்ரீ கும்பினியாறுடைய தயவுக்கு பாத்திரனாயி நிமிந்தபட்டி கிராமத்திலே குடியிறுப்புக்காரனாயி மிகவும் வணக்கத்துடனே காத்துக் கொண்டுயிருக்கிறேன். நிலியப்பன் கவுண்டன ஒப்புதம்

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER