Posts

Showing posts from August, 2025

முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் வரலாறு சிறு தொகுப்பு

Image
#ஐயா #வீரன்அம்பலம்  தெரிந்து கொள்வோம்.,அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் 👍 மேலூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய ஐயா தெய்வத்திரு வீரன் அம்பலம் அவர்களின்  சொந்த ஊர் #கொட்டாம்பட்டி அருகே உள்ள  சொக்கலிங்கபுரம் ஆகும்...  ஐயா வீரன் அம்பலம் அவர்கள் 1977ம் ஆண்டு தேர்தலில் வெறும் 156 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்... ஆனால் அடுத்த தேர்தலில் 1980 மற்றும் 1984  ஆண்டுகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக இரண்டு முறை மேலூர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி உள்ளார்...   இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்  இருமுறையும்.. தான் எம்எல்ஏவாக இருந்தபோது கொட்டாம்பட்டிற்கு இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரகாந்தியே கொட்டாம்பட்டிற்கு  அழைத்து வந்து தனது திரையரங்கே திறந்து வைத்தவர்.. #இந்திரகாந்தி அவர்கள் ஐயா  வீரன் அம்பலம் அவர்களுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்து உள்ளார்... காங்கிரஸில் சிறந்த தலைவராக விளங்...

கொள்கை வேந்தர் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

Image
பேராவூரணிக்கு அருகில் உள்ள முடச்சிக்காடு என்னும் கிராமத்தில் மிகச் சாதாரன குடுப்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் வாட்டிய வருமையை போக்க பேராவூரணி பகுதியில் நாளிதழ் விநியோகம் செய்வதில் வாழ்வை தொடங்கி அமைச்சர் என்ற இடம் வரை உயர்ந்தவர். சிறுவயதில் தன்னுடைய அரசியல் செயல்பாட்டினால் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டைப் பெற்றவர். ஊராட்சி மன்ற உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் ஒன்றிய பெருந்தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் அமைச்சர்  என்று தனது விடா முயர்ச்சியாலும், கடின உழைப்பாலும் வெற்றிகளை குவித்தவர். பேராவூரணியில் மூன்று முறை தொடர்ந்து வென்று புரட்சித் தலைவர் M.G.R.அவர்களின் அமைச்சரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாற்றும் மீன் வளத்துறை என்று இரு துறைகளுக்கு அமைச்சராக இருந்து திறம்பட பணியாற்றியவர். தாத்தாதான் பேராவூரணியை கட்டமைத்த பிதாமகன். வாடகை கட்டிடத்தில் இயங்கிய பேராவூரணி தாலுகா அலுவலகத்திற்கு புதிய பிரமான்ட கட்டிடம் கட்டி திறந்து வைத்தார்.  அரசு மருத்துவமணையை நவீனப்படுத்தி மகப்பேறு பிரிவையும்,எக்ஸ்ரே கருவிகளையும் கொண்டு வந்தார். பேராவூரணியில் புதிய போக்குவரத்து பணிமணையை கொண்...

அமைச்சராக இருந்தபோது எம்.ஆர்.கோவேந்தன் அவர்கள் அமைச்சரவையில் ஆற்றிய உரை

Image
அன்பு  முத்தரைய சொந்தங்களுக்கு  வணக்கம் ,                                                                                        நம்  முத்தரையர்  இனத்தில்  முதன்  முதலாக  அமைச்சர்  பதவியை  அலங்கரித்தவர்  என்ற  பெருமைக்குச்  சொந்தக்காரர்  எம் .ஆர் .கோவேந்தன்  அவர்கள்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்தபோது  06.08.1977 அன்று  சட்டமன்றத்தில்  ஆற்றிய  உரையை  அப்படியே  தருகின்றோம் . பேரவைத்  தலைவர்  அவர்களே , பிற்பட்டோர்  நல  கோரிக்கை  நாளான  இன்று  தமிழ்  இலக்கியத்திலும்  வரலாற்றிலும்  சிறப்பானதொரு  இடத்தைப்பெற்ற  ஒர்  இனம்  கவனிப்பாரற்று  சமுதாயத்தில்  ஒதுக்கப்பட்டு  மிக...

கொள்கை வேந்தன் எம்.ஆர்.கோவேந்தன் முன்னால் அமைச்சர்

Image
புகழ் வணக்கம்  --------------------------------------- புரட்சித் தலைவர்  மக்கள் திலகம்  பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களால் கொள்கை வேந்தன் என்று கொண்டாடப்பட்டவர். விடாமுயற்சியும் அதற்கான உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் சாதாரண மனிதனும் சக்கரவர்த்தியாக முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் . ஏழ்மையும், வறுமையும் சாதிப்பதற்கு ஒரு தடையில்லை என்பதை எங்களுக்கு பாடமாக போதித்து விட்டு சென்றவர் . ஊராட்சி மன்ற உறுப்பினர் , ஊராட்சி மன்ற தலைவர் , ஒன்றிய துணை பெருந்தலைவர்,  மூன்று முறை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர்  ஏழு ஆண்டுகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர்  .என்று ஏற்றுக் கொண்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்தவர் . செல்வாக்கிலும் பதவியிலும் கோலோச்சி இருந்த காலத்தில் ,தன் சொந்த ஊரான முடச்சிக்காட்டில்  தனக்கென்று ஒரு வீடு கூட கட்டிக் கொள்ளாமல் பேராவூரணியை கட்டியெழுப்புவதிலும் பேராவூரணி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதிலும் முழு கவனம் செலுத்தியவர் . பேராவூரணி தொகுதியில் மருத்துவமனை விரிவாக்கம் ,புதிய பேருந்து வழித்தடம், ப...