Posts

வங்கார முத்தரையரின் நில விற்பனை

Image
#வங்கார_முத்தரையரின் நில விற்பனை. 🔴🟡வடகரை விருதராஜ பயங்கர வளநாட்டுப் பிரமதேயம் தனியூர் பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்தைச் சேர்ந்த #சேந்தன்_கூத்தாடுவானான_ராஜராஜ_வங்கார_முத்தரையன் #திருப்பனந்தாளில் உள்ள திருத்தாடகை ஈஸ்வரமுடையார் (சிவன்) கோயிலில் சமயப் பணி செய்து வரும், "அழிய விரதம் கொண்டார் தீயினும். பிரியதாராகிய" குங்கிலியக்கலைய நாயனார் வழிவந்த அடியார்கள் (குங்கிலியக்கலையர்க்கு 1000 காசுகளுக்காக (பொன் காசுகள்), 375 வேலி நிலத்தை விலையாவணம் (விற்பனை பத்திரம்) செய்து கொடுத்துள்ளனர். 🔴🟡திருப்பனந்தாள் என்றாலே குங்கிலியக்கலைய நாயனார் சரித்திரம் நினைவுக்கு வரும். இந்தக் கல்வெட்டில் வரும் "குங்கிலியக்கலையர்க்கு" என்ற குறிப்பு, நாயனார் பெயரில் இயங்கிய மடத்திற்கோ அல்லது அவரது வழிவந்தவர்களுக்கோ இந்த நிலம் வழங்கப்பட்டதைக் காட்டுகிறது. 🔴🟡நிலத்தை விற்ற #முத்தரையன், "இதுவே பொருள் உறுதி ஆவணம்" என்றும், இதல்லாது வேறு எந்த நில உரிமை கோர முடியாது என்றும் உறுதியளிக்கிறார். 🔴🟡இந்த விற்பனைக்குச் சாட்சியாக "அதிகாரம் க...

வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று :

Image
🔴 கல்வெட்டு வரிகள் : "கோப்பர கே சரி பன்மக் கு யாண்டு நா ன்காவது வே ட்டுவதி அர யர் வாணகோ வரையர் ஆன ஆனைமங்கலம் மு டய கள்ளன் தாழ ன் மேல்க்கோவல் லூர் நாட்டு அளவி ப்பாடி தொறு மீட்டுப்  பட்டான் மன்றாடி கல்" இதன் பொருள் : வேட்டுவதியரையர் ஆன வாணகோவரையர் வேட்டுவ இன முத்தரையர் சாதி மன்னர். (அதியரையர் வலையர் சாதி அரசன்) ஆட்சியில் ஆணமங்களத்தில் வாழ்ந்த "கள்ளன் தாழன்" (பெயர்)  என்பவன் ஆநிரைகளை மீட்க போராடி இறந்தான் அவனின் வீரத்தை போற்றி நடுகல் அவன் சமூகத்தை சேர்ந்தவர்கள் எழுப்பியது. அதாவது "மீட்டு பட்டான் மன்றாடி கல்" என்னும் கல்வெட்டின் வரிகள் (ஆநிரை மீட்டு இறந்த மன்றாடியான இடையரின் நடுகல் என்பது குறிப்பது). 🔴 வாணகோவரையர் முத்தரையர் என்பதற்கு முக்கிய சான்று : ● "#வேட்டுவதியரையன்" என்னும் சொல்லை பிரித்தால் வேட்டுவ+அதி+அரையன் என பிரியும். இங்கு அதியரையன் என்பது வலையர் சாதி அரசன் என்பதை குறிக்கும் "முத்தரையன்" என்பதன் மற்றொரு வடிவமாகும். எனவே வேட்டுவதியரையன் என்பது வேடர் இனத்தில் ஆளும் வர்க்கத்தவரான வலைய முத்தையரையர்களையே குறிக்கும் என்பது தெளிவாகிற...

முத்தரையர் பெயர்களின் ஒப்பீட்டில் வெளிப்படும் அரசிலி கோயில் கல்வெட்டு பிழை

Image
கி.பி. 12 ம் நூற்றாண்டில் அரசிலி ஆளுடையார் கோயிலில் கல்வெட்டை படியெடுத்தவர்கள் "நாந" என்பதனை "காக" என்று வாசித்துள்ளனர். "வலையன் கடியாறநாந வாணராய முத்தரையன்" என்பதனை "வலையன் கடியாரானுகாக வாணாராய முத்தரையன் வைத்த நொந்தா விளக்கு" என்று கூறி வலையனின் உறவினர் வாணராய முத்தரையன் என்று விளக்கம் கொடுத்துள்ளனர். சமகாலத்தில் மற்ற பெயர்களை நோக்கும்போது  1, இவ்வூர் வலையரில் சூற்றிச் சேந்தனான பெரிய நாட்டு முத்தரையன்  2, வலையன் #கடியாறநாந வாணராய முத்தரையன் 3, அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன் போன்ற பெயர்கள் மூலம் அப்பிழையை அறிய முடிகிறது. S.  ஜெகன் தஞ்சை

வலையர் படைப்பற்று

Image
வலையர் படைப்பற்று "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றி மூத்த குடி" என்பது தமிழரின் மிக நீண்ட வரலாற்றையும், தொன்மையையும் உணர்த்தும் புறப்பொருள் வெண்பாமாலை வரிகள் (35-வது பாடல்) ஆகும். இந்தப் பாடலுக்கு ஏற்ப தமிழர் நிலத்தின் #பூர்வக்குடியாகவும், #மறக்குடியினராகவும், #நிலவுடைமை சமூகமாகவும் வாழ்ந்தவர்கள் #வலையர்கள் என்பது நாம் அறிவோம்.  இந்த செந்தமிழ் நாட்டில் பிரிக்கப்பட்ட 12 பகுதிகளில் ஒன்றான #பன்றி_நாடு என்று அழைக்கப்பட்ட இன்றைய #புதுக்கோட்டை  #கானாடு, #கோனாட்டில் பூர்விக #மறக்குடியினர் வாழ்ந்த பகுதியில் #வலையர்_படைப்பற்று ஊரான #மேலைக்குருந்தண்பிறையில் வாழ்ந்த #வலையர் #மூவன்காடப்பிள்ளை என்பவர் #திருமயம் வட்டத்திலுள்ள பிரமதேயமான #பேரையூரில் #பாடிக்காவல் முறையை ஏற்ற14-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு 😍  மேலும் இந்த பகுதியில் வலையர் குடியினர் #போர்ப்படை தொழில் செய்தும் #காவல் தொழில் செய்தும் வாழ்ந்துளனர்

திருவானைக்கோயில் முத்தரையர் காவலும் காவற்காணியும்

Image
சோழ நாடு மூன்றாம் ராஜராஜ சோழனின் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவானைக்கோயிலில் கிடைத்த கல்வெட்டு அரிய வரலாற்று செய்தியை தருகிறது. கிபி 1236 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு ராஜராஜ வளநாட்டு பாச்சில் கூற்றத்தில் கீழ்பாலாற்றை சேர்ந்த காரிச்சாத்தன் துறையில் காணி உரிமை பெற்றிருந்த தாமணித்தேவன் மற்றும் அவரது சகோதரர்கள் திருவானைக் கோயிலுக்கு நிலவிற்பனை செய்த தகவலை தருகிறது.  இவர்கள் நில விற்பனை செய்ததற்கு ஒப்புதலாக திருவானைக் கோயிலின் சார்பாக பெருமான் அழகனான மணவாள முத்தரையன் என்பவர் கிழிப்புணைத் தீட்டாக நாலாயிரம் காசுகளைப் பெற்று நிலத்தினை விற்றவர்களுக்கு அளித்துள்ளார்.  திருப்பெருந்துறை கோயிலின் மிக பொறுப்பில் விளங்கிய மணவாள முத்தரையன் ராஜேந்திர சோழ மங்கலத்தின் காவல் பொறுப்பினை  ஏற்று அதற்காக சோழ அரசர்களால் காவல் காணி எனப்படும் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டு சிறப்புற்று இருந்ததை கல்வெட்டு உணர்த்துகிறது. பெருமான் அழகனான மணவாள முத்தரையனை  " ராஜேந்திர சோழ மங்கலத்து காணியுடைய  கள்ளரில் பெருமான் அழகனான மணவாள முத்தரையன் "...

முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்

Image
வரகுணா பெருமானார் #சோழனின்_சகோதரி என்று சுந்தர சோழரின் அன்பில் ஆவணமும், வரகுணாட்டி பெருமானார் #முத்தரையர்_மகள் என்று மற்றொரு கல்வெட்டும் தெரிவிக்கிறது. முத்தரையரும் சோழரும் வேறு என்ற கருத்தில் மூழ்கியிருந்த வரலாராசிரியர்கள் இருவரும் வேறாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். முத்தரையரும் சோழரும் ஒரே குடும்பம் என்பது வரகுணாட்டி மூலம் மேலும் உறுதி செய்யப்படுகிறது. S. ஜெகன்

அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்” : ஒரு கல்வெட்டு சொல்லும் சோழ வம்ச ரகசியம்

Image
உத்தம சோழரின் தந்தையான கண்டராதித்த சோழரின் 5ம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 955) கொடும்பாளூர் அரசரான "மஹிமாலய இருக்குவேள் பராந்தக வீரசோழன்" பழுவேட்டரையரின் திருப்பழுவூர் ஆலயத்துக்கு நிலம் நிவந்தமாக கொடுத்துள்ளார். பழுவேட்டரையர் மற்றும் இருக்குவேளார் ஆகியோர் சோழனுடன் மன உறவில் இருந்தவர்கள் ஆவர். அதே போல் கிபி 972 ம் ஆண்டு கண்டராதித்தரின் மகனான உத்தம சோழர் 3 ம் ஆட்சி ஆண்டில் பழுவேட்டரையரின் மகளான அரசியார் பஞ்சவன் மாதேவியார் தனது கணவரான அருண்மொழிவர்மனின் பெயரை உடையார்குடி கல்வெட்டில் "அரையன் மஹிமாலயனான பராந்தக முத்தரையன்" என்று குறிப்பிட்டுள்ளார். அப்பெயரானது, அருண்மொழிவர்மனின் இருக்குவேளிர் உறவையும் பராந்தக சோழனின் வாரிசு என்பதனை எடுத்துரைப்பதாக உள்ளது. மேலும், மஹிமாலய இருக்குவேளிரின் பழுவூர் கல்வெட்டு உடையார்குடி கல்வெட்டை வெளியிட்டது பழுவேட்டரையர் மகளும் இராஜராஜனின் மனைவியுமான அரசியார் பஞ்சவன் மாதேவி என்பதனை மேலும் உறுதி படுத்துகிறது. S. ஜெகன்