Posts

| குகன் வழிவந்த வலையர்கள் |

Image
| குகன் வழிவந்த வலையர்கள் | இந்தியாவில் அனைவருக்கும் இராமாயணம் பற்றி தெரியும். ராமன், லக்ஷ்மணன், இராவணன், மேகனந்தன், கும்பகர்ணன், விபீஷணன், அனுமன் போன்றவர்கள் தான் ராமாயணத்தில்  முக்கியமான கதாபாத்திரங்கள். இருந்தாலும் இந்தியாவில் இருக்கும் பல சமுதாயங்கள் இவர்களை தன் குடி என்று பெரும் அளவில் உரிமை கொண்டாடுவது இல்லை.   பெரும் அளவில் தன் குடி என்று நிறையா சமுதாயங்கள் சொல்வது குகன், வால்மீகி போன்றவர்களை தான். அதுவும் காலம் காலமாக கூறி கொண்டார்கள். வால்மீகி ஒரு வேட்டுவர் என்று கருதபடுகிறது. வேட்டுவ மரபே  சேர்ந்த கோலி, பேடர் (போயர், நாயகர்), வேட்டைக்கார நாயக்கர் என பலர்  வால்மீகி அவர்களின் வம்சத்தினர் என்று சொல்கிறார்கள். அதேபோல் நிஷாதராஜ அரசன் தான் குகன். நிஷாதராஜன் என்கிற சம்ஸ்கிருத சொல் தமிழில்  வேட்டுவ அரசன் என்று பொருள் ஆகும். ஆம், குகன் ஒரு வேட்டுவர். இவர் கம்ப இராமாயணத்தில் நாவாய் வேட்டுவர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது ஆயிர கணக்கான கப்பல் வைத்து இருந்தார் என்று கம்பராமாயண சொல்கிறது.  இவரே ராமனுக்கு கப்பல் உதவியும் செய்தார் என்று நாம் அறிந்ததே. குறிப்பு: கேரளாவில் இருக்க

சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்

Image
சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்... இந்திய விடுதலை வரலாற்றில் முத்தரையர்கள் நேதாஜி படைப்பிரிவான INA வில் சேர்ந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தன் உயிரை தியாகம் செய்த முத்தரையர்கள்... #அம்பலக்காரன் #பெரிய_தம்பி தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் தொண்டியன்காடு கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் 1944ல் போர்முனையில் தன் உயிரை இந்த நாட்டிற்காக இழந்தார்... [FFPO எண். 6507/1970, 19.11.1970, TNSAC] #அம்பலம் #கருப்பையா: 1901 இல் பிறந்தார், மாவட்டம். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவேகம்பேட்டை பாப்னியை பூர்வீகமாக கொண்டவர் அப்பா பெயர் காளிமுத்து. அவர் 1942 இன் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார், மேலும் 147, 433 IPC மற்றும் DIR இன் 38 இன் கீழ் கைது செய்யப்பட்டார். 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, திருவாடானை மற்றும் மதுரை சிறைகளில் வைக்கப்பட்டு, இறுதியாக பெல்லாரியில் உள்ள வெல்லஸ்லி சானடோரியம் சிறையில், 1946 இல் இறந்தார். [ராமநாதபுரம் மாவட்ட சிறைச் சீட்டு, ச

| வன்னிய முத்துராஜா |

Image
| வன்னிய முத்துராஜா | வன்னியர் எனும் பட்டம் பல சமுதாயத்துக்கு உண்டு. வலையர், அம்பலக்காரர்(வலையர்), முக்குவர்,  இருளர், மறவர், கள்ளர், குறும்பர், பள்ளி, என பல சமுதாயத்துக்கு வன்னியர் பட்டம் உண்டு. மதுரையில் வன்னிவேலம்பட்டி எனும் கிராமத்தில் 90% வன்னியர் பட்டம் உடைய வலையர்கள் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.  அதே போல் வன்னியர் பட்டம் உடைய அம்பலக்காரர்கள் இன்று வன்னிய முத்துராஜா என்று அழைக்கபடுகிறார்கள். மேலும் பழனி செப்பேடு வன்னி முத்தரசர் பற்றி பேசுகிறது. இவர்கள் திண்டுக்கல், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி பகுதியில் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.  குறிப்பு: மதுரையை சேர்ந்த வன்னியர்கள் இலங்கை சென்று வன்னி வள நாட்டை உருவாக்கி ஆட்சி புரிந்தார்கள். இவர்களில் பிரபலமானவர் தான் பண்டார வன்னியன். மதுரையில் வன்னியர் பட்டம் உடைய சமுதாயம் வலையர்கள். நவீன்குமார் அம்பலக்கார பிள்ளை முத்தரையர் வரலாறு தேடல் நன்றி

மாலவல்லியின் தியாகம் | சரித்திர நாவல் | முத்தரையர் பகுதி |

Image
||மாலவல்லியின் தியாகம்|| இரண்டாம் பாகம் - குருக்ஷேத்திரம் அத்தியாயம் 16 - விஷ விருட்சம்      அன்று தஞ்சை மன்னர் மாறன் முத்தரையர் அரண்மனையில், மந்திராலோசனை மண்டபத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடக்க ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.      பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும், போர் முறை நன்கு அறிந்த நிபுணர்களும், கூட்டங் கூட்டமாக மந்திராலோசனை மண்டபத்துக்குள் வந்து அவரவர்களுக்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.      தஞ்சை அரசர் முத்தரையர் கோபத்தினால் கொதிக்கும் உள்ளத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். அமைச்சர் புலிப்பள்ளியார் கொடும்பாளூருக்குப் போய்க் கோட்டை ரகசியங்களை அறிந்து கொண்டு வந்த விஷயம் முதலில் ஆரம்பமாகியது.      புலிப்பள்ளியார் கம்பீரமான குரலில் பேசத் துவங்கினார்.      “அரசே, சபையோர்களே! கொடும்பாளூரில் தான் நாம் முதலில் வேரோடு களைந்தெறிய வேண்டிய விஷ விருட்சம் கிளை விட்டுப் படர்ந்திருக்கிறது. அந்த விஷ விருட்சத்தின் நிழலில் தான் பழையாறை நகர் சின்னப் பயல் விஜயன் ஒண்டிக் கொண்டிருக்கிறான். அந்த விஷ விருட்சம் வெட்டப்பட்டு விட்டால், சோழ அரசைப் பற்றிய நினைப்புக்கூட யாரு

வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்

Image
வலையர் இன மக்களின் நாட்டுப்புறப் பாடல்கள்  நாகரிகம் சென்றடையாத கிராமப்புறப் பகுதிகளையே நாட்டுப்புறம் என அழைக்கிறோம். நாட்டுப்புறம் என்ற சொல் சிற்றூர், சிற்றூரைச் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல்லாகக் கொள்ளலாம். அங்கு வாழும் மக்களிடையே மலர்ந்து மணம் பரப்பும் பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், கதைப் பாடல்கள் போன்றவைகளை நாட்டுப்புற இலக்கியம் எனக் கூறலாம். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி என்று முன்னோரால் போற்றப்படும் தமிழ் மொழியின் தோற்றம் போன்றே இவள் என்று பிறந்தனள் என்று அறியப்படாத இயல்பை பொறுத்த வரையில் நாட்டுப்புற மக்களோடு இரண்டறக் கலந்தவை என்று கூறலாம். அதாவது வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. கள ஆய்வால் சேகரிக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் முனைவர் சக்திவேல் அவர்கள் இவ்விலக்கியங்களைப் பின்வருமாறு வகைப்படுத்துவார்.  1. நாட்டுப்புறப் பாடல்கள்,  2. கதைகள்,  3. கதைப்பாடல்கள்,  4. பழமொழிகள்,  5. விடுகதைகள்,  6. புராணம் முதலியன.  வாய்மொழி இலக்கியங்களை ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என வகைப்படுத்துவர் இன்

| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் |

Image
| வலையர் குடியில் பாண்டிய மன்னர் பழையன் மாறன் | பாண்டிய நாட்டில் பண்டைய காலம் தொட்டு வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் இனமே. தென் மாவட்டத்தின் அடையாளமே. வலையர் புகழ் பெரும் அளவில் உள்ளது. அழகர் கோவில், பாரி வள்ளல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, பாண்டி  முனீசுவரர் கோவில் , ஏழூர் மூப்பர் நாட்டு திருவிழா என பல சொல்லலாம். பாண்டிய நாட்டில் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டு வரும் என் வலையர் மக்கள் பாண்டியர் மரபே சார்ந்தவர்கள் என்கிற உண்மையே மறந்து விட்டார்கள். சங்க காலத்தில் கொற்கை மற்றும் மதுரை பாண்டியர்களின் தலைநகரமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். அதே கொற்கை மற்றும் மதுரையில் நம் வலையர் இனம் சங்க காலம் தொட்டு இன்று வரைக்கும் வாழ்ந்து கொண்டு வருகிறோம்.  சங்க காலத்தில் பல்வேறு பெயரில் நாம் அழைக்கப்பட்டு வந்தோம்.  வேட்டுவர், பழையர், வலையர்(வ,ஞ).  சங்க காலத்தில் வாழ்ந்த நம் புகழ் பெற்ற மன்னர் தான் பழையன் மாறன் என்பவர். இவர் பாண்டிய மரபே சார்ந்த மன்னர் ஆவார். அதாவது பாண்டியர் குடியே சார்ந்தவர். இவரின் குடி மற்றும் காவல்மரம் வேப்பமரம் ஆகும். இதை நாம் சங்க இலக்கிய பாடலில் காணலாம். அதே போல்

சேந்தங்குடி வலுவாடியார் வலையர் ஜமீன்

Image
இத்தனை ஆதாரங்கள் இருந்தும், எந்த ஆதாரமும் இல்லாமல் வலையர்களை கள்ளர்களாக மாற்றிவிட்டார்கள் அப்பகுதி கள்ளர்கள்...