Posts

திரு. G.E. முத்திருளாண்டி, I.A.S. முத்தரையர்

Image
🏛️ திரு. G.E. முத்திருளாண்டி, I.A.S. முத்தரையர் சமூகத்தின் முதல் IAS அதிகாரியாக உயர்ந்து, கல்வி மற்றும் கடின உழைப்பின் மூலம் ஒரு சமூகத்திற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்களின்படி, தற்போதைய சென்னை (அன்றைய மதராஸ்) மாவட்டத்தின் 14-வது மாவட்ட ஆட்சியராக 22 ஜூலை 1958 முதல் 11 அக்டோபர் 1959 வரை பணியாற்றினார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் 1955 அக்டோபர் மாதத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் (Shore Temple) எடுக்கப்பட்டது. 📍 அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, 1955 அக்டோபர் மாதத்தில் மதராஸ் மாநிலத்திற்கு (தற்போதைய தமிழ்நாடு) அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 🏛️ அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, உலகப் புகழ்பெற்ற மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சின்னங்களையும் கட்டிடக்கலைப் பாரம்பரியத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 👨‍💼 அப்போது மதராஸ் மாநில நிர்வாக அமைப்பில் வளர்ந்து வந்த இளம் நிர்வாக அதிகாரியான திரு. G.E. முத்திருளாண்டி, I.A.S., பிரதமரின் பயண ஏற்பாடுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் குறித்த விளக்கங்களை வழங்க...

திண்டுக்கல் நத்தம் கணவாய் போர் - கண்ணப்ப குல அம்பலக்காரர்களின் இரத்த சரித்திரம்

Image
#திண்டுக்கல் #நத்தம்_கணவாய்_போர் குலதெய்வத்திற்காகவும் தங்கள் பெண்ணுக்காகவும் உயிர்தியாகம் செய்த அம்பலக்காரர்களின் #ரத்த_சரித்திரம்... திருச்சிக்கு வடக்கே கொல்லி மலையில் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த அய்யலூரில் அய்யனார், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு அதோடு சேர்ந்த 27 பாளையப்பட்டு தெய்வங்கள் அம்பல இனத்தாரால் வழிபாடு செய்யப்பட்டு வந்தன. இத்தெய்வங்களுக்கு வழிபடு பூசாரிகளாக அமைந்தவர்கள் கண்ணப்பக் கோத்திரத்தைச் சேர்ந்த அம்பலங்கள். மாலிக்காபூர் படையெடுப்பை ஒட்டி இந்நிலப்பகுதி இஸ்லாமிய ராஜாக்களின் கைகளில் சென்றது. அதில் ஒரு இஸ்லாமிய ராஜா அம்பல இனத்தைச் சேர்ந்த பெண்ணை மணக்க விரும்பிப் பெண் கேட்க அவர்களோ புற சமயத்தார் எனக் கூறித் தர மறுக்கின்றனர். இதனால் இஸ்லாமிய ராஜாவின் கோபத்துக்கு இரையாகிப் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். துன்புறுத்தல் தாங்காமல் தங்கள் குலப் பெண்ணை மணம் முடித்துத் தர சம்மதம் தெரிவிக்கின்றனர். அதையொட்டி திருமண விருந்தும் சிறப்பாக நடைபெற அம்பல இன மக்கள் மணப்பெண்ணுடன் கலந்து கொள்கின்றனர். விருந்தில் உணவோடு சிறப்பாக கறியும் பரிமாறப்படுகிறது. அம்ப...

🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴

Image
🟡 சித்திரை திருவிழா - முத்தரையர்கள் தெய்வமான அழகர் மலையான் 🔴 🔴 #ஓலைச்சுவடி_ஆதாரங்களுடன் கி.பி.1690ம் ஆண்டு எழுதப்பட்ட அழகர் வருணிப்பு என்னும் ஓலைச்சுவடி அழகர்மலை அழகர் பெருமாளுக்கும் முத்தரையர்களுக்குமான ஆழ்ந்த தொடர்பை மிக அழகாக மணி மணியாக பதிவுசெய்துள்ளது... முத்தரையர் மூலம் தோன்றிய அழகர் மலையான் : வலையர் ஒருவன் தன் மனைவி, மக்களின் பசி போக்குவதற்காக, பெருமாள்மலை அருகே வள்ளிக்கிழங்கு தோண்டுகிறான். அப்பொழுது கடப்பாறை தைத்து திருமால் தலையிலிருந்து இரத்தம் வருகிறது. அதனால் பயந்து, வீழ்ந்து, கலங்கிய வலையர் தெய்வம் தனக்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டுகிறான். பாண்டிய மன்னனிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறுகிறான். அதனைக் கேட்டு பாண்டிய மன்னன், தொண்டர் இதயத்து உறையும் சுந்தரராசப் பெருமானுக்குக் கோயிலும் குளமும் முழுதும் விளங்கும்படி அமைக்கிறான் (ஏடு:102). இவ்வாறு கூறப்படுகிறது கள்ளழகர் தோற்றம் பற்றிய வரலாற்று #வலையர்_மகன் : அழகர் சிலை முத்தரையர்களால் கண்டெடுக்கப்பட்டதால் அழகர் வீற்றிருக்கும் மலையை "வலையன்மகன் வாழும் ம...

வங்கார முத்தரையரின் நில விற்பனை

Image
#வங்கார_முத்தரையரின் நில விற்பனை. 🔴🟡வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டுப் பிரமதேயம் தனியூர் பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த #சேந்தன்_கூத்தாடுவானான_ராஜராஜ_வங்கார_முத்தரையன் #திருப்பனந்தாளில் உள்ள திருத்தாடகை ஈஸ்வரமுடையார் (சிவன்) கோயிலில் சமயப் பணி செய்து வரும், "அழிய விரதம் கொண்டார் தீயினும். பிரியதாராகிய" குங்கிலியக்கலைய நாயனார் வழிவந்த அடியார்கள் (குங்கிலியக்கலையர்க்கு 1000 காசுகளுக்காக (பொன் காசுகள்), 375 வேலி நிலத்தை விலையாவணம் (விற்பனை பத்திரம்) செய்து கொடுத்துள்ளனர். 🔴🟡திருப்பனந்தாள் என்றாலே குங்கிலியக்கலைய நாயனார் சரித்திரம் நினைவுக்கு வரும். இந்தக் கல்வெட்டில் வரும் "குங்கிலியக்கலையர்க்கு" என்ற குறிப்பு, நாயனார் பெயரில் இயங்கிய மடத்திற்கோ அல்லது அவரது வழிவந்தவர்களுக்கோ இந்த நிலம் வழங்கப்பட்டதைக் காட்டுகிறது. 🔴🟡நிலத்தை விற்ற #முத்தரையன், "இதுவே பொருள் உறுதி ஆவணம்" என்றும், இதல்லாது வேறு எந்த நில உரிமை கோர முடியாது என்றும் உறுதியளிக்கிறார். 🔴🟡இந்த விற்பனைக்குச் சாட்சியாக "அதிகாரம் க...

வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று :

Image
🔴 கல்வெட்டு வரிகள் : "கோப்பர கே சரி பன்மக் கு யாண்டு நா ன்காவது வே ட்டுவதி அர யர் வாணகோ வரையர் ஆன ஆனைமங்கலம் மு டய கள்ளன் தாழ ன் மேல்க்கோவல் லூர் நாட்டு அளவி ப்பாடி தொறு மீட்டுப்  பட்டான் மன்றாடி கல்" இதன் பொருள் : வேட்டுவதியரையர் ஆன வாணகோவரையர் வேட்டுவ இன முத்தரையர் சாதி மன்னர். (அதியரையர் வலையர் சாதி அரசன்) ஆட்சியில் ஆணமங்களத்தில் வாழ்ந்த "கள்ளன் தாழன்" (பெயர்)  என்பவன் ஆநிரைகளை மீட்க போராடி இறந்தான் அவனின் வீரத்தை போற்றி நடுகல் அவன் சமூகத்தை சேர்ந்தவர்கள் எழுப்பியது. அதாவது "மீட்டு பட்டான் மன்றாடி கல்" என்னும் கல்வெட்டின் வரிகள் (ஆநிரை மீட்டு இறந்த மன்றாடியான இடையரின் நடுகல் என்பது குறிப்பது). 🔴 வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று : ● "#வேட்டுவதியரையன்" என்னும் சொல்லை பிரித்தால் வேட்டுவ+அதி+அரையன் என பிரியும். இங்கு அதியரையன் என்பது வலையர் சாதி அரசன் என்பதை குறிக்கும் "முத்தரையன்" என்பதன் மற்றொரு வடிவமாகும். எனவே வேட்டுவதியரையன் என்பது வேடர் இனத்தில் ஆளும் வர்க்கத்தவரான வலைய முத்தையரையர்களையே குறிக்கும் என்பது தெளிவாகிற...

முத்தரையர் பெயர்களின் ஒப்பீட்டில் வெளிப்படும் அரசிலி கோயில் கல்வெட்டு பிழை

Image
கி.பி. 12 ம் நூற்றாண்டில் அரசிலி ஆளுடையார் கோயிலில் கல்வெட்டை படியெடுத்தவர்கள் "நாந" என்பதனை "காக" என்று வாசித்துள்ளனர். "வலையன் கடியாறநாந வாணராய முத்தரையன்" என்பதனை "வலையன் கடியாரானுகாக வாணாராய முத்தரையன் வைத்த நொந்தா விளக்கு" என்று கூறி வலையனின் உறவினர் வாணராய முத்தரையன் என்று விளக்கம் கொடுத்துள்ளனர். சமகாலத்தில் மற்ற பெயர்களை நோக்கும்போது  1, இவ்வூர் வலையரில் சூற்றிச் சேந்தனான பெரிய நாட்டு முத்தரையன்  2, வலையன் #கடியாறநாந வாணராய முத்தரையன் 3, அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன் போன்ற பெயர்கள் மூலம் அப்பிழையை அறிய முடிகிறது. S.  ஜெகன் தஞ்சை

வலையர் படைப்பற்று

Image
வலையர் படைப்பற்று "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி" என்பது தமிழரின் மிக நீண்ட வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் புறப்பொருள் வெண்பாமாலை வரிகள் (35-வது பாடல்) ஆகும். இந்தப் பாடலுக்கு ஏற்ப தமிழர் நிலத்தின் #பூர்வக்குடியாகவும், #மறக்குடியினராகவும், #நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்தவர்கள் #வலையர்கள் என்பது நாம் அறிவோம்.  இந்த செந்தமிழ் நாட்டில் பிரிக்கப்பட்ட 12 பகுதிகளில் ஒன்றான #பன்றி_நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய #புதுக்கோட்டை  #கானாடு, #கோனாட்டில் பூர்விக #மறக்குடியினர் வாழ்ந்த பகுதியில் #வலையர்_படைப்பற்று ஊரான #மேலைக்குருந்தண்பிறையில் வாழ்ந்த #வலையர் #மூவன்காடப்பிள்ளை என்பவர் #திருமயம் வட்டத்திலுள்ள பிரமதேயமான #பேரையூரில் #பாடிக்காவல் முறையை ஏற்ற14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு 😍  மேலும் இந்த பகுதியில் வலையர் குடியினர் #போர்ப்படை தொழில் செய்தும் #காவல் தொழில் செய்தும் வாழ்ந்துளனர்