வேங்கையின் மைந்தன் புதினம் கதையில் முத்தரையர்

வேங்கையின் மைந்தன் (புதினம்) கதையிலிருந்து “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது" :

திலகவதி, வீரமல்லன்(MUTHARAIYAR KULA KATHAAPATHIRAM) அருகில் மிகவும் நெருங்கி வந்து அவன் காதோடு கூறினாள். “பாண்டியர்களுடைய மணிமுடி ரோகணத்தில்(ILANGAI THESAM) இருக்கிறதல்லவா? அதை எடுத்துக் கொண்டுவந்து, தமது புதல்வர்களில் ஒருவனைப் பாண்டிய நாட்டின் அரசனாக்கி, அவனுக்கு அதைச் சூட்டிவிடப் பார்க்கிறார். சக்கரவர்த்தியால்(RAJENDRA CHOLA-I) முடியை ரோகணத்திலிருந்து கொண்டுவரவும் முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும், அது இவர்கள் எழுப்பும் புது மாளிகைக்குள் போய்ச் சேரவும் சேராது."

“ஏன் சேராது? மாளிகையின் நுழைவாயிலுக்குள் போக முடியாத
அத்தனை பெரிய மணிமுடியா அது?”

“தலையிலே சூட்டிக்கொள்கிற முடி எங்கேயாவது அத்தனை பெரியதாக இருக்கமுடியுமா? ஏன் உங்கள் [MUTHARAIYAR], பரம்பரையில் யாருமே முடிசூடி நாடாண்டதில்லையோ?”

“நம்முடைய பரம்பரை என்று சொல். நானும் முத்தரையன்” என்றான் கொதிப்புடன் வீரமல்லன். “சோழர்களுடைய வாழ்வு நம்முடைய வாழ்விலிருந்துதானே தொடங்கியது. சந்திரலேகையிலும், தஞ்சையிலும், இன்னும் எத்தனையோ இடங்களிலும் நாம் நாடாண்டவர்கள் தாமே!”

வீரமல்லனின் முகத்தில் திடீரென்று கோபச் சிவப் பேறியதைக் கண்டு துணுக்குற்றாள் திலகவதி.

“பொறுத்துக் கொள்ளுங்கள்! பெரிய மாளிகையைத் தரைமட்டமாக்கி
அதை மண்மேடாக்கப் போகிறார்கள் நம்மவர்கள். மணிமுடியும் நமக்குத்தான் கிடைக்கப் போகிறது. அந்தப் போரில் நீங்களும் கலந்து கொள்ளலாம்.”

வீரமல்லன் யோசனையில் ஆழ்ந்தான். நேரம் சென்றது.

“சரி. நான் மற்றொரு நாள் இதே கச்சைகளுடன் வருகிறேன். உன்
தந்தையாரிடம் நான் வந்ததைத் தெரிவிக்க வேண்டாம். இப்போதைக்கு
உனக்குப் பிடித்த ஒரு துணியைப் பொறுக்கி எடுத்துக்கொள். என்னுடைய அன்புக் காணிக்கையாக அது இருக்கட்டும்.”

மறுக்க மனமில்லாமல் ஒன்றை எடுத்துக்கொண்டாள் திலகவதி.
“மற்றொரு நாள் என்ன! நாளைக்கே வந்து சேருங்கள்; தந்தையார்
உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்.”

மூட்டையைக் கட்டிக் கொண்டு வெளியில் வந்த வீரமல்லன் குதிரையின் குளம்பொலி கேட்டு அப்படியே திகைத்து நின்றான். “திலகவதி! நீ எடுத்துக்கொண்ட துணியை விரைந்து சென்று மறைத்து வை. உன் தந்தையார் வந்துவிட்டார்.”

பெரும்பிடுகு முத்தரையரின் குதிரை நாலுகால் பாய்ச்சலில் வீரமல்லனை நோக்கித் தாவி வந்தது. கையிலிருந்த மூட்டை நழுவி விழவே, அதைக் குனிந்து எடுக்கப் போனான் வீரமல்லன்....

Comments

Popular posts from this blog

DNT என்றால் என்ன..??

யார் தமிழர்..?? (தமிழ் சாதிகள் பட்டியல்)

HISTORY OF VETTUVA GOUNDER